மேலும் அறிய

Vikravandi by election: தாம்பூல தட்டில் வெற்றிலை பாக்கு பழம் 20 ரூபாய் நோட்டு... வேட்புமனுத்தாக்கலில் நடந்த வினோதம்

ஆர்கே நகரில் 20 ரூபாய் நோட்டுகள் எப்படி பயன்படுத்தபட்டது போல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பயன்படுத்த கூடாது - காந்தியவாதி ரமேஷ்

விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் காந்தியவாதி ரமேஷ் அசோக சக்கர சின்னத்தை தாம்பூல தட்டில் வெற்றிலை பாக்கு பழம் 20 ரூபாய் நோட்டு, 100 ரூபாய் நோட்டு 500 ரூபாய் நோட்டுகளை எடுத்து வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட மனு தாக்கல் 24 ஆம் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்பு மனுக்கள் 26 ஆம் தேதி திரும்ப பெறுவதற்கான நாளாக அறிவிக்கபபட்டு இடைத்தேர்தலுக்கான வாக்குபதிவு ஜூலை 10 ஆம் தேதி நடைபெறுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இறுதி நாளான நேற்று இதுவரை 35 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம்  நாமகல்லலை சார்ந்த காந்தியவாதி ரமேஷ் 13 வது முறையாக மனு தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து பேட்டியளித்த காந்தியவாதி ரமேஷ் தேர்தலில் ஜனநாயகத்தை நிலை நிறுத்தவும் நேர்மையாக தேர்தல் நடைபெற வலியுறுத்தி அசோக சக்கர சின்னத்தை தாம்பூல தட்டில்  வெற்றிலை பாக்கு பழம் 20 ரூபாய் நோட்டு, 100 ரூபாய் நோட்டு 500 ரூபாய் நோட்டுடன் எடுத்து வந்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தார். ஆர்கே நகரில் 20 ரூபாய் நோட்டுகள் எப்படி பயன்படுத்தபட்டது போல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பயன்படுத்த கூடாது என்பதை தெரிவிக்கும் வகையில் 20 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் தொகையாக பயன்படுத்த கொண்டு வந்ததாகவும் காந்தி வேடமிட்டு வேட்பு மனு தாக்கலை செய்ததாக கூறினார்.

வேட்புமனு தாக்கல் நிறைவு 

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு கடந்த பத்தாம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 14ஆம் தேதி தொடங்கி நேற்று மாலை 3 மணியோடு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் மாலை 3 மணி வரை திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உள்பட  64 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இவர்களில் தேர்தல் மன்னன் பத்மராஜன் 242வது முறையாகவும், அக்னி ஆழ்வார் 51வது முறையாகவும். நூர் முகமது 44 வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வியும் இறுதி நாளான  நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

வருகின்ற 24ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து 26 ஆம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான இறுதி நாளாகும் அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அடுத்த மாதம் பத்தாம் தேதி தேர்தலும், 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. மத்திய பிரதேசத்தில் பதற்றம்!
இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. மத்திய பிரதேசத்தில் பதற்றம்!
TN Assembly Session LIVE: சென்னை மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் - பேரவையில் கே.என்.நேரு
TN Assembly Session LIVE: சென்னை மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் - பேரவையில் கே.என்.நேரு
Astrology: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் - விஷத்தால் உயிர் போகும்  ஜாதகம் எது? கிரகம் சொல்வது என்ன?
Astrology: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் - விஷத்தால் உயிர் போகும் ஜாதகம் எது? கிரகம் சொல்வது என்ன?
தண்ணீர் பஞ்சத்தில் டெல்லி.. உதவ மறுக்கும் ஹரியானா.. தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்!
தண்ணீர் பஞ்சத்தில் டெல்லி.. உதவ மறுக்கும் ஹரியானா.. தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  : Suriya on Kallakurichi Kallasarayam: ”தமிழக அரசுக்கு கண்டனம்! 20 ஆண்டுகளாக அவலம்” கொந்தளித்த சூர்யா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. மத்திய பிரதேசத்தில் பதற்றம்!
இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. மத்திய பிரதேசத்தில் பதற்றம்!
TN Assembly Session LIVE: சென்னை மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் - பேரவையில் கே.என்.நேரு
TN Assembly Session LIVE: சென்னை மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் - பேரவையில் கே.என்.நேரு
Astrology: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் - விஷத்தால் உயிர் போகும்  ஜாதகம் எது? கிரகம் சொல்வது என்ன?
Astrology: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் - விஷத்தால் உயிர் போகும் ஜாதகம் எது? கிரகம் சொல்வது என்ன?
தண்ணீர் பஞ்சத்தில் டெல்லி.. உதவ மறுக்கும் ஹரியானா.. தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்!
தண்ணீர் பஞ்சத்தில் டெல்லி.. உதவ மறுக்கும் ஹரியானா.. தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்!
Watch Video: அன்று சந்திரபாபுவின் வீடு, இன்று ஜெகன் மோகனின் அலுவலகம்- ஆந்திராவில் அனல்பறக்கும் பழிவாங்கும் அரசியல்?
Watch Video: அன்று சந்திரபாபுவின் வீடு, இன்று ஜெகன் மோகனின் அலுவலகம்- ஆந்திராவில் அனல்பறக்கும் பழிவாங்கும் அரசியல்?
திருச்சியில் நள்ளிரவில் ஆட்சியர் - எஸ்பி அதிரடி நடவடிக்கை - 250 லிட்டர் கள்ளச்சாரயம் அழிப்பு
திருச்சியில் நள்ளிரவில் ஆட்சியர் - எஸ்பி அதிரடி நடவடிக்கை - 250 லிட்டர் கள்ளச்சாரயம் அழிப்பு
Ajithkumar: விஜய்க்கு எதிராக மாஸ்டர் பிளான் போடும் அஜித்.. கொளுத்திப்போட்ட ப்ளூ சட்டை மாறன்!
விஜய்க்கு எதிராக மாஸ்டர் பிளான் போடும் அஜித்.. கொளுத்திப்போட்ட ப்ளூ சட்டை மாறன்!
கள்ள சாராயமோ! நல்ல சாராயமோ!  தமிழ்நாட்டுக்கு மதுவே வேண்டாங்க! விட்டுடுங்க! சௌமியா அன்புமணி..
கள்ள சாராயமோ! நல்ல சாராயமோ! தமிழ்நாட்டுக்கு மதுவே வேண்டாங்க! விட்டுடுங்க! சௌமியா அன்புமணி..
Embed widget