மேலும் அறிய

‛தனி’ வார்டிற்கு எதிர்ப்பு: மனுதாக்கல் செய்த ஒரே வேட்பாளரும் கடைசியில் வாபஸ்... முதல் தேர்தல் ரத்தை சந்திக்கும் சிவகங்கை!

இதை அறிந்த அந்த வார்டு மக்கள், வேட்பாளர் மாரி மீது கடும் கோபம் கொண்டனர். அது மட்டுமின்றி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

உள்ளாட்சி தேர்தலில் ஒதுக்கீடு பிரச்சனை எப்போதும் இருக்கும். யாருக்கு வார்டு ஒதுக்கப்படுகிறது, உட்கட்சியில் யாருக்கு சீட் ஒதுக்கப்படுகிறது, கூட்டணியில் எந்த கட்சிக்கு வார்டு ஒதுக்கப்படுகிறது என எதையெடுத்தாலும் ஒதுக்கீடு பிரச்சனை தான். இப்போது போதாக்குறைக்கு, சிவகங்கை மாவட்டத்தில் வார்டே பிரச்சனையான சம்பவம் நடந்துள்ளது. 


‛தனி’ வார்டிற்கு எதிர்ப்பு: மனுதாக்கல் செய்த ஒரே வேட்பாளரும் கடைசியில் வாபஸ்... முதல் தேர்தல் ரத்தை சந்திக்கும் சிவகங்கை!

சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இங்குள்ள 8-வது வார்டடை ஆதிதிராவிடர் பெண் வேட்பாளருக்கு ஒதுக்கி உத்தரவிடப்பட்டது.  ஆனால் அந்த வார்டில் ஆதிதிராவிடர் ஒருவர் கூட வாக்காளராக இல்லை என கூறப்படுகிறது. சரியான கணக்கெடுப்பு நடத்தாமல்,  தவறாக வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக, அதிகாரிகள் மீது அப்பகுதியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் தான், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் எதிர்ப்பை மீறி அங்கும் தேர்தல் நடைமுறைக்கு வந்தது. ஆனால், அப்பகுதியினர் ஒன்று கூடி, வாக்காளரே இல்லாத வார்டில், எப்படி ஆதிதிராவிடர் பெண் வேட்பாளருக்கு ஒதுக்கலாம் என்று கூறி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்தனர். அதன் படி அறிவிப்பும் வெளியிட்டு, வீடுகளிங் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.


‛தனி’ வார்டிற்கு எதிர்ப்பு: மனுதாக்கல் செய்த ஒரே வேட்பாளரும் கடைசியில் வாபஸ்... முதல் தேர்தல் ரத்தை சந்திக்கும் சிவகங்கை!
பொதுமக்களின் எதிர்ப்பை காரணம் காட்டி, அந்த வார்டில் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் யாரும் வேட்பாளரை நிறுத்தவில்லை. இதனால் வேட்புமனுத்தாக்கலும் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் தான், 8-வது வார்டைச் சேர்ந்த ஒருவரின் முன்மொழிவோடு 9-வது வார்டில் வசிக்கும்  காளியப்பன் என்பவரின் மனைவி மாரி (30) என்பவர் 8 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தார். 

இதை அறிந்த அந்த வார்டு மக்கள், வேட்பாளர் மாரி மீது கடும் கோபம் கொண்டனர். அது மட்டுமின்றி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யாத நிலையில், இன்று இறுதிநாளில் அவர் போட்டியின்றி தேர்வாகும் சூழல் உருவானது. இந்நிலையில், வார்டு மக்களின் எதிர்ப்பால் தனது வேட்புமனுவை மாரி வாபஸ் பெற்றார். 


‛தனி’ வார்டிற்கு எதிர்ப்பு: மனுதாக்கல் செய்த ஒரே வேட்பாளரும் கடைசியில் வாபஸ்... முதல் தேர்தல் ரத்தை சந்திக்கும் சிவகங்கை!

இதைத் தொடர்ந்து 8 வது வார்டில் போட்டியிட்ட ஒரு வேட்பாளரும் வாபஸ் பெற்றதால், மறுதேர்தலை அந்த வார்டு சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாரி, ‛அங்குள்ள மக்கள் விரும்பாத போது, அங்கு வெற்றி பெற்று பயனில்லை என்பதால், அவர்கள் கருத்துக்கு மதிப்பளித்து மனுவை வாபஸ் பெற்றதாக,’ கூறியுள்ளார். அதே நேரத்தில் தங்கள் வார்டை, பொது வார்டாக மாற்றினால் மட்டுமே தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று அப்பகுதி மக்கள் உறுதியாக உள்ளனர். இதன் மூலம் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ரத்தை சந்திக்கும் முதல் வார்டாக கானாடுகாத்தான் பேரூராட்சி விளங்கப்போகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget