தேர்தல் பரபரப்பு: 3 நாட்களில் இவ்வளவு கோடி ரூபாய் பணம் பறிமுதலா? அதிர்ச்சியில் அதிகாரிகள்
தமிழ்நாட்டில் மூன்று நாட்களில் ரூ.ரூ.42.65 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் - தலைமைத் தேர்தல் அதிகாரி அறிக்கை

3 நாட்களில் ரூ.42.65 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்
தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலான மூன்று நாட்களில் ரூ.ரூ.42.65 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: தற்போது நடைபெற்று வரும் தேர்தல் செலவினக் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பல்வேறு பிரிவுகளின் கீழ் அதிகாரிகள் கணிசமான அளவு பொருட்களைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 18 மார்ச் 2026 அன்றைய நிலவரப்படி, பறிமுதல் செய்யப்பட்ட மொத்த மதிப்பு ₹42.65 கோடி ஆகும். அதன் விவரங்கள் பின்வருமாறு:
ரொக்கம்: ₹2.37 கோடி
மதுபானம்: ₹0.18 கோடி
போதைப்பொருட்கள்: ₹2.88 கோடி
விலைமதிப்பற்ற உலோகங்கள்: ₹16.42 கோடி
இலவசங்கள் / பிற பொருட்கள்: ₹20.80 கோடி
தேர்தல் செலவின கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் அமலாக்க முகமைகள், சட்டவிரோதப் பணப் புழக்கம், வாக்காளர்களை கவர வழங்கப்படும் இலவசப் பொருட்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களின் விநியோகத்தைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வழிமுறைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
ட்ரெண்டிங் செய்திகள்



















