மேலும் அறிய

PM Modi: ”10 ஆண்டுகளாக இதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை” - பிரதமர் மோடி விளக்கம்

PM Modi: ஆட்சிப் பொறுப்பேற்ற 10 ஆண்டுகளில் ஒருமுறை கூட ஏன் செய்தியாளர் சந்திப்பை நடத்தவில்லை என, பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார்.

PM Modi: பிரதமராக பொறுப்பேற்ற பிறகு ஒருமுறை கூட செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு மோடி பதிலளித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்திக்காதது ஏன்?

நாடாளுமன்ற தேர்தலில் 4 கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ளன. 5ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. இதனிடயே, பிரதமர் மோடி தீவிர பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு அங்கமாக ஊடகங்களுக்கும் பேட்டி அளித்து, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் அளித்த பேட்டியில், பிரதமராக பொறுப்பேற்று 10 ஆண்டுகள் ஆகியும் ஒருமுறை கூட செய்தியாளர்களை சந்திக்காதது தொடர்பாக, எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கான காரணம் என்னவென கேள்வி எழுப்பப்பட்டது.

பிரதமர் மோடி விளக்கம்:

செய்தியாளர்களை சந்திக்காதது தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, “நான் கடினமாக உழைக்க வேண்டும். நான் ஏழைகளின் வீட்டிற்கு செல்ல விரும்புகிறேன். நான் ரிப்பன்களை வெட்டிவிட்டு,  விக்யான் பவனில் இருந்தபடி புகைப்படங்களை எடுத்துக்கொள்ள முடியும். நான் அதை செய்யவில்லை. நான் ஜார்கண்டின் ஒரு சிறிய மாவட்டத்திற்குச் சென்று ஒரு சிறிய திட்டத்தை நோக்கி வேலை செய்கிறேன். நான் கொண்டுவந்துள்ள இந்த கலாச்சாரம் சரி என்றால் ஊடகங்கள் அதனை சரியாக காட்டும். இல்லை என்றால் அது காட்டப்படாது. 

ஊடகங்கள் தனி நிறுவனம் கிடையாது - மோடி

இன்றைய தேதிக்கு ஊடகங்கள் ஒரு தனி நிறுவனமாக இல்லை. நடுநிலையுடன் இருக்க வேண்டிய ஊடகங்கள் அவ்வாறு இல்லை. அரசியல் சார்புடன் செயல்படுகின்றன. பத்திரிகையாளர்கள் தங்களுடைய பார்வையையும் கொள்கைகளையும்தான் முன்னிறுத்துகிறார்கள். நாடாளுமன்றத்துக்குத்தான் நான் பதிலளிக்க வேண்டியவன். இன்று, பத்திரிகையாளர்களும் அவரவர் விருப்பங்களுடன் அடையாளம் காணப்படுகிறார்கள். இப்போதெல்லாம் ஊடகங்கள் பக்கச்சார்பு அற்றவையாக இல்லை.

இப்போது மக்களுக்கு உங்களுடைய (பத்திரிகையாளர்கள்) நம்பிக்கைகள் என்னவென்பது பற்றியும் தெரியும். முன்பெல்லாம் ஊடகம் முகமற்றவையாக இருந்தது. யார் எழுதுகிறார்கள்... அதன் கொள்கை என்ன.. யாரும் அதைப் பற்றி முன்னர் கவலைப்பட்டதில்லை. ஆனால் தற்போது நிலைமை அவ்வாறு இல்லை. அரசியலில் செயல்பாடுகள் பற்றிக் கவலைப்படாமல், ஊடகங்களைக் கையாள்வதை மையப்படுத்திச் செயல்படுகிற புதிய கலாசாரம் உருவாகியிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் பதிலளிப்பேன்:

முன்னர் ஊடகங்கள் மட்டுமே தகவல்தொடர்புக்கான ஆதாரமாக இருந்ததாகவும், தற்போது புதிய தகவல் தொடர்பு ஊடகங்கள் கிடைத்துள்ளன. நீங்கள் பொதுமக்களுடன் பேச விரும்பினால், அதற்கான தொடர்பு இருவழியாக உள்ளது. இன்று, ஊடகங்கள் இல்லாமல் பொதுமக்களும் தங்கள் குரலை வெளிப்படுத்த முடியும். பதில் சொல்ல வேண்டிய நபரும் கூட, ஊடகங்கள் இல்லாமலே தனது கருத்தை நன்றாக வெளிப்படுத்த முடியும். அதோடு, நான் நாடாளுமன்றத்திற்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டவன். நாடாளுமன்றத்தில் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பேன்” என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget