மேலும் அறிய

Ponniyin Selvan: "இப்படியெல்லாம் பண்ணிட்டு ஷூட்டிங் வராதீங்க.." கார்த்தியிடம் கறாராக பேசிய மணிரத்னம்..!

Karthi: பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ள நிலையில், அப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்றை நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படம், ரசிகர்களிடையே பெரும் வரவேறப்பினை பெற்றது. இதைத்தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமும் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது. அதற்கான ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, பெங்களூருவில் நடைப்பெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது, படத்தில் வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்தி தனது கதாப்பாத்திரம் குறித்த சுவாரஸ்யமான செய்தியை பகிர்ந்து காெண்டார். 

“புத்தகத்தை படித்து விட்டு..”

பொன்னியின் செல்வன் படத்தில் மிக முக்கிய கதாப்பாத்திரங்களுள் ஒன்று, வல்லவராயன் வந்தியத்தேவன். இந்த கதாப்பாத்திரத்தை நன்கு புரிந்து கொள்வதற்காக பொன்னியின் செல்வன் புத்தகம் மட்டுமல்லாது வேறு சில புத்தகங்களையும் கார்த்தி படித்தாராம். தான், வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் நடித்தது குறித்து பெங்களூருவில் நடைப்பெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கார்த்தி பகிர்ந்து கொண்டார்.

அப்போது, வந்தியத்தேவன் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் புத்தகத்தை முழுமையாக படித்திருக்க வேண்டும் என்றும், 3000 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை 300 பக்க கதை கொண்ட படமாக சுருக்கியது தனக்கு மிகவும் கடினமாக இருந்ததாகவும் கூறினார். 


Ponniyin Selvan:

மணிரத்னமிடம் மாட்டிக்கொண்ட கார்த்தி!

ஒவ்வொரு முறை படப்பிடிப்பிற்கு வருவதற்கு முன்பும், படத்தின் ஸ்கிரிப்டையும் புத்தகத்தில் உள்ள சீனையும் படித்து விட்டுத்தான் கார்த்தி படப்பிடிப்பிற்கே செல்வாராம். அப்படி ஒரு முறை செல்லும் போது, படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு காட்சி குறித்து மணிரத்னமிடம் கார்த்தி சந்தேகம் கேட்டாராம். இதைக்கேட்ட இயக்குநர், “இது புத்தகத்தில் இடம் பெற்ற காட்சியா, அல்லது ஸ்கிரிப்டில் உள்ள காட்சியா?” என கேட்பாராம். சில சமயங்களில், “புத்தகம் படிப்பதை நிறுத்திவிட்டு ஸ்கிரிப்டை படி..” என கார்த்தியிடம் மணிரத்னம் கூறுவாராம். இப்படி பல சமயங்களில் புத்தகத்தை படித்து விட்டு இயக்குநரிடம் மாட்டிக்கொண்டுள்ளதாக, கார்த்தி பெங்களூருவில் நடைப்பெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 

கரிகாலச்சோழன் குறித்து கார்த்தி:

கார்த்தி நடித்துள்ள வந்தியத்தேவன் கதாப்பாத்திரம், பல ஊர்களுக்குச் சென்று பல தேசத்து மக்களுடன் உரையாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதை ஆழ்ந்து புரிந்து கொள்ள சில பயணக்கட்டுரைகளையும் சிலப்பதிகாரத்தையும் படித்ததாக கார்த்தி கூறினார்.

தொடர்ந்து பேசிய கார்த்தி, கரிகாலச்சோழன் குறித்தும் பேசினார் தான் சிறுவயதில் கரிகாலச்சோழன் குறித்த கதைகளை கேட்டபோது அவரை வெறும் வீரம் நிறைந்த இளவரசன் என்றுதான் நினைத்ததாகவும் ஆனால், இப்போது புத்தகத்தை படித்தவடன்தான் அவர் ஒரு அழகான காதலர் என்பதை புரிந்து கொண்டேன் எனவும் கூறினார். மேலும்,  நீங்களும் புத்தகத்தை படித்தால், கரிகாலச்சோழன் உண்மையிலேயே யார் என்பதை புரிந்து கொள்வீர்கள் என்றும் கூறினார். நடிகர் விக்ரமும் பொன்னியின் செல்வன் புத்தகங்களை படித்ததாக கார்த்தி குறிப்பிட்டார். 


Ponniyin Selvan:

பொன்னியில் செல்வன் 2 ரிலீஸிற்கு ரெடியா மக்களே?

சென்னையில், ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கிய சோழர்களில் ப்ரமோஷன் பயணம், வரும் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கோவை, டெல்லி, கொச்சின், மும்பை, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட முக்கியமான நகரங்களில் படத்திற்கான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என மொத்தம் ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. படக்குழுவின் ப்ரமோஷன் பணிகளால், படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget