![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Punjab Election 2022 Result: பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல்: 9.30 மணி நிலவரம் என்ன?
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
![Punjab Election 2022 Result: பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல்: 9.30 மணி நிலவரம் என்ன? Punjab Election 2022 Result arvind kejriwal aam aadmi party leads morning trends Check leads trails punjab election Punjab Election 2022 Result: பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல்: 9.30 மணி நிலவரம் என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/10/cc49af3ae3155ec490fd77921eecf58b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளுக்கான தேர்தல் 7 பிப்ரவரி 10,14,20, 23, 27 ஆகிய தேதிகளிலும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளிலும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதேபோல், உத்தரக்காண்ட் மாநிலத்திலுள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதியும், பஞ்சாப் மாநிலத்திலுள்ள 117 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
தொடர்ந்து, மணிப்பூர் மாநிலத்திலுள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் பிப்ரவரி 28ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் மார்ச் 5ஆம் தேதியும் நடைபெற்றது. கோவா மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி நடைபெற்றது.
இந்தநிலையில், பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பஞ்சாபில் இன்று காலை 9. 30 மணி நிலவரப்படி, ஆம் ஆத்மி கட்சி 46 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. அடுத்ததாக காங்கிரஸ் 38 இடங்களிலும் அகாலி கூட்டணி 14 இடங்களிலும் பாஜக 4 இடங்களிலும் மற்றவை 2 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
#ElectionResultsWithABPNadu | பஞ்சாப்பில் ஆம் ஆத்மி முன்னிலை!https://t.co/wupaoCQKa2 | #Elections2022 #PunjabElections2022 #PunjabElections #PunjabElections #AAP pic.twitter.com/IHwjOjlMw6
— ABP Nadu (@abpnadu) March 10, 2022
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் தான் சந்தித்த 2 இடங்களில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்துள்ள தோல்வி தொடர்பாக நவ்ஜோத் சிங் சித்து ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், “மக்களின் குரல் என்பது கடவுளின் குரல். மக்களின் முடிவை நான் தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன். ஆம் ஆத்மி கட்சிக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)