மேலும் அறிய

Local body election | தஞ்சை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட்களுக்கு கல்தா கொடுத்த திமுகவினர்

தஞ்சை மாவட்டம் முழுவதும் திமுகவினர்கள், கம்யூனிஸ்ட் கட்சியினரை ஏமாற்றியுள்ளதால், நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் பணியாற்றுவார்களா என்பது கேள்வி குறியாகியுள்ளது

நகர்புற உள்ளாட்சித்தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 2ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. வேட்பு மனு பரிசீலனை முடிந்து 7ஆம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெறுதல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, தேர்தல் தேதி அறிவித்தவுடன், திமுக தேர்தல் பொறுப்பாளர்கள், கூட்டணி கட்சி தேர்தல் பொறுப்பாளர்களுடன் இட ஒதுக்கீடு தொடர்பாக பேசி வந்தனர். இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் எத்தனை சீட் வழங்குவது பேச்சு வார்த்தை நடைபெற்றது.இந்நிலையில், கும்பகோணம் மாநகராட்சி 7 வது வார்டில் சிபிஐ மாவட்ட செயலாளர் முஅ.பாரதி, கூட்டணி கட்சி சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வார்டில் கடந்த 3 ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அதன் பின்னர், வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.ஆனால், 7 வது வார்டில், இறுதி நாளான 4 ஆம் தேதி திமுகவை சேர்ந்தவர் திடீரென வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதனால் அதிர்ந்து போன பாரதி, தான் போட்டியிட்டால். திமுகவினர் ஒத்துழைப்பு தரமாட்டார்கள்,  தோற்று விடுவோம் என போட்டியிடுவதிலிருந்து விலகி விட்டார். இதே போல், பேராவூரணி பேரூராட்சியில் சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர் ஜகுபர்அலி, தனது மனைவிக்கு 5 வது வார்டில் சீட் கேட்டார். இதே போல் மற்றொரு சிபிஎம் நிர்வாகி ராஜா முகம்மது, தனது சகோதரி அப்ரோஸ், 11 வது வார்டில் போட்டியிடுவதற்காக, திமுக கூட்டணி கட்சியினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.


Local body election | தஞ்சை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட்களுக்கு கல்தா கொடுத்த திமுகவினர்
இதில் 5 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் சாந்தி தலைவர் வேட்பாளர் என்பதால், அவருக்காக விட்டு கொடுங்கள் என்று திமுகவினர் கேட்டு கொண்டதற்கிணங்க, சிபிஎம் கட்சியினர் விட்டு கொடுத்து விட்டனர்.அதன் பின்னர் 11 வது வார்டு தருவதாக கூறியதால், வேட்பு மனு தாக்கல் செய்தனர். கம்யூனிஸ்ட் கட்சிக்கு சீட் கொடுத்து விட்டு, திடீரென திமுகவை சேர்ந்தவரும், திமுகவை சேர்ந்த மற்றொருவரும் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தனர்.இதனால் கூட்டணி தர்மத்தை நிலை நிறுத்துவதற்காக கம்யூனிஸ்ட் கட்சியினர் வேட்பு மனுவை திரும்ப பெற்றனர்.

இதே போல் பெருமகளூர் பேரூராட்சியில் 6 வது வார்டு சிபிஎம் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். ஆனால் திமுகவினர், 10 வது வார்டு தருவதாக தெரிவித்தனர். அதன் பிறகு மற்ற வார்டுகளை கேட்ட போது, 10 வது வார்டில் தருகின்றோம் என திமுகவினர் பிடிவாதமாக இருந்தனர். அதன் பிறக விசாரித்த போது, 10 வது வார்டில் உள்ள கிராம மக்கள், ஒன்றிணைந்து ஒருவரை ஒரு மனதாக தேர்ந்தெடுத்து அவரை, வெற்றி பெறச்செய்வார்கள் என தகவல் அறிந்ததும், சிபிஎம் கட்சியினர், திமுகவினர் வேண்டும் என்றே சீட்  தருகின்றது என்று கம்யூனிஸ்ட் கட்சியினை ஏமாற்றியதால், 10 வது வார்டை தருகின்றோம் சொன்னதை வேண்டாம் என்று கூறி விட்டனர்.


