மேலும் அறிய

PM Modi Mizoram Election: 9 ஆண்டுகளில் முதல் முறை தேர்தல் பரப்புரைக்கு செல்லாத பிரதமர் மோடி - மணீப்பூரால் வந்த வினை

PM Modi Mizoram Election: சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவிற்காக தீவிர பரப்புரையில் ஈடுபடும் பிரதமர் மோடி, மிசோரமில் ஒருமுறை கூட நேரில் சென்று வாக்கு சேகரிக்கவில்லை.

PM Modi Mizoram Campaign: மணிப்பூர் வன்முறை காரணமாக தான் மிசோரம் தேர்தல் பரப்புரையில், பிரதமர் மோடி பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. 

மோடி எனும் பரப்புரை ஆயுதம்:

2014ம் ஆண்டு மோடியை முன்னிலைப்படுத்தியே நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு,  பாஜக ஆட்சியை கைப்பற்றியது. அவர் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற அனைத்து சட்டமன்ற தேர்தல்களிலும், பாஜகவிற்காக மோடி தீவிர பரப்புரையில் ஈடுபடுவது வழக்கம். தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் மோடி நடத்தும் ”ரோட் ஷோ” மிகவும் பிரபலமானது. மோடியை தங்களது பிராண்ட் ஆகவும்,  பரப்புரையின் முக்கிய ஆயுதமாகவே பாஜக கருதுகிறது. தாங்கள் போட்டியிடும் தொகுதியில் பிரதமர் மோடி வந்து பரப்புரையில் ஈடுபடமாட்டாரா என்பது தான், பாஜகவை சேர்ந்த ஒவ்வொரு வேட்பாளரின் எண்ணமாகவும் உள்ளது. அவருடைய பரப்புரைகள் தேர்தலில் அந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என பாஜகவினர் நம்புகின்றனர். அண்மையில் தேர்தல் நடைபெற்ற கர்நாடகாவில் 7 நாட்களில் 19 பேரணி மற்றும் 6 ரோட் ஷோக்களில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

மிசோரமை புறக்கணித்த பிரதமர் மோடி:

ஆனால், இன்று வாக்குப்பதிவு (நவ.7) நடைபெறும் மிசோரம் மாநிலத்தில் ஒருமுறை கூட பிரதமர் மோடி நேரில் சென்று பரப்புரையில் ஈடுபடவில்லை. வழக்கமாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு சென்று, அந்த மாநில கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் ஆடைகளை அணிந்து பேசி வாக்காளர்களை கவருவார். தனது ஆட்சிக் காலத்தில் தான், வடகிழக்கு மாநிலங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளதாக பல இடங்களில் மோடியே பதிவு செய்துள்ளார். அப்படி இருந்தும் மிசோரம் மாநிலத்தில் பிரதமர் மோடி ஒருமுறை கூட பரப்புரையில் ஈடுபடாதது பாஜகவிற்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. மணிப்பூர் விவகாரத்தை மத்திய பாஜக அரசு முறையாக கையாளததன் விளைவாக தான், மக்களை சந்திக்க முடியாமல் மோடி மிசோரமிற்கு செல்லவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

மணிப்பூர் விவகாரம் - பாஜகவை ஒதுக்கிய கூட்டணி:

மிசோரமில் ஆளும் கட்சியாக உள்ள மிசோ தேசிய முன்னணி கட்சியின் கூட்டணியில் தான் பாஜக அங்கம் வகிக்கிறது. இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து கடந்த 30ம் தேதி மிசோரம் மாநிலத்தின் மேற்கு பகுதியில் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொள்வதாக இருந்தது. ஆனால், “மிசோரம் மக்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள். மணிப்பூரில் தேவாலயங்களை எரித்தபோது எங்கள் மக்கள் அதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தனர். இத்தகைய சூழலில் பாஜகவுடன் பரிவு காட்டுவது எங்கள் கட்சிக்கு பின்னடைவாக அமையலாம். எனவே பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் நான் பரப்புரையில் ஈடுபடமாட்டேன்” என மிசோரம் முதலமைச்சர் ஜோரம்தங்கா திட்டவட்டமாக கூறிவிட்டார். இதன் காரணமாக பிரதமர் மோடி தனது பரப்புரையை ரத்து செய்து கொண்டார். மிசோரம் தேர்தலுக்காக வெறும் 10 நிமிட காணொலி உரையை மட்டும் அவர் வெளியிட்டார். கடந்த 9 ஆண்டுகளில் மோடி பங்கேற்காத ஒரே சட்டமன்ற தேர்தல் பரப்புரை இதுதான்.

கருத்துகணிப்பு:

முன்னதாக மிசோரம் மாநில தேர்தல் தொடர்பாக ஏபிபி செய்தி நிறுவனம், சி வோட்டருடன் இணைந்து கருத்துகணிப்பு நடத்தியது. அதில், மொத்தமுள்ள 40 தொகுதிகளில் ஆளும் மிசோ தேசிய முன்னணி தலைமையிலான கூட்டணி, 17 முதல் 21 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோரம் மக்கள் இயக்கம், 10 முதல் 14 தொகுதிகளையும், காங்கிரஸ் 6 முதல் 10 தொகுதிகளையும் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget