TVK Vijay Campaign:"என் மேல பழியப் போடுறீங்களே..." - மேடையிலேயே பொங்கிய விஜய்! இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் பரபரப்பு.
TVK Vijay Campaign Today: நாங்க கரூர் விஷயத்துல அரசியல் பண்ணமாட்டோம் வீடியோ எல்லாம் வெளியிட்டுவிட்டு, சட்டசபையில் போய் நான் லேட்டா வந்தேன் என் மேல பழியை தூக்கி போடுறீங்க என்று விஜய் பேசினார்

கரூர் விவகாரத்தில் தன் மீது முதல்வர் ஸ்டாலின் வேண்டுமென்றே பழியை போட்டதாக தவெக தலைவர் விஜய் ஆவேசமாக பேசினார்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வருகிற வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், இன்று ,மாலை 6 மணியுடன் தமிழ்நாட்டிற்கான தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது.இதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இன்று சென்னையில் 3 தொகுதிகளில் ரோடு ஷோ நடத்திய தவெக தலைவர் விஜய் சென்னை நந்தனத்தில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் 5000 பேர் வரை அனுமதிக்கப்பட்ட கூட்ட அரங்கில் இறுதி பிரச்சாரம் மேற்கொண்டார்.
கரூர் விவகாரம் குறித்து பேசிய விஜய்:
தனது இறுதி பிரச்சார கூட்டத்தில் விஜய் கரூர் விவகாரத்தில் தன் மீது பழிப்போட்டது குறித்து ஆவேசமாக பேசியதாவது, “நான் கரூர் விஷயத்துக்கு வரேன், கரூர் விஷயத்துல என்ன நடந்தது என்று அந்த மக்கள்கிட்ட கேட்ட புட்டு புட்டு வைப்பாங்க, என் மேலே பழியத்தூக்கி போடுறீங்க. நாங்க கரூர் விஷயத்துல அரசியல் பண்ணமாட்டோம் என்றுஇ வீடியோ எல்லாம் வெளியிட்டுவிட்டு, சட்டசபையில் போய் நான் லேட்டா வந்தேன் என் மேல பழியை தூக்கி போடுறீங்க.
மேலும் ஆக்ரோஷமாக பேசிய விஜய் “நானா லேட்டா வந்தேன், போலீஸ் கொடுத்த டைம்ல நான் அங்க வந்தேன், நாமக்கலில் இருந்து கரூர் வர வழியில் உள்ள மக்களை நான் எப்படி அம்போன்னு விட்டுவிட்டா வர முடியும், நான் நாமக்கலில் இருந்து கரூருக்கு வந்ததை உலகமே லைவ்ல பாத்துட்டு இருந்தாங்க. வாய் கூசாமல் என் மேல பழியை போடுறீங்க, ஒரு மன்சாட்சி வேணாம். சரி நீங்க தப்பே பண்ணாலையே இத்தனை நாளா கரூரில் போட்டியிட்ட உங்க அடிமை. இப்போ கோயம்புத்தூரில் ஏன் போட்டியிடனும் என்று விஜய் சரமாரியாக கேள்வி கேட்டார்”
ட்ரெண்டிங் செய்திகள்




















