மேலும் அறிய

Erode By Election: நள்ளிரவு 12 மணிவரை ஆலோசனை நடத்திய எடப்பாடி - வேட்பாளர் யார்? அடிபடும் பெயர்கள் இதுதான்...!

Erode By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து அதிமுக இடைக்கால பொதுச் செயளாலர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று நள்ளிரவு 12 மணி வரை ஆலோசனை நடத்தியுள்ளார்.

Erode By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி நேற்று நள்ளிரவு 12 மணி வரை ஆலோசனை நடத்தியுள்ளார். நேற்று  இரவு 7 மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டம்  நள்ளிரவு 12 க்கு நிறைவு பெற்றுள்ளது. 

ஈரோடு வில்லரசன் பட்டியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன்,
கே.வி. ராமலிங்கம்,  செல்லூர் ராஜூ , உதயகுமார் , உடுமலை ராதாகிருஷ்ணன் எஸ்.பி.வேலுமணி , விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இரவு 7 மணிக்கு தொடங்கிய ஆலோசனை நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைந்தது.

திண்ணைப் பிரச்சாரம் 

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப்பின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் உதயகுமார் , அம்மாவின் சாதனைகளையும் , எடப்பாடி பழனிசாமி சாதனைகளையும் மக்களுக்கு எடுத்துக்கூறி வாக்கு கேட்போம் என்றும் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு  வெற்றி பிரகாசமாக உள்ளது என்றார். 

அ.தி.மு.க.வினப் பொறுத்தவரையில்  உட்கட்சியில் மட்டுமின்றி, கூட்டணி தரப்பினர் மத்தியிலும் இழுபறி நீடித்து வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில், இதுவரை அ.தி.மு.க. வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படவில்லை. அ.தி.மு.க தரப்பு வேட்பாளர் பட்டியலில் ஈரோடு முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ தென்னவன் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கே.சி பழனிசாமிக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.   அ.தி.மு.க. இடைத்தேர்தலில் நிற்பதற்கு ஆதரவு அளிக்க பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு சென்று எடப்பாடி பழனிசாமி தரப்பினரும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் நேரில் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், பா.ஜ.க.வினர் தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறியதாவது,

கொங்கு மண்டலம் அதிமுகவின்  எஃகு கோட்டை இதனை யாராலும் தகர்க்க முடியாது கூறியுள்ளார். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலான அணியின் தேர்தல் பணிக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “கொங்கு மண்டலம் அதிமுகவின் எஃகு கோட்டை. இதனை யாராலும் தகர்க்க முடியாது. அதிமுகவின் வாக்குகள் (ஓ. பன்னீர் செல்வம் அணி, டிடிவி தினகரன் அணி) சிதறிவிடும் என்பதெல்லாம் இந்த மாவட்டத்தில் செல்லுபடியாகாது. மேலும், வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் நாடகள் உள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு நாங்கள் உரிய பதிலை அளித்திருக்கிறோம். மேலும் இந்த இடைத்தேர்தல் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தும்" என அவர் கூறியுள்ளார். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget