மேலும் அறிய

Lok Sabha Election: 4வது கட்ட மக்களவைத் தேர்தல்: 64% வாக்குகள் பதிவு: மே.வங்கம் முதலிடம் - 1998-க்கு பிறகு ஸ்ரீநகரில் ஜாஸ்தி!

Lok Sabha Election phase 4 Polling: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் நான்காம் கட்ட வாக்குப்பதிவில், மொத்தமாக 64 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

Lok Sabha Election phase 4 Polling: ஜம்மு & காஷ்மீரின் ஸ்ரீநகர் தொகுதியில் 1998ம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை இல்லாத அளவிற்கு வாக்குகள் பதிவாகியுள்ளன.  

நான்காம் கட்டத்தில் 64% வாக்குகள் பதிவு:

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், 3 கட்ட வாக்குப்பதிவானது கடந்த ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. அதைதொடர்ந்து நேற்று 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த, 96 மக்களவை தொகுதிகளில் நான்காவது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆந்திரா மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் பல அரங்கேறிய நிலையில், நான்காம் கட்டத்தில் மொத்தமாக சுமார் 64 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக மேற்குவங்க மாநிலத்தில் 76.68 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 

மாநில வாரியான வாக்குப்பதிவு விவரங்கள் (துல்லியமான விவரங்களை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும்)

மாநிலம்/யூ.டி வாக்குப்பதிவு சதவிகிதம் (ஒட்டுமொத்தம்: 64.13%)
ஆந்திரப் பிரதேசம் 68.32%
பீகார் 56.87%
ஜம்மு & காஷ்மீர் 37.93%
மத்திய பிரதேசம் 70.68%
மகாராஷ்டிரா 57.84%
ஒடிசா 64.81%
தெலங்கானா
62.28%
உத்தரப்பிரதேசம் 58.05%
மேற்கு வங்கம்
76.68%
ஜார்கண்ட் 64.59%

 ஸ்ரீநகரில் 1998க்குப் பிறகு அதிக வாக்குப்பதிவு:

ஜம்மு & காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் தொகுதியில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில்,  37.93% வாக்குகள் பதிவாகின.  1998ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு அங்கு பதிவான அதிகபட்ச வாக்குகள் இதுவாகும். முன்னதாக 1996ம் ஆண்டில் 40.94 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், 1998ல் 30.06 சதவிகிதமும், 1999ல் 11.93 சதவிகிதமும், 2004ல் 18.57 சதவிகிதமும், 2009ல் 25.55 சதவிகிதமும், 2014ல் 25.86 சதவிகிதமும் மற்றும் 2019ல் 14.43 சதவிகித வாக்குகளும் மட்டுமே பதிவாகி இருந்தது குற்ப்பிடத்தக்கது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு பள்ளத்தாக்கில் நடந்த முதல் பொதுத் தேர்தல் இதுவாகும். ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் அப்துல்லா குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறையினர் வாக்களித்த நிலையில்,  வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.

ஆந்திரா, மேற்குவங்கத்தில் வன்முறை:

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பர்தா அணிந்து வந்த இஸ்லாமிய பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக, பாஜக வேட்பாளர் மாதவி லதா மிது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆந்திராவில் பல்நாடு, கடப்பா மற்றும் அன்னமய்யா மாவட்டங்களில், தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே மோதல் வெடித்தது. கட்சி நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட நிலையில், பூத் ஏஜெண்டுகள் கடத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. சில பகுதிகளில் வாக்குச்சாவடி மையங்கள் கைப்பற்றப்பட்டு, கள்ள ஓட்டு போடப்பட்டதாகவும் இரண்டு பிரதான கட்சிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டன.

மேற்கு வங்கத்தில் பிர்பூம் மற்றும் பர்தாமான்-துர்காபூர் மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில்,  பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ்  தொண்டர்கள் மோதிக்கொண்டதால் ஆங்காங்கே வன்முறை ஏற்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரம் செயலிழப்பு மற்றும் வாக்குப்பதிவு முகவர்களைத் தடுத்தது என மொத்தம் 1,088 புகார்களை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது,

அடுத்தகட்ட தேர்தல்:

நான்காம் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 379 தொகுதிகளுக்கு தற்போது வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. முதல் மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் முறையே 66.14 சதவீதம், 66.71 சதவீதம் மற்றும் 65.68 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. அடுத்த கட்ட வாக்குப்பதிவு மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடபெற உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Vijay Sethupathi: யோசிக்காமல் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. நெகிழ்ந்து போன நடிகர் சிங்கம் புலி!
யோசிக்காமல் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. நெகிழ்ந்து போன நடிகர் சிங்கம் புலி!
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Embed widget