Rajinikanth: "ஓட்டு போடுவதில் மரியாதை, கௌரவம் இருக்கு” - வாக்காளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்!
Tamil Nadu Lok Sabha Election 2024 Voting: திரைப்பிரபலங்கள் அஜித், சரத்குமார், கார்த்திக், கௌதம் கார்த்திக், சிவகார்த்திகேயன், ராதிகா, இளையராஜா, பிரபு உள்ளிட்டோர் காலையிலேயே வந்து வாக்களித்தனர்.

Tamil Nadu Lok Sabha Election 2024: வாக்குரிமை இருக்கும் அனைவருமே கட்டாயம் வந்து வாக்கு போட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த்(Rajinikanth) தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிக்கு வருகை தந்து தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். திரைப்பிரபலங்கள் அஜித், சரத்குமார், கார்த்திக், கௌதம் கார்த்திக், சிவகார்த்திகேயன், ராதிகா, இளையராஜா, பிரபு உள்ளிட்டோர் வாக்களித்தனர். இதனிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்கினை பதிவு செய்தார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “வாக்குரிமை இருக்கும் அனைவருமே கட்டாயம் வந்து வாக்கு போட வேண்டும். நாம வந்து ஓட்டு போட்டோம் என சொல்வதில் மரியாதை, கௌரவம் இருக்கு. ஓட்டு போடலைன்னு சொல்றதுல்ல மரியாதையும் இல்ல, கௌரவமும் இல்ல. தயவு செஞ்சி எல்லாரும் ஓட்டு போடுங்க” என தெரிவித்தார்.
Before You Go
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















