மேலும் அறிய

தலைமையை மீறி கூட்டணிக்கட்சி வேட்பாளர்களைத் தோற்கடித்த திமுக வேட்பாளர்கள் யார்?- முழு விவரம்

திமுக தலைமையை மீறி மறைமுகத் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்கள் யார் என்ற தகவலைப் பார்க்கலாம்.

திமுக தலைமையை மீறி மறைமுகத் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்கள் யார் என்ற தகவலைப் பார்க்கலாம்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. பெரும்பாலான நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியிருந்தது. வெற்றிபெற்ற அனைவரும் மார்ச் 2-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். 

அதில் மாநகராட்சி மேயர் பொறுப்புகள் அனைத்தையும் திமுக எடுத்துக்கொண்டதோடு, துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத்தலைவர் ஆகிய பொறுப்புகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியிருந்தது. இதையடுத்து, மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர்,  நகராட்சித் தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது. 

இன்று காலை தேர்தல் ஆரம்பித்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்ட இடங்களிலும் திமுகவினரே தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால், திமுக கூட்டணிக் கட்சியினர் பல இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர் புலியூர் பேரூராட்சித் தலைவர் பதவியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கி திமுக தலைமை அறிவித்திருந்தது. புலியூர் பேரூராட்சித் தலைவர் வேட்பாளராக க.கலாராணி என்பவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தார். இன்று தேர்தல் நடைபெற்ற நிலையில், கலாராணி மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால், திமுகவினர் அவரது பெயரை முன்மொழியாமல் திமுகவைச் சேர்ந்த 3ஆவது வார்டு உறுப்பினர் புவனேஸ்வரியைத் தலைவராக முன்மொழிந்தனர். இதனால், கலாராணி தோல்வியடைந்தார்.

கோவை கருமத்தம்பட்டி நகராட்சித் தலைவர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அந்தக் கட்சி வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக சூலூர் ஒன்றியப் பொறுப்பாளர் மனோகரன் 22 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சித் தலைவர் பதவியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் திமுக ஒதுக்கியிருந்தது. ஆனால் இன்று திமுகவினர் தலைவர் பதவிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்து தலைவராக அறிவித்துக் கொண்டனர். 

நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவி விசிகவிற்கு ஒதுக்கப்பட்டது. அதையடுத்து நகராட்சித் தலைவர் வேட்பாளராக கிரிஜா திருமாறன் என்பவரை அறிவித்தது வி.சி.க. ஆனால் திமுக வேட்பாளர் ஜெயந்தி ராதாகிருஷ்ணனும் நகராட்சித் தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்தார். இதில், 23 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். கிரிஜா திருமாறன் 3 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியின் தலைவர் பதவியை வி.சி.கவுக்கு ஒதுக்கீடு செய்து திமுக அறிவித்தது. இந்தப் பதவிக்கு சின்னவேடி என்பவரை வேட்பாளராக வி.சி.க அறிவித்தது. ஆனால் இன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலின்போது இவருக்கு எதிராக 13வது வார்டில் வெற்றிபெற்ற திமுக உறுப்பினர் சாந்தி புஷ்பராஜ் என்பவர் மனுதாக்கல் செய்தார். சின்னவேடி 7 வாக்குகள் பெற்ற நிலையில், சாந்தி புஷ்பராஜ் அவரை விட ஒரு வாக்கு அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

தேனி அல்லிநகரம் நகராட்சித் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த நகராட்சியை, காங்கிரசுக்கு ஒதுக்கி திமுக அறிவித்திருந்தது. நகராட்சித் தலைவர் வேட்பாளராக சற்குணம் என்பவரை காங்கிரஸ் அறிவித்தது. ஆனால், தேர்தல் நாளான இன்று அவருக்கு எதிராக 10வது வார்டில் வெற்றிபெற்ற திமுகவைச் சேர்ந்த ரேணுப்பிரியா மனுதாக்கல் செய்தார். இதனால், சற்குணம் தேர்தலைப் புறக்கணிக்க ரேணுப்பிரியா வெற்றிபெற்றார்.

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சித் தலைவர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் பேரூராட்சித் தலைவர் அருள்ராஜின் மனைவி செல்வமேரி அருள்ராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் தேர்தல் நாளான இன்று, ஸ்ரீபெரும்புதூர் நகர திமுக செயலாளர் சதீஷ் குமாரின் மனைவி சாந்தி சதீஷ் குமார் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். மொத்தம் 11 வாக்குகள் பெற்று சாந்தி சதீஷ்குமார் வெற்றி பெற, 4 வாக்குகள் மட்டுமே பெற்று செல்வமேரி அருள்ராஜ் தோல்வியடைந்தார்.

திமுகவினரின் இதுபோன்ற செயல்களால் அதிர்ச்சியடைந்த வி,சி.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் திமுகவினர் தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாகக் கூறி சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்துத் கருத்து தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ’’முதலமைச்சரின் ஆணையையும் மீறி கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்து கூட்டணி அறத்தைக் காத்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளுக்கு சிலவற்றில் திமுகவினர் போட்டியிட்டு வென்றது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 

பின்பு திமுக தலைவருமான முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன். கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்ற திமுகவினர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். தலைமை அறிவித்ததை மீறி போட்டியிட்டு வென்றவர்கள் என்னை நேரில் சந்திக்க வேண்டும்'' எனத் திமுகவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TVK Vijay: சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
TVK Vijay Speech: தமிழகத்தை காப்பாற்றுவது திமுகவா? - இனி நான் தான்.. தஞ்சையில் விஜய் பேச்சு!
TVK Vijay Speech: தமிழகத்தை காப்பாற்றுவது திமுகவா? - இனி நான் தான்.. தஞ்சையில் விஜய் பேச்சு!
TVK Vijay: விஜய் ஜெயிக்க மாட்டார்.. அவருக்கு பெண்கள் ஆதரவு தருவது வேதனை.. ரவிகுமார் எம்.பி., விமர்சனம்!
TVK Vijay: விஜய் ஜெயிக்க மாட்டார்.. அவருக்கு பெண்கள் ஆதரவு தருவது வேதனை.. ரவிகுமார் எம்.பி., விமர்சனம்!
Edappadi Palaniswami: சசிகலாவுக்கு கூட்டணியில் இடமா?.. காட்டமாக பதிலளித்த எடப்பாடி பழனிசாமி!
Edappadi Palaniswami: சசிகலாவுக்கு கூட்டணியில் இடமா?.. காட்டமாக பதிலளித்த எடப்பாடி பழனிசாமி!
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
H Raja on Vijay:
H Raja on Vijay: "கட்டுப்படுத்துங்க விஜய்... ரொம்ப கவலையா இருக்கு.." அட்வைஸ் கொடுத்த எச்.பாஜக
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
TVK Vijay: சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
Embed widget