![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Hosur Corporation Election: ஒசூரில், பாஜக வேட்பாளரை வீழ்த்தி சட்டக்கல்லூரி மாணவி வெற்றி..! முழு விவரம்..
1146 வாக்குகள் பெற்ற மாணவி யாஷ்வினி, 640 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தியுள்ளார்.
![Hosur Corporation Election: ஒசூரில், பாஜக வேட்பாளரை வீழ்த்தி சட்டக்கல்லூரி மாணவி வெற்றி..! முழு விவரம்.. hosur corporation election 2022 results 22 year age 3rd year law college student young DMK candidate yashvini won ward 13 Hosur Corporation Election: ஒசூரில், பாஜக வேட்பாளரை வீழ்த்தி சட்டக்கல்லூரி மாணவி வெற்றி..! முழு விவரம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/22/3e40cb7bf64b1fea420d16151e6e9918_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஓசூர் மாநகராட்சியில் திமுக சார்பில் போட்டியிட்ட சட்டக்கல்லூரி மாணவி வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் 95%க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 21 மாநகராட்சிகளிலும் தொடர்ந்து பெருவாரியான வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றி வருகிறது. திமுக கூட்டணி 95 சதவீதத்துக்கும் அதிகமான நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை கைப்பற்றியது.
இந்த நிலையில், ஓசூர் மாநகராட்சி 13வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட யாஷ்வினி 22 வயதுடைய சட்டக் கலை கல்லூரியில் மூன்றாவது ஆண்டு பயிலும் மாணவி யாஷ்வினி வெற்றி பெற்றுள்ளார். 1146 வாக்குகள் பெற்ற அவர், 640 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தியுள்ளார்.
#TNLocalbodyElection2022 | ஓசூர்: திமுக சார்பில் போட்டியிட்ட 22 வயது சட்டக் கல்லூரி மாணவி யாஷ்வினி வெற்றி https://t.co/wupaoCz9iu | #localbodyelection2022 #Election2022 #TnLocalBodyElection #TNElectionResults #DMK pic.twitter.com/Z91S5WLFXQ
— ABP Nadu (@abpnadu) February 22, 2022
அதிமுகவின் கோட்டையாக விளங்கிய பல பகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதால் அக்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள், நிர்வாகிகள், ஆதரவாளர்கள் பல இடங்களில் பட்டாசு வைத்து, இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
மக்களவை, சட்டப்பேரவை, ஊரக உள்ளாட்சியைத் தொடர்ந்து நகர்ப்புற தேர்தலில் திமுக அமோக வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)