கணபதி தாளத்திற்கு நடனமாடிய சமயபுரம் யானை! மயிலாடுதுறையில் தருமபுர ஆதீனத்தில் சமயபுரம் யானை வேத சிவாகம பாடசாலை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாடிய கணபதி தாளத்திற்கு ஏற்றவாறு தலையை ஆட்டி நாட்டியமாடிய நிகழ்வு பக்தர்களை ஆச்சரியத்துடன் கண்டு ரசிப்பு. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பழைமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்திருமடம் உள்ளது. இங்கு உள்ள ஶ்ரீ ஞானபுரீஸ்வரர் பெருவிழா, குருபூஜைவிழா ஆதீனகர்த்தரின் பட்டினப்பிரவேச விழா ஶ்ரீ ஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த விழாவிற்காக வனத்துறையிடம் 15 நாள் அனுமதி பெற்று 34 வயதுடைய லக்கிமணி என்ற பெண் யதனை வரவழைக்கப்பட்டது. இந்த யானையை தருமபுர ஆதீனம் தானமாக பெறவுள்ள நிலையில் கருங்கல் தளம். மற்றும் மண்தளம் அமைக்கப்பட்டு ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் யானை கொட்டகை கட்டப்பட்டு திறப்புவிழா நடைபெற்றது. தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்து பழங்கள், காய்கறிகள் குளிர்ச்சிதரும் தர்பூசனி ஆகியவற்றை வழங்கினார். தொடர்ந்து யானையுடன் நின்று தருமபுர ஆதீனம் மற்றும் பக்தர்கள் ஆசி பெற்று புகைப்படம் எடுத்துகொண்டனர். முன்னதாக ஶ்ரீ ஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற கொடியேற்ற விழாவில் சிறப்பு பூஜைகள் செய்தபோது தருமபுரம் ஆதீன வேத சிவாகம பாடசாலை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாடிய கணபதி தாளம், மந்திரங்களுக்கும் மேளதாள வாத்தியங்களுக்கு ஏற்றவாறு யானை தன் தலையை ஆட்டி நடனமாடியது தருமபுர ஆதீனத்தையும், பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.