திமுக வீசிய வலை... பெரம்பூரில் மொத்தமாய் விலைபோன எதிர்க்கட்சி நிர்வாகிகள்! நடந்தது என்ன.?
பெரம்பூரில் திமுக, தவெக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவினாலும், அங்கு நடக்கும் "நிர்வாகிகள் விற்பனை" அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை : தமிழக சட்டமன்றத் தேர்தலின் மிக முக்கியத் தொகுதியாகப் பார்க்கப்படும் பெரம்பூரில், தேர்தல் களம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. திமுக, தவெக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவினாலும், அங்கு நடக்கும் "நிர்வாகிகள் விற்பனை" அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக சார்பில் வேட்பாளர் ஆர் டி சேகர் தவேக சார்பில் நடிகர் விஜய் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திலகபாமா நாம் தமிழர் கட்சி சார்பில் வெற்றி தமிழன் நான்கு பேரும் களத்தில் முக்கியமானவர்கள் .இந்த நான்கு பேரும் முக்கிய வேட்பாளர்கள் ஏற்கனவே அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அங்கு இரட்டை இலை போட்டி போடவில்லை என்று நிர்வாகிகள் மத்தியில் மந்தமும் சோர்வும் காணப்பட்டது.
இந்நிலையில் திலகபாமா பண விஷயத்தில் கராராக இருந்ததால் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி நிலவியதாக கூறப்படுகிறது . அதிமுக சார்பில் தேர்தல் பொறுப்பாளர் சேவியர் வேட்பாளரிடம் பல முயற்சி எடுத்தும் பலன் அளிக்கவில்லை. தவெக வேட்பாளர் விஜய் அவருடைய மாவட்ட செயலாளர் சிவா மூலமாக பிரச்சாரத்தை மேற்கொண்டார், நாம் தமிழர் வெற்றி தமிழனும் பணபலம் இல்லாத காரணத்தால் பிரச்சாரம் வெளியில் தெரியாமல் போனது.
இந்நிலையில் தூத்துக்குடி ஜோயல் உள்ளிட்ட நிர்வாகிகளை திமுக தலைமை பெரம்பூர் தேர்தல் பொறுப்பாளராக அறிவித்த பிறகு தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியது. காரணம் பண பலம். திமுகவினர் தவெகவிற்கு பலம் உள்ளதை அறிந்து அனைத்து கட்சிகளையும் விலைக்கு வாங்க வேண்டும் என்று முடிவு செய்து முதலில் அதிமுக நிர்வாகிகளை குறிவைத்து பேச்சுவார்த்தை தொடங்கியது.
பணபலம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த நிர்வாகிகளுக்கு ஆசை வார்த்தை காட்டியவுடன் நமது கட்சி தான் இங்கு நிற்கவில்லையே ஏற்கனவே கடந்த ஐந்தாண்டு காலமாக செலவு பண்ணி நொந்து நூலாகிப் போயிருந்த நிர்வாகிகளுக்கு புது தொம்பை கொடுத்தது திமுகவின் ஆஃபர் பகுதி செயலாளர்கள் வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை முதலில் ஆர் டி சேகரே வாட்ஸப் காலில் தொடர்பு கொண்டு அனைவரிடம் பேசி முதல் வேலையை முடித்து தங்கு தடை இன்றி பணம் செல்வதை உறுதி செய்தனர் அதேபோல அதிமுக நிர்வாகிகளுக்கும் அவர்களிடம் உள்ள வாக்குக்கும் முதலில் பணம் கொடுக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. இது முதல் வெற்றியாக திமுகவினர் பார்க்கின்றனர்.
எந்த தேர்தலிலும் நடக்காத ஒன்றை இந்த தேர்தலில் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் வீடு வீடாக சென்று எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் திமுக நிர்வாகிகள் பணம் பட்டுவாடா செய்தார்கள். இதை தடுப்பதற்கு எந்த எதிர்க்கட்சி முன் வரவில்லை காரணம் அனைவரும் விலை போய் விட்டனர். பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் ஏன் பாமக கட்சி தமாக நிர்வாகிகளும் பணம் பெற்றுக் கொண்டு அமைதியாகி விட்டனர். தவெக பகுதி செயலாளர் ஒருவரும் அதில் நான்கு வட்ட செயலாளர்களும் திமுக வேட்பாளர் இடம் பணம் வாங்கிக்கொண்டு அமைதியாகிவிட்டனர்.
ஒட்டுமொத்த எதிர்க்கட்சி நிர்வாகத்தையும் விலைக்கு வாங்கியதாக கூறப்படும் திமுக அந்த தொகுதியில் இருக்கக்கூடிய 90 சதவீத மக்களுக்கு 1000 முதல் 2000 ரூபாய் வரை பணம் பட்டுவாடா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பெரம்பூர் தேர்தல் முதலில் விஜய் என்று இருந்த நிலையில் பெரம்பூர் தொகுதிக்கு மட்டும் திமுக 50 கோடி ரூபாயை செலவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், பணத்தால் விஜய் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்படுவாரோ என்ற நிலை உருவாகி உள்ளது. எனவே மே 4 ஆம் தேதி என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ட்ரெண்டிங் செய்திகள்



