Local body election | தஞ்சை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட்களுக்கு கல்தா கொடுத்த திமுகவினர்

பேராவூரணியில் ஒரு சீட் வாங்குவதற்காக சிபிஐ கட்சியின் மாநில பொருளாளர் பாலகிருஷ்ணன், திமுக எம்பி பழநிமாணிக்கம் மற்றும் திமுக பொறுப்பாளர்கள் பேசியும் பிரயோஜனமில்லாமல் போய் விட்டது.தஞ்சை மாவட்டம் முழுவதும் திமுகவினர்கள், கம்யூனிஸ்ட் கட்சியினரை ஏமாற்றியுள்ளதால், நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் பணியாற்றுவார்களா என்பது கேள்வி குறியாகியுள்ளது.

இது குறித்து சிபிஐ மாவட்ட செயலாளர் பாரதி கூறுகையில்,எங்கள் கட்சி சார்பில் முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி மற்றும் திமுக மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை 5 கட்டமாக பேச்சு வார்த்தை நடைபெற்றது. முதலில் நாங்கள் 7 வார்டு கேட்டோம். இதனை தொடர்ந்து நாங்கள் 3 வார்டு கேட்டோம். திமுகவினர் 7 வது வார்டு மட்டும் தருவதாக கூறினர். அதற்கு சம்மதித்து நானும், திமுக மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரமும் உடன் படிக்கையில் கையெழுத்திட்டோம்.


Local body election | தஞ்சை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட்களுக்கு கல்தா கொடுத்த திமுகவினர்

அதன் பின்னர் நான், வார்டில் உள்ள திமுக வார்டு செயலாளர் ரமேஷ்குமார் சென்று பார்த்த போது, நானும் வேட்பு மனு தாக்கல் செய்வேன் என்றார். இது தொடர்பாக நான், திமுக மாவட்ட செயலாளர், நகர செயலாளர் தமிழழகனை சந்தித்து கூறினேன். இவர்கள் இருவரும் நாங்கள் கண்டிக்கின்றோம் என்று கூறியதால், நான் கடந்த 3 ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்தேன். மறுநாள் 4 ந்தேதி ரமேஷ்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனால்  அதிர்ந்து போன நான், திமுக நிர்வாகிகளிடம் கூறிவிட்டு, சிபிஐ மாவட்ட செயலாளர் முத்தரசனிடம் தெரிவித்தேன். அவர், திமுக தலைமைக்கு தகவலை தெரிவித்தார். தலைமையும், கூட்டணி தர்மத்தை மீறி வேட்பு மனு தாக்கல் செய்தால், உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என கடிதம் அனுப்பினார். திமுக கட்சி மேலிடம் உத்தரவிட்டும், திரும்ப பெறவில்லையே என்று, திமுக மாவட்ட செயலாளரிடம் கேட்டதற்கு, அவர் எங்கள் பேச்சை கேட்கமாட்டேன் என்கிறார் என்று பதில் கூறினர்.

