மேலும் அறிய

கரூரில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு பணி தொடக்கம்; வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்த ஆட்சியர்

அலுவலர்கள் வாக்காளர்களின் வீட்டுக்கே நேரில் சென்று பூத் சிலிப்புகள் வழங்குவதால் அதனை அக்குடும்பத்தில் உள்ள வாக்காளர் எவரேனும் ஒருவர் பெற்றுக்கொள்ளலாம்.

கரூரில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு வரும் பணியினை வீடு வீடாகச் சென்று மாவட்ட தேர்தல் அலுலவர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் ஆய்வு செய்தார்.

 

 

 


கரூரில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு பணி தொடக்கம்; வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்த ஆட்சியர்

 

கரூரில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு வரும் பணியினை வீடு வீடாக சென்று மாவட்ட தேர்தல் அலுலவர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுலவர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல், தெரிவித்ததாவது, கரூர் நாடாளுமன்ற தொகுதியில் வருகின்ற 19.04.2024 வெள்ளிக்கிழமை அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் 6,89,911 ஆண் வாக்காளர்கள், 7,31,518 பெண் வாக்காளர்கள் மற்றும் 92 இதர வாக்காளர்கள் என மொத்தம் 14,22,228 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். வாக்காளர்கள் வாக்குப்பதிவு நாளன்று தங்கள் வாக்கினை எவ்வித சிரமமுமின்றி வாக்குச்சாவடிகளில் சென்று வாக்களிக்க ஏதுவாக இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள பூத் சிலிப் அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கிடும் வகையில் கடந்த 01.04.2024 அன்று முதல் தொடர்புடைய உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கிடும் வகையில் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

 


கரூரில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு பணி தொடக்கம்; வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்த ஆட்சியர்

 

இப்பணியானது வருகின்ற 13.04.2024 க்குள் முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பூத் சிலிப்புடன் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் கையேடு வழங்கப்படுகிறது. இவ்வாக்காளர் கையேட்டில் வாக்காளர் தங்கள் தகவல்களை சரிபார்க்கவும், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதை அறிந்துகொள்ளவும், வாக்களிப்பதற்கான முறைகள் குறித்தும், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டி சேவை செயலிகளை எவ்வாறு பயன்படுத்துவது உள்ளிட்ட விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் பூத் சிலிப்புகள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் மட்டுமே வாக்காளர்களிடம் வழங்கப்படவேண்டுமெனவும், வேறு நபர்களோ அல்லது அரசியல் கட்சி சார்ந்த நபர்கள் மூலமாகவோ பூத் சிலிப்புகள் வழங்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மேலாய்வு செய்து கண்காணித்து உறுதி செய்திட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அலுவலர்கள் வாக்காளர்களின் வீட்டுக்கே நேரில் சென்று பூத் சிலிப்புகள் வழங்குவதால் அதனை அக்குடும்பத்தில் உள்ள வாக்காளர் எவரேனும் ஒருவர் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


கரூரில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு பணி தொடக்கம்; வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்த ஆட்சியர்

 

அந்த வகையில் பூத் சிலிப் வழங்கப்பட்டு வரும் பகுதிகளில் ஒன்றான கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாந்தோணிமலை, சத்தியமூர்த்தி நகர் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தடா கோவில் மற்றும் தர்கா தெரு ஆகிய பகுதிகளில் இன்றய தினம் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் உரிய அலுவலர்கள் மூலம் மட்டுமே பூத் சிலிப்புகள் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவது குறித்து உறுதி செய்யப்பட்டதுடன் குறிப்பிட்டுள்ள கால அளவிற்குள் பூத் சிலிப்புகளை வாக்காளர்களுக்கு விடுபடாமல் வழங்கிட வேண்டுமெனவும் உதவிதேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுலவர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவித்தார்கள்.

இந்த நிகழ்ச்சியின் போது கரூர் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வட்டாட்சியர் முனிராஜ், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வட்டாட்சியர்  வெங்கடேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Breaking News LIVE: ஒட்டுமொத்த இந்துக்களையும் ராகுல் காந்தி அவமதித்துவிட்டார் - பிரதமர் மோடி
Breaking News LIVE: ஒட்டுமொத்த இந்துக்களையும் ராகுல் காந்தி அவமதித்துவிட்டார் - பிரதமர் மோடி
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin Vs Vijay | திமுக அடி மடியிலேயே.. சவால் விடும் விஜய்..! BEAST MODE ஆரம்பம்Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?Chennai's Amirtha | அடுத்த கட்ட பாய்ச்சலில் பிரபல கல்வி குழுமம்..பிராண்ட் அம்பாசிடராக ஸ்ரீலீலாJagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Breaking News LIVE: ஒட்டுமொத்த இந்துக்களையும் ராகுல் காந்தி அவமதித்துவிட்டார் - பிரதமர் மோடி
Breaking News LIVE: ஒட்டுமொத்த இந்துக்களையும் ராகுல் காந்தி அவமதித்துவிட்டார் - பிரதமர் மோடி
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Visu Birthday : குடும்ப சித்திரங்களின் ஏகலைவன் விசுவின் பிறந்தநாள் இன்று !
Visu Birthday : குடும்ப சித்திரங்களின் ஏகலைவன் விசுவின் பிறந்தநாள் இன்று !
அதிரடி! மக்கள் நல்வாழ்வு, வனத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு புதிய செயலாளர்கள்  - முழு விவரம்
அதிரடி! மக்கள் நல்வாழ்வு, வனத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு புதிய செயலாளர்கள் - முழு விவரம்
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
செப்டம்பர் 17-ல் மதுவிலக்கு மாநாடு பெண்கள் தலைமையில் நடத்தப்படும் - விசிக தலைவர் திருமாவளவன்
செப்டம்பர் 17-ல் மதுவிலக்கு மாநாடு பெண்கள் தலைமையில் நடத்தப்படும் - விசிக தலைவர் திருமாவளவன்
Embed widget