மேலும் அறிய
பறந்து வந்த செல்போன்.. அண்ணாமலை தலையில் விழுந்ததால், பிரச்சாரத்தி பரபரப்பு !
திருப்பத்தூரில் பூக்களுடன் பறந்த செல்போன் – அண்ணாமலை தலையில் ப் பரபரப்பு ஏற்பட்டது.

அண்ணாமலை தலையில் விழுந்த செல்போன்
Source : whatsapp
கட்சி நிர்வாகிகள் அண்ணாமலைக்கும் வேட்பாளர் திருமாறனுக்கும் மலர் மாலைகள் மற்றும் பூக்களை தூவி வரவேற்றனர்.
அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறனை ஆதரித்து, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பேருந்து நிலையம் முன்பு அவர் வருகை தந்தபோது, கட்சி நிர்வாகிகள் அண்ணாமலைக்கும் வேட்பாளர் திருமாறனுக்கும் மலர் மாலைகள் மற்றும் பூக்களை தூவி வரவேற்றனர்.
திடீரென பூக்களுடன் ஒரு செல்போனும் கூட்டத்திலிருந்து பறந்து வந்து
அப்போது திடீரென பூக்களுடன் ஒரு செல்போனும் கூட்டத்திலிருந்து பறந்து வந்து, அண்ணாமலையின் முகத்தில் பட்டு பிரச்சார வாகனத்தின் முன் விழுந்தது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அண்ணாமலை சிரித்த முகத்துடன், கீழே விழுந்த செல்போனை எடுத்து, அதை வீசிய நபரிடம் மீண்டும் ஒப்படைத்தார். இந்தச் சம்பவத்தால் அருகில் இருந்த வேட்பாளர் திருமாறன் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அண்ணாமலை, அவரின் முதுகில் தட்டிக் கொடுத்து நம்பிக்கை அளித்ததுடன், செல்போனை வீசிய நபருக்கு “தம்ஸ் அப்” காட்டினார். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion


















