![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Local Body Election | உதயநிதி மேட்ச் பார்த்ததால்தான் தோனி ஜெயித்தாரா? - ஒரே வாராக வாரிய அண்ணாமலை
’’திமுகவினர் எங்கள் வேட்பாளர்களை மிரட்ட தொடங்கிவிட்டனர்; மத்தியில் எங்களுடைய ஆட்சிதான் உள்ளது என்று ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்’’
![Local Body Election | உதயநிதி மேட்ச் பார்த்ததால்தான் தோனி ஜெயித்தாரா? - ஒரே வாராக வாரிய அண்ணாமலை Local Body Election BJP state president Annamalai campaigns in Karur in support of BJP candidates Local Body Election | உதயநிதி மேட்ச் பார்த்ததால்தான் தோனி ஜெயித்தாரா? - ஒரே வாராக வாரிய அண்ணாமலை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/14/cf828d793caa4c5a9f3b6366d09c9522_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு, லைட் ஹவுஸ் கார்னர், ராயனூர் பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திறந்த வேனில் நின்றவாறு பிரச்சாரம் மேற்கொண்டார். லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாமலைக்கு இனிப்பு வழங்கிய சிறுமிக்கு, பிரமாண்ட மாலை அணிவித்து அண்ணாமலை தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அப்போது அவர் பேசுகையில், 172 கோடி டோஸ் தடுப்பு ஊசிகள் எந்த பிரச்சினையுமின்றி வீடு தேடி வந்தது. ஆனால், தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு முறையாக விநியோகிக்கப்படவில்லை. தாய்மார்களுக்கு வெட்ஜா அல்லது நான்வெஜ் பொங்கல் தொகுப்பா? என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு பல்லி, கரப்பான் அடங்கிய தொகுப்பு வினியோகிக்க ப்பட்டு உள்ளது. பெண்கள் அடமானம் வைத்த நகைகளை திரும்ப தரவில்லை. 73% பெண்களுக்கு நகை கடன் ரத்து கிடையாது என்று கூறிவிட்டனர். உதயநிதி கரூர் வந்தபோது ஆயிரம் ரூபாய் எங்கே என்று தாய்மார்கள் எழுப்பிய கேள்விக்கு, இன்னும் 4 வருடம் உள்ளது என்று பதிலளிக்கிறார்.
கான்ட்ராக்ட், கமிஷன், கரப்ஷன் என்று இருப்பவர்களுக்கு மத்தியில் நம்முடைய வேட்பாளர்கள் எவரிடமும் காசு கேட்காத வேட்பாளர்கள். எங்கள் வேட்பாளர்கள் பாரதப் பிரதமர் மோடியை போல் நேர்மையானவர்கள் அவர்களுக்கு வாக்களியுங்கள். கரூர் வந்தபோது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதைப் போல, ஒவ்வொரு அமாவாசை வரும் போதும் திமுக ஆட்சி முடிவுக்கு வருகிறது என்றும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்கள் உழைப்பில் ஸ்டிக்கர் ஒட்டுவது திமுககாரர்களுக்கு கைவந்த கலை. மத்தியில் பாஜக கொண்டு வந்த திட்டங்களை தங்களுடைய திட்டங்கள் என்று கூறி வருகின்றனர். உதயநிதி நேரில் சென்று பார்த்ததால் தான் டோனி கிரிக்கெட்டில் ஜெயித்தார் என்று திமுககாரர்கள் கூறுகிறார்கள்.
திமுகவினர் எங்களுடைய வேட்பாளர்களை மிரட்ட தொடங்கிவிட்டனர். மத்தியில் எங்களுடைய ஆட்சிதான் உள்ளது என்று ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். எனது சொந்த ஊரான கரூர் மண்ணிலிருந்து சொல்கிறேன் வட்டியும், முதலுமாக திருப்பித் தரப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மாவட்ட தலைவர் வி.வி செந்தில்நாதன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளும் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Local Body Election |’அமைதியான கோவையை கலவர பூமியாக திமுகவினர் மாற்ற முயற்சி' - எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)