மேலும் அறிய

MDMK: முடியவே முடியாது..! மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது - தேர்தல் ஆணையம் அதிரடி

lOK Sabha Election: நாடாளுமன்ற தேர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

MDMK: மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

”மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது”

தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி மதிமுக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. விசாரணையின் போது, மதிமுகவிற்கு போதிய வாக்குசதவிகிதம் இல்லை, அதோடு இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதுதொடர்பாக பரிசீலித்து புதன்கிழமை காலை 9 மணிக்குள் தெரிவியுங்கள் என தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில், மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என, அக்கட்சி வழக்கறிஞர்களுக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை பிற்பகலில் நடைபெற உள்ளது. 

வழக்கு விசாரணை:

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவிற்கு, திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் துரை வைகோ போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு, வேட்புமனுவும் தாக்கல் செய்துள்ளார். ஆனால், மதிமுகவிற்கு தேர்தல் ஆணையம் அக்கட்சியின் பம்பரம் சின்னத்தை ஒதுக்கவில்லை. இதையெதிர்த்து அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ உயர்நீதிமன்றத்தை நாடினார். அப்போது, ”தங்களது கட்சிக்கு 5.97 சதவிகிதம் அதாவது சுமார் 6 சதவிகித வாக்கு வங்கி உள்ளது. எனவே கட்சியின் பம்பர சின்னத்தையே தங்களுக்கு ஒதுக்க வேண்டும்” என வைகோ சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், மதிமுகவிற்கு இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும், அதோடு அக்கட்சிக்கு 5.4 சதவிகித வாக்கு வங்கி மட்டுமே உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து, இன்று காலை 9 மணிக்குள் சின்னம் ஒதுக்குவது குறித்து முடிவெடுக்குமாறு, தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

துரைவைகோ சின்னம் என்ன?

கடந்த தேர்தலை போன்று இந்த முறையும் மதிமுக வேட்பாளர், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என திமுக முதலில் வலியுறுத்தியது. ஆனால், அதனை மதிமுக தலைமை முழுமையாக நிராகரித்தது. அதனை தொடர்ந்தே, திருச்சி தொகுதி அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதைதொடர்ந்து, உயிரே போனாலும் இனி எங்கள் சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவோம். இல்லையென்றால் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம். ஆனால் உதயசூரியன் சின்னதில் போட்டியிடமாட்டோம்” என துரை வைகோ கூறியிருந்தார். இந்நிலையில், மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதையடுத்து, துரைவைகோ எந்த சின்னத்தை கொண்டு, திருச்சி தொகுதியில் களம் காண உள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

 

 

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
TN By-Election: திருச்சி கிழக்கில் தேர்தல் பணிகளை தொடங்க அவசர உத்தரவு - தேதி எப்போது அறிவிப்பு? - சூடுபிடிக்கும் அரசியல் களம்
திருச்சி கிழக்கில் தேர்தல் பணிகளை தொடங்க அவசர உத்தரவு - தேதி எப்போது அறிவிப்பு? - சூடுபிடிக்கும் அரசியல் களம்
காங்கிரஸ் செய்தது தவறு; திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை : கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி !
காங்கிரஸ் செய்தது தவறு; திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை : கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி !
Puducherry CM Rangaswamy : புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி..! பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் கைலாசநாதன்...
Puducherry CM Rangaswamy : புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி..! பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் கைலாசநாதன்...

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget