மேலும் அறிய

Cinema Headlines: தொடங்கியது ரஜினிகாந்தின் கூலி! குபேரா ராஷ்மிகா மந்தனா ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் - சினிமா செய்திகள் இன்று

July 5 Cinema Headlines : ரஜினிகாந்தின் கூலி பட படப்பிடிப்பு முதல் தனுஷின் குபேரா படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் ஃபர்ஸ்ட் லுக் வரை இன்றைய சினிமா செய்திகளைப் பார்க்கலாம்

கூலி படப்பிடிப்பு துவக்கம்

லியோ படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் 171 ஆவது படமான கூலி படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருது இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். கூலி படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளதாக சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது

குபேரா ராஷ்மிகா மந்தனா ஃபர்ஸ்ட் லுக்

சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழியில் நடித்து வரும் படம் குபேரா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா , நாகர்ஜூனா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைக்கிறார். தனுஷ் மற்றும் நாகஜூனாவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதைத் தொடர்ந்து தற்போது குபேரா படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. 

அண்ணாமலை பயோபிக்

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளது என்ற தகவல் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. .அண்ணாமலையின்  கேரக்டரில் நடிகர் விஷால் நடிக்க கூடும் என்ற பேச்சுக்கள் அடிபடுகின்றன. அதற்கு காரணம் நடிகர் விஷாலுக்கும் ஏற்கனவே கசப்பான அரசியல் அனுபவம் உள்ளது. இடைத்தேர்தலில் போது ஆர்.கே. நகர் தொகுதியில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இருப்பினும் 2026 சட்டமன்ற தேர்தலில் நான் மீண்டும் போட்டியிடுவேன் என அவரின் அரசியல் ஆசையை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.  அதே போல பல மேடைகளிலும் நடிகர் விஷால் ஐ.பி.எஸ் பற்றி பேசியுள்ளது அவரின் இந்த பிளான் பற்றி தான் இருக்குமோ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

மருத்துவர் விமர்சனத்திற்கு சமந்தா விளக்கம்

தவறான மருத்துவ ஆலோசனை வழங்கியதாக நடிகை சமந்தாவை பிரபல மருத்துவர் கடுமையாக விமர்சித்திருந்தார். இப்படியான நிலையில்  நடிகை சமந்தா நீண்ட விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். சமீபத்தில் வைரஸ் பாதிப்புகளுக்கு ஹைட்ரஜன் பெராக்சைட் நெபுலைசேஷன் (Hydrogen Peroxide Nebulisation) எனப்படும் சிகிச்சையை பயன்படுத்துவதாக நடிகை சமந்தா தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் கல்லீரல் நிபுணரும் பிரபல மருத்துவருமான டாக்டர் பிலிப்ஸ் என்பவர் நடிகை சமந்தாவை கடுமையாக சாடி, தன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

“கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் பல்வேறு வகையான மருந்துகளை எடுக்க வேண்டியிருந்தது.. நான் என்னிடம் அறிவுறுத்தப்பட்ட அனைத்து சிகிச்சை முறைகளையும் முயற்சித்தேன்.  மிகுந்த தகுதி வாய்ந்த நிபுணர்களால் இந்த மருந்துகள் அறிவுறுத்தப்பட்டு, பலவற்றை நானாகவே ஆய்வு செந்த பிறகு, என்னைப் போன்ற ஒரு சாதாரண நபருக்கு இவையெல்லாம் சாத்தியமாகி உள்ளது. இந்த சிகிச்சைகள் பலவும் மிகவும் விலை உயர்ந்தவை. நான் இவற்றுக்கெல்லாம் செலவு செய்ய முடிவதால், நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதை எப்போதும் நினைத்துக் கொள்வேன். இவற்றை செய்ய முடியாதவர்களை எண்ணி வருந்துவேன். 

