மேலும் அறிய

Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தொடங்கியது முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்குப்பதிவு பணி!

Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்கு பதிவு தொடங்கியுள்ளது.

Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய  முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்கு பதிவு செய்வதை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. 

இத்தொகுதியில் உள்ள 321 முதியவர்கள் மற்றும் 31 மாற்றுத் திறனாளிகளிடம் வாக்குப்பதிவு செய்யும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தபால் வாக்குப் பதிவு மொத்தம் 2 நாட்கள் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.  

அதேபோல் அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்  தொடரப்பட்ட வழக்கில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் தொடர்பாக யூகத்தின் தரப்பில் வழக்கு தொடர்வதா என, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வழக்கு விசாரணை:

ஈரோடு இடைதேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான அதிமுகவின் மாநிலங்களவை எம்.பி., சி.வி. சண்முகம் வழக்கு தொடர்ந்திருந்தார்.  அந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் ப்ரத சக்ரவர்த்தி ஆகீயோர் முன்னிலையில் விசாரணைக்கு இன்று வந்தது.  அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில்  தேர்தல் பணியாளர்கள்  நேரடியாக வீடு வீடாக சென்று பூத் ஸ்லிப் வழங்கும்போது, இறந்தவர்கள் பெயரில் பூத் ஸ்லிப் இருந்தால் அது விநியோகிக்கப்படுவதில்லை. மேலும், அதற்கென இறந்தவர்களுக்கென தனிப் பட்டியல் உருவாக்கப்படுகிறது. தேர்தல் பாதுகாப்பு பணிக்கான சி.ஆர்.பி.எஃப் வீரரகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பறக்கும் படை அமைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. தேர்தலுக்குரிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டு,  ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் நியாயமான மற்றும் நேர்மையான முறையில் நடத்தப்படும். அதோடு, யூகத்தின் அடிப்படையிலேயே சி.வி. சண்முகம்  வழக்கு தொடர்ந்துள்ளார் எனவும், என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது. 

வழக்கு விவரம்:

 அதிமுக மாநிலங்களவை எம்.பி சி.வி. சண்முகம் தாக்கல் செய்த மனுவில், ”தொகுதியின் வாக்காளர் பட்டியலை சரி பார்த்த போது, அதில் இடம் பெற்றிருந்த பலர் தொகுதியில் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை. பல வாக்காளர்களின் பெயர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றுள்ளது. 2021ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்கு வித்தியாசம் 8 ஆயிரத்து 500 வாக்குகள் என்பதால், தற்போது இறந்தவர்கள், தொகுதியில் இல்லாதவர்கள் என 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்களில் கள்ள ஓட்டு போட வாய்ப்புள்ளது. எனவே, தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். பூத் ஸ்லீப் அடிப்படையில் அல்லாமல், வாக்காளர் அடையாள அட்டை அடிப்படையில் வாக்காளர்களை சரிபார்த்து வாக்களிக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக, புகார் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அடுத்தடுத்து பிரச்சாரத்தை ரத்து செய்யும் விஜய்; அதிர்ச்சியில் தொண்டர்கள் - தவெகவில் நடப்பது என்ன?
அடுத்தடுத்து பிரச்சாரத்தை ரத்து செய்யும் விஜய்; அதிர்ச்சியில் தொண்டர்கள் - தவெகவில் நடப்பது என்ன?
தேர்தல் கமிஷன் இன்று மத்திய அரசின் எடுபிடி கமிஷனாக மாறிவிட்டது - வைகோ பகீர் குற்றச்சாட்டு..!
தேர்தல் கமிஷன் இன்று மத்திய அரசின் எடுபிடி கமிஷனாக மாறிவிட்டது - வைகோ பகீர் குற்றச்சாட்டு..!
தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமானது; முத்தரசன் பகிரங்கக் குற்றச்சாட்டு...
தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமானது; முத்தரசன் பகிரங்கக் குற்றச்சாட்டு...
வாக்கு சேகரிக்க நடுக்கடலுக்கே சென்ற வேட்பாளர்! ஆச்சரியத்தில் ஆழ்ந்த மீனவர்கள்!
வாக்கு சேகரிக்க நடுக்கடலுக்கே சென்ற வேட்பாளர்! ஆச்சரியத்தில் ஆழ்ந்த மீனவர்கள்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: கடலூர் பிரச்சாரம் திடீர் ரத்து; தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்- என்ன சொல்லிருக்கார் தெரியுமா?
TVK Vijay: கடலூர் பிரச்சாரம் திடீர் ரத்து; தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்- என்ன சொல்லிருக்கார் தெரியுமா?
திமுக கூட்டணியில் திருமாவளவன் கூனிக் குறுகி நிற்கிறார்...! அன்புமணி ராமதாஸ் அதிரடித் தாக்கு!
திமுக கூட்டணியில் திருமாவளவன் கூனிக் குறுகி நிற்கிறார்...! அன்புமணி ராமதாஸ் அதிரடித் தாக்கு!
Parthiban: சீமானுக்கு தொண்டை காயும்.. மண்டை காயாது.. ரைமிங்கில் பேசிய பார்த்திபன்!
Parthiban: சீமானுக்கு தொண்டை காயும்.. மண்டை காயாது.. ரைமிங்கில் பேசிய பார்த்திபன்!
TN Election: தேர்தல் நேரத்தில் மட்டும் தினம் தினம் வர்றீங்க? டெய்லியும் மக்களை பாக்க வரலாமே?
TN Election: தேர்தல் நேரத்தில் மட்டும் தினம் தினம் வர்றீங்க? டெய்லியும் மக்களை பாக்க வரலாமே?
வாய்ப்பு கொடுத்தும் கோட்டைவிட்ட தவெக! அதிருப்தியில் தொண்டர்கள்.. ரத்தான கடலூர் பிரச்சாரம்
வாய்ப்பு கொடுத்தும் கோட்டைவிட்ட தவெக! அதிருப்தியில் தொண்டர்கள்.. ரத்தான கடலூர் பிரச்சாரம்
கம்பம் தவெக வேட்பாளருக்கு நடிகர் பொன்னம்பலம் வாக்கு சேகரிப்பு – விஜய் குறித்து பேசிய வீடியோ வைரல்
கம்பம் தவெக வேட்பாளருக்கு நடிகர் பொன்னம்பலம் வாக்கு சேகரிப்பு – விஜய் குறித்து பேசிய வீடியோ வைரல்
Chennai New Commissioner: அருண் மாற்றம்! சென்னைக்கு புது காவல் ஆணையர் - யார் இந்த அபின் தினேஷ் மோடக்?
Chennai New Commissioner: அருண் மாற்றம்! சென்னைக்கு புது காவல் ஆணையர் - யார் இந்த அபின் தினேஷ் மோடக்?
கோடை விடுமுறைக்கு கூடுதல் ரயில்கள் – திருநெல்வேலி முதல் எழும்பூர், தாம்பரம் வரை சிறப்பு சேவை
கோடை விடுமுறைக்கு கூடுதல் ரயில்கள் – திருநெல்வேலி முதல் எழும்பூர், தாம்பரம் வரை சிறப்பு சேவை
Embed widget