ஆனாலும் ரமேஷ் வேட்பு மனுவை திரும்ப பெறவில்லை. இதற்கிடையில், ரமேஷிற்கு சுயேட்சை சின்னம் வழங்கப்பட்டதால், நான் எங்கள் கட்சியின் தலைமை கூறியதின் பேரில் வேட்பு மனுவை திரும்ப பெற்றேன் என்றார்.சிபிஐ மாவட்ட செயலாளர் பாரதி, மறைந்த முன்னாள் எம்எல்ஏ மன்னை மு. அம்பிகாபதியின் மகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Election: முதல்வருக்காக ஓகே சொன்ன சிபிஎம்! முடிந்த தொகுதி பங்கீடு.. 5 தொகுதிகள் ஒதுக்கீடு
TN Election: முதல்வருக்காக ஓகே சொன்ன சிபிஎம்! முடிந்த தொகுதி பங்கீடு.. 5 தொகுதிகள் ஒதுக்கீடு
வாக்காளர் வசதிக்காக ECINET, புதிய வசதிகள்; ரூ.162 கோடி பறிமுதல்- தேர்தல் ஆணையம் அதிரடி!
வாக்காளர் வசதிக்காக ECINET, புதிய வசதிகள்; ரூ.162 கோடி பறிமுதல்- தேர்தல் ஆணையம் அதிரடி!
அதிமுக எத்தனை இடங்களில் போட்டி? - எடப்பாடி பழனிசாமி சொன்னது என்ன?
அதிமுக எத்தனை இடங்களில் போட்டி? - எடப்பாடி பழனிசாமி சொன்னது என்ன?
"10 லட்சம் கோடி ஊழல்.. திமுக ஒரு தீய சக்தி!" - புதுவையில் குஷ்பூ ‘சரவெடி’ பேட்டி...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
America Iran War: ‘என் மீசைல மண்ணு ஒட்டல‘; “ஈரான் தான் என்னை அழைத்து பேசியது“; வாய் கூசாமல் சொன்ன ட்ரம்ப்
‘என் மீசைல மண்ணு ஒட்டல‘; “ஈரான் தான் என்னை அழைத்து பேசியது“; வாய் கூசாமல் சொன்ன ட்ரம்ப்
Trump Vs Iran: “எந்த பேச்சும் நடக்கல, பயத்துல தான் பின்வாங்கியிருக்கார்“; ட்ரம்ப்பை கழுவி ஊற்றிய ஈரான்
“எந்த பேச்சும் நடக்கல, பயத்துல தான் பின்வாங்கியிருக்கார்“; ட்ரம்ப்பை கழுவி ஊற்றிய ஈரான்
GOLD SILVER RATE MAR. 23rd: மெகா ட்விஸ்ட் கொடுத்த தங்கம்; பகலில் ரூ.7,600 குறைந்து மாலையில் அதிரடி உயர்வு; தற்போது விலை என்ன.?
மெகா ட்விஸ்ட் கொடுத்த தங்கம்; பகலில் ரூ.7,600 குறைந்து மாலையில் அதிரடி உயர்வு; தற்போது விலை என்ன.?
Sathankulam Case Judgement: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை; 9 காவலர்களும் குற்றவாளிகள்; வழக்கில் நீதிபதி அதிரடி தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை; 9 காவலர்களும் குற்றவாளிகள்; வழக்கில் நீதிபதி அதிரடி தீர்ப்பு
Crude Oil Price: ஷாக் கொடுத்த டிரம்ப்.. இறங்கிய கச்சா எண்ணெய் விலை, எகிறிய தங்கம்! போர் நிறுத்தம் காட்டிய மேஜிக்!
Crude Oil Price: ஷாக் கொடுத்த டிரம்ப்.. இறங்கிய கச்சா எண்ணெய் விலை, எகிறிய தங்கம்! போர் நிறுத்தம் காட்டிய மேஜிக்!
PM Modi: கொரோனா காலம் திரும்புகிறதா? எல்லாத்துக்கும் தயாரா இருங்க- பிரதமர் மோடி எச்சரிக்கை!
PM Modi: கொரோனா காலம் திரும்புகிறதா? எல்லாத்துக்கும் தயாரா இருங்க- பிரதமர் மோடி எச்சரிக்கை!
US Iran War Trump: திடீரென பல்டி அடித்த ட்ரம்ப்; ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம் என அறிவிப்பு; காரணம் என்ன.? ஏற்குமா ஈரான்.?
திடீரென பல்டி அடித்த ட்ரம்ப்; ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம் என அறிவிப்பு; காரணம் என்ன.? ஏற்குமா ஈரான்.?
ADMK Alliance Seat Sharing: வெளியான அதிமுக கூட்டணியின் தொகுதிப்பங்கீட்டு பட்டியல்; பாஜக, பாமக, அமுமுக-விற்கு எத்தனை.?
வெளியான அதிமுக கூட்டணியின் தொகுதிப்பங்கீட்டு பட்டியல்; பாஜக, பாமக, அமுமுக-விற்கு எத்தனை.?
Embed widget