சமூகத்தின் இருண்ட பக்கத்தை பேசுகிறது மாரீசன்...புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன்
Kamalhaasan on Maareesan : வடிவேலு ஃபகத் ஃபாசில் நடித்துள்ள மாரீசன் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்

மாரீசன்
சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வடிவேலு ஃபகத் ஃபாசில் இணைந்து நடித்துள்ள மாரீசன் திரைப்படம் ஜூலை 25 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. மாமன்னன் படத்தைத் தொடர்ந்து இருவரும் இணைந்து நடிக்கும் படம் மாரீசன் என்பதால் இந்த படத்திற்கு ரசிகர்களிடம் பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மாரீசன் படத்தின் சிறப்பு திரையிடல் முடிந்து படத்திற்கு விமர்சகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இப்படியான நிலையில் நடிகர் கமல்ஹாசன் மாரீசன் படத்தை பார்வையிட்டு படத்தை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்
மாரீசன் பற்றி கமல்ஹாசன்
தனது எக்ஸ் பக்கத்தில் மாரீசன் படத்தை பற்றி கமல் இப்படி கூறியுள்ளார் " மாரீசன் படத்தைப் பார்த்தேன். நகைச்சுவைக்கும் அழுத்தமான கதை சொல்லலுக்கும் இடையில் படம் இயல்பாக பிண்ணப்பட்டிருக்கிறது. இப்படத்தின் கலை நேர்த்தி என்னை பல இடன்களில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. இந்த அற்புதமான படைப்பிற்காக படக்குழுவினருடன் பேசி என்னுடைய பாராட்டை தெரிவித்தேன். நகைச்சுவைக்குப் பின் மனித உணர்ச்சிகளை பற்றியும் சமூகத்தின் சில இருண்ட உண்மைகளையும் ஒரு தெளிவான பார்வை முன்வைக்கிறது மாரீசன். ஒரு படைப்பாளியாகவும் ரசிகனாகவும் நான் இந்த மாதிரியான ஆத்மார்த்தமான புதுமுயற்சிகளை நோக்கியே ஈர்க்கப்படுகிறேன்" என அவர் கூறியுள்ளார்
Watched Maareesan - a film that dances effortlessly between wit and depth, leaving me laughing, thinking, and admiring its craft. Had a wonderful conversation with the team to congratulate them on this delightful creation.
— Kamal Haasan (@ikamalhaasan) July 24, 2025
Beneath its humour lies a socially conscious lens on…
மாரீசன் கதை
திருட்டு கேஸில் ஜெயிலில் இருந்துவிட்டு விடுதலையாகிறான் தயாளன் (ஃபகத் ஃபாசில்). ஒரு சின்சியரான திருடன் என ஃபகத் ஃபாசிலின் கதாபாத்திரத்தை சொல்லலாம். ஒரு விட்டில் திருடச் செல்லும் போது அங்கு இருக்கும் வேலாயுதம்(வடிவேலுவை) பார்க்கிறான். தனக்கு அல்ஸைமர்ஸ் என்கிற ஞாபக மறதி இருப்பதாகவும் தன்னை தன் மகன் கட்டிப்போட்டு வைத்திருப்பதாகவும் வடிவேலு கூறுகிறார். தன்னை காப்பாற்றினால் 25 ஆயிரம் பணம் தருவதாக சொல்கிறார். ஆனால் வேலாயுதத்திடம் 25 லட்சம் இருப்பதை தெரிந்துகொள்ளும் தயா அந்த மொத்த பணத்தையும் கொள்ளையடிக்க திட்டமிடுகிறான். பைக்கிலேயே அவரை நாகர்கோயிலில் இருந்து திருவண்ணாமலைக்கு கொண்டு செல்வதாக கூறி இருவரும் பயணிக்கின்றனர். உண்மையில் வடிவேலுவுக்கு அல்ஸைமர்ஸ் இருக்கிறதா. அவர் திருவண்ணாமலைக்கு ஏன் செல்கிறார்? அவரிடம் இருந்து பணத்தை தயாளன் கொள்ளையடித்தானா என்பதே மாரீசன் படத்தின் கதை



















