குக்கர் சின்னத்துக்கு வாக்கு கேட்ட ஜெயலலிதா? வேட்புமனு தாக்கல் செய்த தமிழ் கடவுள் முருகன் - திருப்பத்தூர் தேர்தல் அட்ராசிட்டி
இரட்டை இலை காண்பித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு குக்கர் சின்னத்திற்கு வாக்கு கேளுங்க எனக் கூறிய மாவட்ட செயலாளர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று, ஏராளாமானோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். குதிரை வண்டியில் வந்தும், முருகர் வேடமணிந்து வந்து வேட்புமனுவை தாக்கல் செய்த நிகழ்வுகள் திருப்பத்தூரில் அரங்கேறியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் மிகத் தீவிரமாக வேட்பு மனுதாக்கல் மற்றும் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ஞானசேகருக்கு ஒதுக்கப்பட்டது. இன்று அவர், வேட்பு மனுதாக்கல் செய்ய தனது கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றார்.
அப்போது முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் வேடம் அணிந்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்பது போல கையசைத்து வந்தனர். அப்போது பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவும் ஆன டி.கே.ராஜா கூட்டணியில் உள்ள குக்கர் ஜென்மத்தை காண்பிக்க வேண்டும் எனக் கூறினார். இதனால் ஜெயலலிதா வேடமணிந்த பெண் சிரித்துக்கொண்டே குக்கர் சின்னத்தை தூக்கி காண்பித்த சம்பவமும் அரங்கேறியது.
அதனைத் தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ டி.கே.ராஜா தன்னுடைய குதிரை வண்டியை ஓட்ட வேட்பாளர் ஞானசேகரன் அதில் அமர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றார். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
அதனைத் தொடர்ந்து வேட்பாளர் ஞானசேகர் நடத்தும் அலுவலர் வரதராஜனிடம் கூட்டணி கட்சியினருடன் வேட்பு மனு தாக்கல் செய்தார். மனுத்தாக்கலின்போது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது ஆணையிட்டு,தேர்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதாக அவர் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

முருகர் வேடம் அணிந்து சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்பு குட்டை பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் சுயேட்சை வேட்பாளராக திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்த நிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய முருகர் வேடம் அணிந்து திருப்பத்தூர் தேர்தல் நடத்தும் அலுவலர் வரதராஜனிடம் மனுதாக்கல் செய்தார். தமிழ் கடவுள் முருகன் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் நான் முருகர் வேடம் அணிந்து வேட்புமனு தாக்கல் செய்கிறேன் எனக் கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