ஆனால் இந்த வழக்கமான சிகிச்சைகள் நீண்ட காலத்துக்கு எனக்கு சிறப்பாக செய்யவில்லை. இந்த சிகிச்சை முறை எனக்கு வேலை செய்யாமல் இருக்கலாம், ஆனால் மற்றவர்களுக்கு நன்றாக வேலை செய்ய வாய்ப்புள்ளது என்று நான் நம்புகிறேன். இந்த இரண்டு காரணிகளும் என்னை மாற்று சிகிச்சை முறைகள் பற்றி படிக்க வழிவகுத்தன. மேலும் பல சோதனை முயற்சிகள், தோல்விகளுக்குப் பிறகு, என் உடலுக்கு நன்றாக வேலை செய்யும் சிகிச்சை முறையை நான் கண்டறிந்தேன். இந்த பாரம்பரிய மருத்துவத்துக்கான செலவு, நான் ஏற்கெனவே செலவு செய்த வழக்கமான மருத்துவ செலவை விடக்குறைவு.” என்று சமந்தா தனது விளக்கத்தில் கூறியுள்ளார்.

Samantha: மருத்துவ அறிவில்லாமல் ஆலோசனை, ஜெயிலில் தள்ள சொன்ன மருத்துவர்.. சமந்தா நீண்ட விளக்கப் பதிவு!

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முதலமைச்சருக்கு டீ தான் வாங்கி கொடுக்கிறார் சேகர் பாபு - எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சருக்கு டீ தான் வாங்கி கொடுக்கிறார் சேகர் பாபு - எடப்பாடி பழனிசாமி
எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கையா ? -  அமைச்சர் துரை முருகன்
எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கையா ? - அமைச்சர் துரை முருகன்
India vs New Zealand 1st Test :தொடர்ந்து 5 வீரர்களும் டக் அவுட் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து 5 வீரர்களும் டக் அவுட் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
TN Rain Updates: இந்த பகுதி மக்கள் உஷார்.! நாளை 6, நாளை மறுநாள் 14 மாவட்டங்களில் கனமழை இருக்கு.!
இந்த பகுதி மக்கள் உஷார்.! நாளை 6, நாளை மறுநாள் 14 மாவட்டங்களில் கனமழை இருக்கு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!Ponmudi Inspection | ”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்.INDIA Vs BJP | பலத்தை காட்டுவாரா தாக்கரே?அடித்து ஆடும் I.ND.I.A! மகாராஷ்டிராவில் வெற்றி யாருக்கு?Priyanka Gandhi Wayanad : தெற்கில்  பிரியங்கா ராகுலின் மாஸ்டர் ப்ளான் கெத்து காட்டும் காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதலமைச்சருக்கு டீ தான் வாங்கி கொடுக்கிறார் சேகர் பாபு - எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சருக்கு டீ தான் வாங்கி கொடுக்கிறார் சேகர் பாபு - எடப்பாடி பழனிசாமி
எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கையா ? -  அமைச்சர் துரை முருகன்
எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கையா ? - அமைச்சர் துரை முருகன்
India vs New Zealand 1st Test :தொடர்ந்து 5 வீரர்களும் டக் அவுட் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து 5 வீரர்களும் டக் அவுட் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
TN Rain Updates: இந்த பகுதி மக்கள் உஷார்.! நாளை 6, நாளை மறுநாள் 14 மாவட்டங்களில் கனமழை இருக்கு.!
இந்த பகுதி மக்கள் உஷார்.! நாளை 6, நாளை மறுநாள் 14 மாவட்டங்களில் கனமழை இருக்கு.!
புதுச்சேரியில் புதிய கணக்கு போடும் விஜய்.. எம்ஜிஆர் சாதித்ததை, விஜயால் சாதிக்க முடியுமா ? என்ன திட்டம் ?
புதுச்சேரியில் புதிய கணக்கு போடும் விஜய்.. எம்ஜிஆர் சாதித்ததை, விஜயால் சாதிக்க முடியுமா ? என்ன திட்டம் ?
சுடசுட பிரியாணி.! தூய்மை பணியாளர்களுக்கு, பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்.!
சுடசுட பிரியாணி.! தூய்மை பணியாளர்களுக்கு, பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்.!
IND vs NZ:  இந்திய பேட்டிங்கை நிலைகுலைத்த 2 கே கிட்! யார் இந்த ஓ ரோர்கி?
IND vs NZ: இந்திய பேட்டிங்கை நிலைகுலைத்த 2 கே கிட்! யார் இந்த ஓ ரோர்கி?
Breaking News LIVE 17th oct 2024: நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
Breaking News LIVE 17th oct 2024: நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
Embed widget