"பணம் தேவை.. வீட்ல கூட அண்ணன் பேச்சைத்தான் கேப்பாங்க.." பிரபுதேவா தம்பி உருக்கம்!
பணம் மிகவும் அவசியம் என்றும், வீட்டில் தனது சகோதரர்களின் பேச்சையே தனது அம்மா கேட்பார் என்றும் நடிகர், நடன இயக்குனர் பிரபுதேவா, ராஜுசுந்தரத்தின் தம்பி நாகேந்திர பிரசாத் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரபலமான நடன இயக்குனர் பிரபுதேவா. இவரது அண்ணன் ராஜுசுந்தரம். இவர்கள் இருவரும் இந்தியாவின் பிரபலமான நடன இயக்குனர்கள். இவர்களது தம்பி நாகேந்திர பிரசாத்.
இவரும் நடன கலைஞர் என்றாலும் இவரது சகோதரர்கள் அளவிற்கு பெரிய அளவு பிரபலம் ஆகவில்லை. ஒருமுறை இவர் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது,
பணம் ரொம்ப தேவை:
பணம் ரொம்ப தேவை. இப்ப எங்க வீட்ல எங்க அண்ணன் பேச்சதான் எங்க அம்மா கேப்பாங்க. பெரியண்ணன் பேச்சையும் கேப்பாங்க. அவருதானே நிறைய சம்பாதிக்குறாரு. வீட்டுக்குள்ளேயே ஒரு இது இருக்கு. ஒருவேளை நான் நினைக்குறது கூட தப்பா இருக்கலாம்.
பிரபு அண்ணே சின்ன வயசுலேயே 14 வயசுலேயே போயிட்டாரு. பெரியண்ணா வந்தாலே ஒரு மரியாதை. இங்கிலாந்து போயிட்டு 5 வருஷம் இருந்தேன். மாஸ்டர் இன் கொரியோகிராஃப் பண்ணேன். கொலம்பியா பிக்சர்ஸ்க்கு லொகேஷன் மேனஜேரா இருந்தேன். பிளஸ்னு நினைக்குறேன். மைனசும் இருக்கிறது.
வருத்தம் இருக்குது:
அந்த கேப்லதான் இங்க பில்லிங் ஆகிடுச்சு. எல்லாரும் டக்கு, டக்குனு. ஆர்யா, ஜீவா அப்புறம் நிறைய பேரு. அத வந்து நான் விட்டுடேனு ஃபீல் பண்றேன் இப்போ வரைக்கும். வந்த உடனே அண்ணனோட வெடி படத்துக்கு அசோசியேட் டைரக்டரா ஒர்க் பண்ணேன்.
எங்க அப்பா பேர்ல எம் சுந்தரம் மாஸ்டர்ஸ் ஒரு டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிச்சேன். அதுதான் எனக்கு திரும்பவும் ஆக்டிவா பண்ணலாம்னு கொடுத்துச்சு.
இவ்வாறு அவர் கூறினார். இந்த நேர்காணல் தற்போது வைரலாகி வருகிறது.
நடிப்பில் இடைவெளி:
தற்போது 50 வயதாகிய இவர் தொட்டா சினுங்கி படம் மூலமாக அறிமுகமானார். குஷி படத்தில் இவருக்கு நல்ல கதாபாத்திரம் அளிக்கப்பட்டது. சித்ரா, சாக்லேட், 123, மனசெல்லாம் நீனே, முத்தம், கில்லி ஆகிய படங்களில் நடித்தவர் அதன்பின்பு நடிப்பதற்கு மிக நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டார். அந்த இடைவெளியில் அவர் வெளிநாடு சென்றுவிட்டார்.
பின்னர், 2017ம் ஆண்டு போகன் படம் மூலமாக 13 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வந்தார். பிரபுதேவா நடன இயக்குனராக இருந்தாலும் ஒரு நடிகராகவும் அவர் வெற்றிகரமாக உலா வந்தார். தனது சகோதரர் போல உலா வர முடியவில்லை என்ற வேதனையையே அவர் வெளிப்படுத்தியுள்ளார். கடைசியாக பேட்டரி என்ற படத்தில் நடித்தார்.
தற்போது நடன பள்ளியை நடத்தி வருவதுடன் அவ்வப்போது படங்களுக்கும் பணியாற்றி வருகிறார். ஏராளமான படங்களில் தனது சகோதர்களுடன் இணைந்தும் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார்.






















