மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்ட வாக்காளர்களே இன்று SIR சிறப்பு முகாம்.. தவறவிடாதீர்கள்..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும் வாக்காளர் சிறப்பு முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு அறிவுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 01.01.2026-ஐத் தகுதி நாளாகக் (Qualifying Date) கொண்டு நடத்தப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி மயிலாடுதுறை மாவட்டத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் பிழையின்றி, விடுபடாமல் அனைத்துத் தகுதியானவர்களின் பெயர்களையும் சேர்ப்பதே இந்தத் திருத்தப் பணியின் முக்கிய நோக்கமாகும். இந்தப் பணியின் தற்போதைய முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலரான ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

91% கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி நிறைவு

இந்தச் சிறப்புத் தீவிர திருத்தப் பணியின் முதற்கட்டமாக, மாவட்டத்தின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள வீடுகளுக்குச் சென்று வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Forms) வழங்கும் பணி முன்னெடுக்கப்பட்டது. இந்தச் சீரிய பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (Booth Level Officers - BLOs) மிகுந்த அர்ப்பணிப்புடன் ஈடுபட்டனர்.

மாவட்ட நிர்வாகத்தின் தகவலின்படி, தற்போது வரை இந்தப் படிவங்களை வழங்கும் பணி 91 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இது மாவட்டத்தின் தேர்தல் பணிக் குழுவினரின் வேகத்தையும் செயல்திறனையும் காட்டுகிறது. எஞ்சியுள்ள மிகக் குறைந்த சதவீதப் பணிகளும் விரைந்து முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படிவங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணி தீவிரம்

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள், வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. இந்தப் படிவங்களில் உள்ள தகவல்களைச் சரிபார்த்த பின்னர், வாக்காளர் பட்டியல் மேலாண்மை அமைப்பின் மூலம் இணையத்தில் பதிவேற்றம் (Online Uploading) செய்யும் முக்கியமான பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த இணையப் பதிவேற்றமே புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கும், நீக்குவதற்கும், திருத்தம் செய்வதற்கும் அடிப்படையாக அமையும்.

இந்தப் பணியை விரைந்து முடிக்கவும், தரவு உள்ளீட்டில் பிழைகள் ஏற்படாமல் தவிர்க்கவும், மாவட்ட நிர்வாகம் கூடுதல் அலுவலர்களை நியமித்துச் செயல்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள்

மக்கள்தான் இந்தத் திருத்தப் பணியின் முதுகெலும்பு. எனவே, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பொதுமக்களும், தங்களுக்கு வழங்கப்பட்ட சிறப்புத் தீவிர திருத்தம் கணக்கெடுப்பு படிவத்தின் தலைப்பைப் பார்க்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். அந்தப் படிவத்தின் தலைப்பிலேயே:

தங்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரின் (BLO) பெயர், அவரது முழுத் தொலைபேசி எண் ஆகிய தகவல்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

பொதுமக்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை உடனடியாக அளிக்கத் தங்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. இது காலவிரயத்தைக் குறைத்து, பதிவேற்றப் பணிகளைத் துரிதப்படுத்த உதவும்.

இன்று சிறப்பு முகாம்கள் 

வாக்காளர்கள் சிரமமின்றி தங்களது பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, இன்று (நவம்பர் 17, திங்கட்கிழமை) மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

இந்தச் சிறப்பு முகாம்களில் கீழ்க்கண்ட முக்கியப் பணிகள் நடைபெறும்

*படிவங்கள் பூர்த்தி செய்தல்: வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய அல்லது முகவரி மாற்ற விண்ணப்பிக்கத் தேவையான படிவங்களை (படிவம் 6, 7, 8) பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்

*பூர்த்தி செய்த படிவங்கள் மீளப் பெறுதல்: வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், ஏற்கனவே வழங்கப்பட்டு மக்களால் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்புப் படிவங்களை இந்த முகாமில் நேரடியாகப் பெற்றுக் கொள்வார்கள்.

பொதுமக்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அண்டை வீட்டாருடன் இந்தச் சிறப்பு முகாம்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.

01.01.2026-ஐத் தகுதி நாளாகக் கொண்டு இந்தப் பணி நடத்தப்படுவதால், வரும் சனவரி 1, 2026 அன்று 18 வயது பூர்த்தியடையும் அனைவரும் வாக்காளர் பட்டியலில் முன்கூட்டியே தங்களைச் சேர்த்துக்கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
Embed widget