மேலும் அறிய

Erode By Election: நள்ளிரவு 12 மணிவரை ஆலோசனை நடத்திய எடப்பாடி - வேட்பாளர் யார்? அடிபடும் பெயர்கள் இதுதான்...!

Erode By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து அதிமுக இடைக்கால பொதுச் செயளாலர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று நள்ளிரவு 12 மணி வரை ஆலோசனை நடத்தியுள்ளார்.

Erode By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி நேற்று நள்ளிரவு 12 மணி வரை ஆலோசனை நடத்தியுள்ளார். நேற்று  இரவு 7 மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டம்  நள்ளிரவு 12 க்கு நிறைவு பெற்றுள்ளது. 

ஈரோடு வில்லரசன் பட்டியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன்,
கே.வி. ராமலிங்கம்,  செல்லூர் ராஜூ , உதயகுமார் , உடுமலை ராதாகிருஷ்ணன் எஸ்.பி.வேலுமணி , விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இரவு 7 மணிக்கு தொடங்கிய ஆலோசனை நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைந்தது.

திண்ணைப் பிரச்சாரம் 

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப்பின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் உதயகுமார் , அம்மாவின் சாதனைகளையும் , எடப்பாடி பழனிசாமி சாதனைகளையும் மக்களுக்கு எடுத்துக்கூறி வாக்கு கேட்போம் என்றும் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு  வெற்றி பிரகாசமாக உள்ளது என்றார். 

அ.தி.மு.க.வினப் பொறுத்தவரையில்  உட்கட்சியில் மட்டுமின்றி, கூட்டணி தரப்பினர் மத்தியிலும் இழுபறி நீடித்து வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில், இதுவரை அ.தி.மு.க. வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படவில்லை. அ.தி.மு.க தரப்பு வேட்பாளர் பட்டியலில் ஈரோடு முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ தென்னவன் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கே.சி பழனிசாமிக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.   அ.தி.மு.க. இடைத்தேர்தலில் நிற்பதற்கு ஆதரவு அளிக்க பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு சென்று எடப்பாடி பழனிசாமி தரப்பினரும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் நேரில் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், பா.ஜ.க.வினர் தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறியதாவது,

கொங்கு மண்டலம் அதிமுகவின்  எஃகு கோட்டை இதனை யாராலும் தகர்க்க முடியாது கூறியுள்ளார். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலான அணியின் தேர்தல் பணிக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “கொங்கு மண்டலம் அதிமுகவின் எஃகு கோட்டை. இதனை யாராலும் தகர்க்க முடியாது. அதிமுகவின் வாக்குகள் (ஓ. பன்னீர் செல்வம் அணி, டிடிவி தினகரன் அணி) சிதறிவிடும் என்பதெல்லாம் இந்த மாவட்டத்தில் செல்லுபடியாகாது. மேலும், வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் நாடகள் உள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு நாங்கள் உரிய பதிலை அளித்திருக்கிறோம். மேலும் இந்த இடைத்தேர்தல் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தும்" என அவர் கூறியுள்ளார். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
FM Nirmala Sitharaman: ”ரூபாய்” என்பது தமிழே கிடையாது, தவிர்க்க வேண்டிய மொழி பேரினவாதம் - நிதியமைச்சர் ஆவேசம்
FM Nirmala Sitharaman: ”ரூபாய்” என்பது தமிழே கிடையாது, தவிர்க்க வேண்டிய மொழி பேரினவாதம் - நிதியமைச்சர் ஆவேசம்
Donald Trump: உங்க இஷ்டத்துக்கு ஆர்டர் போடுவீங்களா? ட்ரம்ப் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், பொதுமக்கள் ஹாப்பி
Donald Trump: உங்க இஷ்டத்துக்கு ஆர்டர் போடுவீங்களா? ட்ரம்ப் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், பொதுமக்கள் ஹாப்பி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
FM Nirmala Sitharaman: ”ரூபாய்” என்பது தமிழே கிடையாது, தவிர்க்க வேண்டிய மொழி பேரினவாதம் - நிதியமைச்சர் ஆவேசம்
FM Nirmala Sitharaman: ”ரூபாய்” என்பது தமிழே கிடையாது, தவிர்க்க வேண்டிய மொழி பேரினவாதம் - நிதியமைச்சர் ஆவேசம்
Donald Trump: உங்க இஷ்டத்துக்கு ஆர்டர் போடுவீங்களா? ட்ரம்ப் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், பொதுமக்கள் ஹாப்பி
Donald Trump: உங்க இஷ்டத்துக்கு ஆர்டர் போடுவீங்களா? ட்ரம்ப் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், பொதுமக்கள் ஹாப்பி
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Embed widget