மேலும் அறிய

Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை - 6 மணிக்கு மேல் இதெல்லாம் செய்யக்கூடாது..!

lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் பரப்புரை, இன்று மாலையுடன் ஓய்கிறது. 6 மணிக்கு பிறகு செய்யக்கூடாதவை என்னென்ன?

lok Sabha Election 2024: தேர்தல் பரப்புரை முடிந்ததும் மாலை 6 மணிக்கு மேல், தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் அங்கிருந்து வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு: 

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளில் முதற்கட்டமாக நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதோடு, விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைதேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் நிறைவடைந்து, தேசிய, மாநில கட்சியினர் ஒவ்வொரு தொகுதியிலும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர். பிரதமர், முதலமைச்சர் தொடங்கி நட்சத்திர பேச்சாளர்கள் என பல்வேறு தரப்பினரும், பட்டிதொட்டி எங்கும் முழங்கினர். எதிர்க்கட்சிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன மாதிரியான நலத்திட்டங்களை முன்னெடுப்போம் என்பன போன்ற வாக்குறுதிகளை கூறியும் வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தனர். தெருத்தெருவாக மற்றும் வீடு வீடாக சென்றும், பஜ்ஜி சுட்டு கொடுப்பது, டீ போட்டு கொடுப்பது என்பன போன்ற பல்வேறு நூதன முறைகளிலும் வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.

6 மணிக்கு மேல் அமலுக்கு வரும் உத்தரவுகள்:

  • தேர்தல் பரப்புரை முடிந்ததும் மாலை 6 மணிக்கு மேல் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும்.
  • அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் எக்காரணத்தை கொண்டும் பரப்புரை செய்யவோ, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியிலோ ஈடுபட அனுமதி இல்லை.
  •  இந்த பணிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

களத்தில் 950 வேட்பாளர்கள்:

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. பிரதான கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சுயேச்சைகள் என, மொத்தம் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் ஆண் வேட்பாளர்கள் 873 பேரும், பெண் வேட்பாளர்கள் 77 பேரும் அடங்குவர். வடசென்னையில் 35 வேட்பாளர்களும், தென்சென்னையில் 41, மத்திய சென்னையில் 31, திருவள்ளூர் 14, காஞ்சிபுரம் 11, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 31 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதிகப்பட்சமாக கரூர் தொகுதியில் 54 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 9 பேரும் போட்டியிடுகிறார்கள். விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் 10 பேர் களத்தில் உள்ளனர். இதில் 6 பேர் ஆண்கள், பெண்கள் 4 பேர்.

வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்:

வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 1,59,100 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 82,014 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 88,783 விவிபேட் இயந்திரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 100 சதவிகித வாக்குப்பதிவை உறுதி செய்ய, வரும் 19ம் தேதியன்று பொது விடுமுறையும் அறிவிக்கப்படுள்ளது. ஊழியர்கள் வாக்களிக்க வசதியாக விடுமுறை அறிவிக்காவிட்டால் அந்தந்த மாவட்ட எஸ்டிடி கோட் சேர்த்து 1950 என்ற தொலைபேசியில் புகார் அளிக்கலாம். 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
TN WEATHER: அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
Embed widget