மேலும் அறிய

‛தனி’ வார்டிற்கு எதிர்ப்பு: மனுதாக்கல் செய்த ஒரே வேட்பாளரும் கடைசியில் வாபஸ்... முதல் தேர்தல் ரத்தை சந்திக்கும் சிவகங்கை!

இதை அறிந்த அந்த வார்டு மக்கள், வேட்பாளர் மாரி மீது கடும் கோபம் கொண்டனர். அது மட்டுமின்றி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

உள்ளாட்சி தேர்தலில் ஒதுக்கீடு பிரச்சனை எப்போதும் இருக்கும். யாருக்கு வார்டு ஒதுக்கப்படுகிறது, உட்கட்சியில் யாருக்கு சீட் ஒதுக்கப்படுகிறது, கூட்டணியில் எந்த கட்சிக்கு வார்டு ஒதுக்கப்படுகிறது என எதையெடுத்தாலும் ஒதுக்கீடு பிரச்சனை தான். இப்போது போதாக்குறைக்கு, சிவகங்கை மாவட்டத்தில் வார்டே பிரச்சனையான சம்பவம் நடந்துள்ளது. 


‛தனி’ வார்டிற்கு எதிர்ப்பு: மனுதாக்கல் செய்த ஒரே வேட்பாளரும் கடைசியில் வாபஸ்... முதல் தேர்தல் ரத்தை சந்திக்கும் சிவகங்கை!

சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இங்குள்ள 8-வது வார்டடை ஆதிதிராவிடர் பெண் வேட்பாளருக்கு ஒதுக்கி உத்தரவிடப்பட்டது.  ஆனால் அந்த வார்டில் ஆதிதிராவிடர் ஒருவர் கூட வாக்காளராக இல்லை என கூறப்படுகிறது. சரியான கணக்கெடுப்பு நடத்தாமல்,  தவறாக வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக, அதிகாரிகள் மீது அப்பகுதியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் தான், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் எதிர்ப்பை மீறி அங்கும் தேர்தல் நடைமுறைக்கு வந்தது. ஆனால், அப்பகுதியினர் ஒன்று கூடி, வாக்காளரே இல்லாத வார்டில், எப்படி ஆதிதிராவிடர் பெண் வேட்பாளருக்கு ஒதுக்கலாம் என்று கூறி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்தனர். அதன் படி அறிவிப்பும் வெளியிட்டு, வீடுகளிங் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.


‛தனி’ வார்டிற்கு எதிர்ப்பு: மனுதாக்கல் செய்த ஒரே வேட்பாளரும் கடைசியில் வாபஸ்... முதல் தேர்தல் ரத்தை சந்திக்கும் சிவகங்கை!
பொதுமக்களின் எதிர்ப்பை காரணம் காட்டி, அந்த வார்டில் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் யாரும் வேட்பாளரை நிறுத்தவில்லை. இதனால் வேட்புமனுத்தாக்கலும் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் தான், 8-வது வார்டைச் சேர்ந்த ஒருவரின் முன்மொழிவோடு 9-வது வார்டில் வசிக்கும்  காளியப்பன் என்பவரின் மனைவி மாரி (30) என்பவர் 8 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தார். 

இதை அறிந்த அந்த வார்டு மக்கள், வேட்பாளர் மாரி மீது கடும் கோபம் கொண்டனர். அது மட்டுமின்றி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யாத நிலையில், இன்று இறுதிநாளில் அவர் போட்டியின்றி தேர்வாகும் சூழல் உருவானது. இந்நிலையில், வார்டு மக்களின் எதிர்ப்பால் தனது வேட்புமனுவை மாரி வாபஸ் பெற்றார். 


‛தனி’ வார்டிற்கு எதிர்ப்பு: மனுதாக்கல் செய்த ஒரே வேட்பாளரும் கடைசியில் வாபஸ்... முதல் தேர்தல் ரத்தை சந்திக்கும் சிவகங்கை!

இதைத் தொடர்ந்து 8 வது வார்டில் போட்டியிட்ட ஒரு வேட்பாளரும் வாபஸ் பெற்றதால், மறுதேர்தலை அந்த வார்டு சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாரி, ‛அங்குள்ள மக்கள் விரும்பாத போது, அங்கு வெற்றி பெற்று பயனில்லை என்பதால், அவர்கள் கருத்துக்கு மதிப்பளித்து மனுவை வாபஸ் பெற்றதாக,’ கூறியுள்ளார். அதே நேரத்தில் தங்கள் வார்டை, பொது வார்டாக மாற்றினால் மட்டுமே தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று அப்பகுதி மக்கள் உறுதியாக உள்ளனர். இதன் மூலம் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ரத்தை சந்திக்கும் முதல் வார்டாக கானாடுகாத்தான் பேரூராட்சி விளங்கப்போகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
Embed widget