மேலும் அறிய

Kanimozhi MP: உலகிலேயே சட்டம் போட்டு ஊழல் செய்த ஆட்சி பாஜக - கனிமொழி எம்பி

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத கட்சியாக நாட்டில் பாஜக மட்டுமே உள்ளது.பிரதமர் இங்கு வந்தபோது திமுகவை ஒழித்து விடுவேன் என கூறுகிறார்.தேர்தல் முடிந்ததும் உங்கள் நிலை அதுதான் என்பதை மறந்து விடக்கூடாது.

திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி நேற்று இரண்டாவது நாளாக இந்திய கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புருஸை ஆதரித்து நெல்லை டவுண் வாகையடி முக்கில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுவையில், ”வரக்கூடிய தேர்தல் எல்லா தேர்தலை போன்றதல்ல. இந்த தேர்தல் நமது உரிமையை பாதுகாக்ககூடிய ஒரு தேர்தல். ஆங்கிலேய காலக்கட்டத்தில் நமது உரிமைகள் உடமைகள் பறித்து எடுத்து சென்றதை போல் தமிழக வளங்கள் வரி ஜிஎஸ்.டி என்ற பெயரில் மத்திய அரசால் பிடுங்கப்பட்டு வருகிறது. நமது சுயமரியாதையை, மொழியை, இனத்தை, மாண்புகளை  மத்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாக கொச்சைப்படுத்தி வருகிறது. ஒற்றுமையான சமூகங்களை அரசியல் லாபத்திற்காக பாஜக பிரித்து ஆளும் சூழ்ச்சியை செய்து வருகிறது. பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூரில் 2 இனக்குழுக்களுக்குள் பிரிவினையை தூண்டி பிரித்து செயல்படுத்து கொண்டிருக்கிறது. 

உலகம் முழுதும் சுற்றி வரும் நாட்டின் பிரதமர் ஒருமுறை கூட மணிப்பூர் மக்களை பார்க்கவில்லை. திருநெல்வேலி, தூத்துக்குடி, சென்னை ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட போது வராத பிரதமர் தேர்தல் வந்ததும் வாரத்திற்கு ஒருமுறை  வந்து கொண்டிருக்கிறார். தமிழ் பேசத்தெரியவில்லை என பிரதமர் வருத்தப்படுகிறார். நம்மை அனைவரையும் ஹிந்தி படியுங்கள் என்கிறார்கள், அவர்கள் தமிழ் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டால் தமிழக முதலமைச்சர் கட்டாயம் ஒரு தமிழாசிரியரை உங்களுக்கு அனுப்பி வைப்பார். ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தி பிஞ்சு போன செருப்பு என அண்ணாமலை சொல்லி வருகிறார். ஆனால் மறுபுறம் தமிழ் தொண்மையான மொழி என மக்களை ஏமாற்றி வருகிறார் பிரதமர். ஊழல் செய்வதற்கு சட்டம் போட்ட ஆட்சி உலகில் எங்கேயுமே கிடையாது. ஆனால் இந்தியாவில் பிஜேபி செய்துள்ளது. தேர்தல் பத்திரம் என்ற முறையை பாஜக செய்துள்ளது.

ஒரு நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து இந்த நிறுவனத்தின் மூலமே பாஜக தேர்தல் பத்திரத்தை பெற்று வழக்கை மீண்டும் கைவிட்டது. அரசியலில் தனக்கு எதிராக யாராக இருந்தாலும் அமலாக்கத்துறை மூலம் மத்திய அரசு சோதனை நடத்துகிறது. அமலாக்கத்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறை போன்ற கஷ்டத்தை அனுபவிக்க முடியவில்லை என்றால் பாஜகவில் போய் சேர்ந்த உடன் அவர்களது வாசிங் மிசினில் சுத்தம் செய்யப்பட்டு தூய்மையானவராக மாற்றிவிடுவார்கள்.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத கட்சியாக நாட்டில் பாஜக மட்டுமே உள்ளது. பிரதமர் இங்கு வந்தபோது திமுகவை ஒழித்து விடுவேன் என கூறுகிறார். தேர்தல் முடிந்ததும் உங்கள் நிலை அதுதான் என்பதை மறந்து விடக்கூடாது. சீனா பகுதியில் 2000 கிலோமீட்டர் இந்திய பகுதியை ஆக்கிரமித்துள்ளது இடங்களுக்கு பெயர் சீன மொழியில் வைத்துள்ளார்கள். இவர்தான் இந்தியாவை காப்பாற்றக்கூடிய மிகப் பெரிய வீரரா, பாதி நாட்டை தாரை வார்த்து கொடுத்து விட்டார். இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கட்சத் தீவு குறித்து கேள்வி எழுப்புகிறார்.

பத்தாண்டுகளாக எவ்வித அக்கறையும் கொண்டு செயல்படவில்லை. கேஸ் விலை 1100 ரூபாயாக இருக்கிறது. பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து ஏறிக் கொண்டிருக்கிறது. ஜிஎஸ்டி கொண்டு வந்து சின்ன சின்ன கடைக்காரர்களை வியாபாரிகளை  நசித்து வருகிறார்கள். முதலமைச்சர் உறுதி அளித்த படி  கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கு வழங்கப்படும். பெட்ரோல் விலை 75 ரூபாய் டீசல் விலை 65 ரூபாய்க்கும் கொண்டு வரப்படும். திருநெல்வேலி நகர் பகுதிக்குள் மின் கம்பிகள் தரைக்கு கீழ் கொண்டு வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்துக்களுக்கு கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமிய மக்களுக்கு உறுதுணையாக இருப்பது இந்தியா கூட்டணி. எனவே கைசின்னத்திற்கு வாக்களியுங்கள்” என கேட்டுக்கொண்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Flight Accident: நடுவானில் பயங்கரம்! சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பயணி உயிரிழப்பு; 30 பேர் காயம் - நடந்தது என்ன?
Flight Accident: நடுவானில் பயங்கரம்! சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பயணி உயிரிழப்பு; 30 பேர் காயம் - நடந்தது என்ன?
Paris Olympics 2024: இந்த தடவ கோட்டா முறைதான் பின்பற்றப்படும் - கோரிக்கையை ஏற்ற இந்திய மல்யுத்த கூட்டமைப்பு
Paris Olympics 2024: இந்த தடவ கோட்டா முறைதான் பின்பற்றப்படும் - கோரிக்கையை ஏற்ற இந்திய மல்யுத்த கூட்டமைப்பு
Breaking News LIVE: மதுரையில் நாளை அரசு சித்திரை பொருட்காட்சி
Breaking News LIVE: மதுரையில் நாளை அரசு சித்திரை பொருட்காட்சி
Cauvery: தமிழ்நாட்டுக்கு காவிரியில் 2.5 டி.எம்.சி நீரை திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு
Cauvery: தமிழ்நாட்டுக்கு காவிரியில் 2.5 டி.எம்.சி நீரை திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Kodaikanal Flood | 5 மணி நேர போராட்டம்.. குழந்தையுடன் காத்திருந்த தாய் கொடைக்கானல் வெள்ளம்Duraimurugan vs EPS | ”கள்ள மௌனம் கைவந்த கலை!தேர்தல் கூட்டணிய பார்த்தோம்” EPS-ஐ விளாசும் துரைமுருகன்Rahul gandhi with dogs | ”BESTFRIEND-க்கு உடம்பு முடியல” நாயுடன் விளையாடும் ராகுல்! வைரல் வீடியோOdisha VK Pandian | தமிழர் மீது வெறுப்பை கக்கிய மோடி! பாஜக vs பிஜு ஜனதா தளம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Flight Accident: நடுவானில் பயங்கரம்! சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பயணி உயிரிழப்பு; 30 பேர் காயம் - நடந்தது என்ன?
Flight Accident: நடுவானில் பயங்கரம்! சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பயணி உயிரிழப்பு; 30 பேர் காயம் - நடந்தது என்ன?
Paris Olympics 2024: இந்த தடவ கோட்டா முறைதான் பின்பற்றப்படும் - கோரிக்கையை ஏற்ற இந்திய மல்யுத்த கூட்டமைப்பு
Paris Olympics 2024: இந்த தடவ கோட்டா முறைதான் பின்பற்றப்படும் - கோரிக்கையை ஏற்ற இந்திய மல்யுத்த கூட்டமைப்பு
Breaking News LIVE: மதுரையில் நாளை அரசு சித்திரை பொருட்காட்சி
Breaking News LIVE: மதுரையில் நாளை அரசு சித்திரை பொருட்காட்சி
Cauvery: தமிழ்நாட்டுக்கு காவிரியில் 2.5 டி.எம்.சி நீரை திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு
Cauvery: தமிழ்நாட்டுக்கு காவிரியில் 2.5 டி.எம்.சி நீரை திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு
IPL CSK: 3 முறை மட்டுமே மிஸ்ஸிங்! ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சி.எஸ்.கே.தான் கில்லி! அதிலும் ஒரு ட்விஸ்ட்!
IPL CSK: 3 முறை மட்டுமே மிஸ்ஸிங்! ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சி.எஸ்.கே.தான் கில்லி! அதிலும் ஒரு ட்விஸ்ட்!
Thug Life: இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில்... செம அப்டேட் கொடுத்த தக் லைஃப்  டீம்!
Thug Life: இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில்... செம அப்டேட் கொடுத்த தக் லைஃப் டீம்!
Kanchipuram Traffic Diversion: காஞ்சிபுரத்தில் போக்குவரத்து மாற்றம்..!  உஷாரா இதை தெரிஞ்சுகிட்டு போங்க மக்களே ..!
காஞ்சிபுரத்தில் போக்குவரத்து மாற்றம்..! உஷாரா இதை தெரிஞ்சுகிட்டு போங்க மக்களே ..!
"குவைத்தில் கைதிகளாகியுள்ள தமிழக மீனவர்கள்" வௌியுறவுத்துறைக்கு மீண்டும் கடிதம் எழுதிய தமிழக அரசு!
Embed widget