மேலும் அறிய

10 ஆண்டுகளில் பிரதமர் மோடி நினைத்து இருந்தால் கச்சத்தீவை மீட்டிருக்க முடியாதா? டி.கே. ரெங்கராஜன் கேள்வி

இந்தியாவில் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்படும் நேரத்தில் குரல் கொடுத்த கட்சி திமுக. இந்தத் தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமா? வேண்டாமா?

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது.


10 ஆண்டுகளில் பிரதமர் மோடி நினைத்து இருந்தால் கச்சத்தீவை மீட்டிருக்க முடியாதா? டி.கே. ரெங்கராஜன் கேள்வி

கூட்டத்தில் முன்னாள் எம்.பியும் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் டி.கே. ரெங்கராஜன் கலந்துகொண்டு பேசுகையில் ,10 பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும். தமிழகத்தில் இண்டியா கூட்டணி கட்சியின் வெற்றி இந்திய அளவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். வடமாநிலங்களிலும் பாஜகவுக்கு சரிவு தொடங்கியுள்ளது. அவர்களின் வெற்றி கடந்த காலத்தை விட குறைந்துள்ளது. இண்டியா கூட்டணியை மக்கள் பரவலாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்தியாவில் வலதுசாரிகள் பலமாக காலூன்ற கூடிய சூழ்நிலையை நாம் பார்த்துக் கொண்டுள்ளோம். தென்னிந்தியாவில் வலதுசாரிகள் வெற்றி பெற அனுமதித்தது கிடையாது. இந்தியாவில் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்படும் நேரத்தில் குரல்கொடுத்த கட்சி திமுக. இந்தத் தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமா? வேண்டாமா? என முடிவு செய்யக்கூடிய தேர்தல்.


10 ஆண்டுகளில் பிரதமர் மோடி நினைத்து இருந்தால் கச்சத்தீவை மீட்டிருக்க முடியாதா? டி.கே. ரெங்கராஜன் கேள்வி

மத்தியில் ஆளும் பாஜக ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறது. இதனை பாஜகவில் உள்ளவர்களும் யோசிக்க வேண்டும். இந்த நாட்டின் ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வருவது, நாட்டு மக்களின் உரிமைகளை முற்றிலுமாக அழிப்பது, அப்படிப்பட்ட புதிய சூழ்நிலை நிலவுகிறது. பாஜக என்பது ஒரு பாசிச இயக்கத்தின் அரசியல் பிரிவுதான். அது திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளைப் போன்று ஒரு கட்சியே அல்ல. இந்தியாவில் உள்ள அனைத்து இயக்கங்களை அளிப்பது மூலமாக ஒரு கட்சி ஆட்சியை கொண்டு வருவது ஒரு நாடு ஒரு மதம் என்ற ஆட்சியை கொண்டு வருவது என இவற்றை நோக்கி செல்கிறது. இதற்குப் பின்னணியாக இருப்பது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தத்துவம். அவர்கள் இந்த நாட்டின் அரசியல் சட்டத்தை ஏற்றுக்கொண்டது கிடையாது. மத ரீதியாக இந்த நாட்டின் அரசியல் சட்டங்கள் இருக்க வேண்டும் என வாதிட்டவர்கள். ஆணாதிக்கம் நிறைந்த தத்துவம்தான் ஆர்எஸ்எஸ்.


10 ஆண்டுகளில் பிரதமர் மோடி நினைத்து இருந்தால் கச்சத்தீவை மீட்டிருக்க முடியாதா? டி.கே. ரெங்கராஜன் கேள்வி

ஏற்கனவே மாநிலங்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் பரிசீலிக்க வேண்டும். இந்தத் தேர்தலின் முக்கியமான அம்சம் என்னவென்றால் தொகுதி வளர்ச்சி, மாநிலங்களுக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு, மாநில உரிமைகளைப் மீட்பது என இவைதான் பொருளாக வருகிறபோது எந்த காரணம் கொண்டும் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இனி தேர்தல் இல்லை. இந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி நினைத்து இருந்தால் கச்சத்தீவை மீட்டிருக்க முடியாதா?. அரசு அதிகாரியாக இருந்து தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ளவர் கச்சத்தீவை திமுக தாரை வார்த்துவிட்டது என்கிறார். கச்சத்தீவு விவகாரத்தில் அப்போதே திமுக தலைவர் கருணாநிதி தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் என்பது ஆவணங்களில் உள்ளது. அப்போது நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து திமுக உறுப்பினர் இரா.செழியன் கண்டித்து பேசி உள்ளார். அவர் தற்போது உயிருடன் இல்லை. ஆனால் இது குறித்து பேசிய மற்றொருவர் விஐடி விஸ்வநாதன். இவர் அப்போது நாடாளுமன்றத்தில் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இவை அனைத்தும் நாடாளுமன்ற பதிவுகளில் இருக்கக்கூடிய விஷயம்.


10 ஆண்டுகளில் பிரதமர் மோடி நினைத்து இருந்தால் கச்சத்தீவை மீட்டிருக்க முடியாதா? டி.கே. ரெங்கராஜன் கேள்வி

இதுகுறித்து மோடி பேசினால் எனக்கு கவலை இல்லை. ஆனால் ஒரு அரசு அதிகாரியாக இருந்தவர், வெளியுறவுத்துறை அதிகாரியாக இருந்தவர் இன்னும் அரசு ஆவணங்களை வைத்திருப்பவர் இப்படி திடீரென கூறுவது தான் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக மற்றும் இதர கட்சிகளின் பங்கு என்ன?. எனவே ஜனநாயகத்தை பாதுகாக்க, பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் வெளிப்படையான விஷயம். எனவே, இண்டியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.