ரூ.5000 பணத்தை எடுத்தது போல், வாக்குகளையும் ஷார்ப்பாக செலுத்துங்கள்! - திண்டிவனத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு...
தமிழ்நாடு டீம் மற்றும் டெல்லி டீமுக்கு இடையேயான போட்டி. இதில் டெல்லி அணியை வீட்டுக்கு அனுப்பி, தமிழ்நாடு அணியை ஜெயிக்க வைக்க வேண்டும்!

விழுப்புரம் : மகளிர்கள் வங்கிக் கணக்கில் செலுத்திய ஐயாயிரம் ரூபாயை எங்கு மோடி எடுத்து விடுவாரோ என்ற பயத்தில் காலையிலே சென்று ஷார்பாக பணத்தை எடுத்தீர்கள் அதேபோன்று வாக்குப்பதிவு அன்றைக்கு காலையிலே சென்று சார்பாக உங்களது ஓட்டுகளை செலுத்த வேண்டும் என திண்டிவனம் விசிக வேட்பாளர் வன்னியரசு வை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தனி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி விசிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வன்னி அரசை ஆதரித்து திண்டிவனம் செஞ்சி பேருந்து நிலையம் அருகே தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சார வாகனத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார், அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
போராடி சிறை சென்றவர் தான் நம் வேட்பாளர், அவரது குரல் சட்ட மன்றத்தில் ஒலிக்க வேண்டும், அவருக்கு நீங்கள் பானை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும், உங்களிடம் கேட்பது எல்லாம் இது ஒன்று தான், நானும் ஒரு வேட்பாளர் தான், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறேன், என் தொகுதிக்கு செல்லாமல் இங்கு வந்து உங்களிடம் ஒட்டு கேட்க காரணம் என் வெற்றியை விட இங்கு போட்டியிடும் வன்னியரசுவின் வெற்றி நமக்கு மிக முக்கியம் அதனால் தான் இங்கு உங்களை தேடி வந்துள்ளேன், வாக்கு சேகரிக்கும் வேலையை அனைவரும் செய்ய வேண்டும் ஒவ்வொரு பகுதிக்கும் செல்ல வேண்டும்,
இந்த பகுதிக்கு தலைமை அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம், மரக்காணம் - திண்டிவனம் நான்கு வழி சாலை, இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்காக திண்டிவனம் அருகே சிப்காட், மீனவ பகுதிகளில் மீன் இறங்கு தளங்கள், வண்டி பாளையத்தில் பறவைகள் சரணாலயம் என இவ்வளவு திட்டங்களை செய்துள்ளோம், இதற்கு மேலும் இங்கு திட்டங்களை கொண்டு வர நீங்கள் வன்னியரசுக்கு வாக்கு அளிக்க வேண்டும், தமிழக மக்களுக்கு மகளிர் உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் பிடிக்கவில்லை அதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள் ஆனால் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் தருவதை தடுக்க பார்க்கிறீர்களா என்று நம்முடைய தமிழக முதல்வர் 5000 ரூபாயாக கொடுத்தார்கள்,
அதையும் அக்கவுண்டில் பேலன்ஸ் இல்லை என்று மோடி எடுத்து விடுவாரோ என்ற பயத்தில் காலையிலேயே சென்று ஷார்ப்பாக பணத்தை எடுத்து விட்டீர்கள் அதேபோன்று வருகின்ற 23-ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் உங்களது வாக்குகளை பானை சின்னத்திற்கு செலுத்தி வன்னியரசு அவர்களை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்,
எடப்பாடி பழனிசாமி அவர்கள் சசிகலாவின் காலில் விழுந்த புகைப்படத்தை மக்களிடம் காட்டிய உதயநிதி, "முரட்டுத் தொண்டனைப் பார்த்திருப்பீர்கள், ஆனால் இதோ பாருங்கள் 'முரட்டு அடிமை'. நம்மால் இப்படி யாரின் காலிலும் விழ முடியாது, சங்கிக் கூட்டங்களுக்குத் தலைவணங்கவும் முடியாது. இது தமிழ்நாடு டீம் மற்றும் டெல்லி டீமுக்கு இடையேயான போட்டி. இதில் டெல்லி அணியை வீட்டுக்கு அனுப்பி, தமிழ்நாடு அணியை ஜெயிக்க வைக்க வேண்டும்," என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்



















