மேலும் அறிய

‛தனி’ வார்டிற்கு எதிர்ப்பு: மனுதாக்கல் செய்த ஒரே வேட்பாளரும் கடைசியில் வாபஸ்... முதல் தேர்தல் ரத்தை சந்திக்கும் சிவகங்கை!

இதை அறிந்த அந்த வார்டு மக்கள், வேட்பாளர் மாரி மீது கடும் கோபம் கொண்டனர். அது மட்டுமின்றி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

உள்ளாட்சி தேர்தலில் ஒதுக்கீடு பிரச்சனை எப்போதும் இருக்கும். யாருக்கு வார்டு ஒதுக்கப்படுகிறது, உட்கட்சியில் யாருக்கு சீட் ஒதுக்கப்படுகிறது, கூட்டணியில் எந்த கட்சிக்கு வார்டு ஒதுக்கப்படுகிறது என எதையெடுத்தாலும் ஒதுக்கீடு பிரச்சனை தான். இப்போது போதாக்குறைக்கு, சிவகங்கை மாவட்டத்தில் வார்டே பிரச்சனையான சம்பவம் நடந்துள்ளது. 


‛தனி’ வார்டிற்கு எதிர்ப்பு: மனுதாக்கல் செய்த ஒரே வேட்பாளரும் கடைசியில் வாபஸ்... முதல் தேர்தல் ரத்தை சந்திக்கும் சிவகங்கை!

சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இங்குள்ள 8-வது வார்டடை ஆதிதிராவிடர் பெண் வேட்பாளருக்கு ஒதுக்கி உத்தரவிடப்பட்டது.  ஆனால் அந்த வார்டில் ஆதிதிராவிடர் ஒருவர் கூட வாக்காளராக இல்லை என கூறப்படுகிறது. சரியான கணக்கெடுப்பு நடத்தாமல்,  தவறாக வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக, அதிகாரிகள் மீது அப்பகுதியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் தான், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் எதிர்ப்பை மீறி அங்கும் தேர்தல் நடைமுறைக்கு வந்தது. ஆனால், அப்பகுதியினர் ஒன்று கூடி, வாக்காளரே இல்லாத வார்டில், எப்படி ஆதிதிராவிடர் பெண் வேட்பாளருக்கு ஒதுக்கலாம் என்று கூறி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்தனர். அதன் படி அறிவிப்பும் வெளியிட்டு, வீடுகளிங் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.


‛தனி’ வார்டிற்கு எதிர்ப்பு: மனுதாக்கல் செய்த ஒரே வேட்பாளரும் கடைசியில் வாபஸ்... முதல் தேர்தல் ரத்தை சந்திக்கும் சிவகங்கை!
பொதுமக்களின் எதிர்ப்பை காரணம் காட்டி, அந்த வார்டில் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் யாரும் வேட்பாளரை நிறுத்தவில்லை. இதனால் வேட்புமனுத்தாக்கலும் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் தான், 8-வது வார்டைச் சேர்ந்த ஒருவரின் முன்மொழிவோடு 9-வது வார்டில் வசிக்கும்  காளியப்பன் என்பவரின் மனைவி மாரி (30) என்பவர் 8 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தார். 

இதை அறிந்த அந்த வார்டு மக்கள், வேட்பாளர் மாரி மீது கடும் கோபம் கொண்டனர். அது மட்டுமின்றி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யாத நிலையில், இன்று இறுதிநாளில் அவர் போட்டியின்றி தேர்வாகும் சூழல் உருவானது. இந்நிலையில், வார்டு மக்களின் எதிர்ப்பால் தனது வேட்புமனுவை மாரி வாபஸ் பெற்றார். 


‛தனி’ வார்டிற்கு எதிர்ப்பு: மனுதாக்கல் செய்த ஒரே வேட்பாளரும் கடைசியில் வாபஸ்... முதல் தேர்தல் ரத்தை சந்திக்கும் சிவகங்கை!

இதைத் தொடர்ந்து 8 வது வார்டில் போட்டியிட்ட ஒரு வேட்பாளரும் வாபஸ் பெற்றதால், மறுதேர்தலை அந்த வார்டு சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாரி, ‛அங்குள்ள மக்கள் விரும்பாத போது, அங்கு வெற்றி பெற்று பயனில்லை என்பதால், அவர்கள் கருத்துக்கு மதிப்பளித்து மனுவை வாபஸ் பெற்றதாக,’ கூறியுள்ளார். அதே நேரத்தில் தங்கள் வார்டை, பொது வார்டாக மாற்றினால் மட்டுமே தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று அப்பகுதி மக்கள் உறுதியாக உள்ளனர். இதன் மூலம் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ரத்தை சந்திக்கும் முதல் வார்டாக கானாடுகாத்தான் பேரூராட்சி விளங்கப்போகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Embed widget