திடீர் டுவிஸ்ட்.! விஜய்க்கு ஷாக் கொடுத்த கிறிஸ்தவ அமைப்புகள்.! ஒட்டுமொத்தமாக ஸ்டாலினை சந்தித்து ஆதரவு
Christian organizations supported DMK alliance : சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த, கிறிஸ்தவ ஆயர்கள் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். அப்போது வெளிநாட்டு பங்களிப்பு சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்கும், சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாவலராக விளங்குவதற்கும் நன்றி தெரிவித்தனர்.

நெருங்கும் தேர்தல்- கிறிஸ்தவ அமைப்பு ஆதரவு
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரச்சாரத்தை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் வீதி வீதியாக கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திமுகவிற்கு எதிராக களம் இறங்கியுள்ள விஜய், ஆட்சி பிடிக்கும் வகையில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறது. மேலும் தவெகவிற்கு சிறுபான்மையினரின் வாக்குகளை ஈர்க்கவும் காய் நகர்த்தி வந்தார். மேலும் கிறிஸ்தவ அமைப்புகள் தங்களுக்கு ஆதரவு தரும் என காத்திருந்தார். இந்த நிலையில் பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்திருப்பது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டாலினை சந்தித்த கிறிஸ்தவ அமைப்புகள்
அந்த வகையில் இன்று காலை தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலினை சந்தித்து தங்களது ஆதரவு தெரிவித்துள்ளனர். ரோமன் கத்தோலிக்க - இறைச்சபை ஆட்சிப் பயிற்சிப் பள்ளியின் சென்னை மயிலாப்பூர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் ஏ.எம். சின்னப்பா, அருட்தந்தை ஆல்டோ, தென்னிந்தியத் திருச்சபையின் (CSI) ஆயர் அருட்தந்தை பவுல் பிரான்சிஸ் ரவிச்சந்திரன், பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சி. பெர்னந்தாஸ் ரத்தின ராஜா, செபாஸ்டியன், எபெனேசர், இந்திய தேசிய தேவாலயங்கள் பேரவை பொதுச் செயலாளர் (NCCI) அருட்தந்தை ஆசிர் எபெனேசர், தமிழ்நாடு ஆயர் பேரவிைன் (ரோமன் கத்தோலிக்கம்) துணை பொதுச் செயலாளர் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப், அருட்தந்தை டாக்டர். வின்சென்ட் சின்னதுரை, ஜேக்கபைட் சிரியன் ஆர்த்தடாக்ஸ் திருச்சபையின் அருட்தந்தை பேசில்,
கிறிஸ்தவ அமைப்புகளின் நிர்வாகிகள்
ஜீசஸ் கால்ஸ் அமைப்பின் திருமதி ஸ்டெல்லா ரோமோலா பால் தினகரன், டேனியல் டேவிட்சன், ஏ.ஜி. திருச்சபையின் போதகர் ஆலன், இந்திய நற்செய்தி திருச்சபையின் (Evangelical Church of India) துணைத் தலைவர் ஆயர் கதிரோலி மாணிக்கம், தமிழ்நாடு லத்தீன் ஆயர் மாநாட்டின் பிரதிநிதி அருட்தந்தை பிரான்சிஸ் ஸ்டீபன், சிரியோ-மலபார் கத்தோலிக்க திருச்சபையின் அருட்தந்தை ஷெபின், இயேசு மீட்கிறார் அமைப்பின் பிரதிநிதி சகோதரர் கே. பொன் பாண்டிஇன்பரசு, சகோதரர் ஜே. ரத்தன் ராஜ், மெதடிஸ்ட் சர்ச் ஆஃப் இந்தியா மெட்ராஸ் மண்டல மாநாட்டின் பிஷப் சி.ஜி. தயானந்த், அருட்தந்தை டாக்டர் எஸ்.சி. பால் ராஜ், செல்வின் ஜெபராஜ், டெர்ரி ராக்லேண்ட்,
வெளிநாட்டு பங்களிப்பு சட்ட மசோதா
தமிழ் சுவிசேஷ லூத்தரன் தேவாலயத்தின் அருட்தந்தை பாஸ்டர் சாம்சன், இரும்புலியூர் பெந்தேகோஸ்தே மிஷனின் சகோதரர் டேவிட் பிரவீன், இம்மானுவேல் டேவிட், ஆல்வின் பிரபு, செல்வம் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்கும், சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாவலராக விளங்குவதற்கும் நன்றி தெரிவித்தனர். மேலும் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பாஜகவின் செயல்பாடுகளுக்கு எதிராக திமுக தொடர் குரல் கொடுத்து வருவதற்கும் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
ட்ரெண்டிங் செய்திகள்



















