![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
NDA Alliance: பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு; ஒதுக்கப்பட்ட ஓபிஎஸ்? யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?
தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதி பங்கீடு நிறைவு செய்யப்பட்டுள்ளது.
![NDA Alliance: பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு; ஒதுக்கப்பட்ட ஓபிஎஸ்? யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்? BJP NDA Alliance Constituency Division Completed; know party wise pmk tmc ammk seat sharing in lok sabha election 2024 NDA Alliance: பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு; ஒதுக்கப்பட்ட ஓபிஎஸ்? யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/21/c932036c559cb144c8ebaacf622e723b1711013628078332_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதி பங்கீடு நிறைவு செய்யப்பட்டு, அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நாடே மிகவும் எதிர்பார்த்த மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல், முதல் கட்டத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை முழு வீச்சில் முடுக்கி விட்டுள்ளன.
தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதி பங்கீடு நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாமக 10 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் தமாகா 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?
அமமுக பாஜக கூட்டணியில் இரண்டு தொகுதிகளைப் பெற்றுள்ளது. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (ஜான் பாண்டியன்), ஐஜேகே (இந்திய ஜனநாயகக் கட்சி - பாரிவேந்தர்), புதிய நீதிக் கட்சி (ஏ.சி.சண்முகம்), இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் (தேவ நாத யாதவ்)ஆகிய கட்சிகளுக்கு தலா 1 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
எனினும் இதில் ஓபிஎஸ் அணிக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை. அதிமுகவின் இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ் வசம் உள்ளதால் சின்னம் இல்லாமல் தவிக்கிறார் ஓபிஎஸ். தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் 3 தொகுதிகள், தனிச் சின்னத்தில் போட்டியிட்டால் 1 தொகுதி என ஓபிஎஸ்ஸுக்கு பாஜக நிபந்தனை விதித்துள்ளது.
நாளை காலை அறிவிப்பு
இதனால் பாஜக கூட்டணியில் போட்டியிடுவதா அல்லது ஆதரவு மட்டும் தெரிவிப்பதா? என்பது குறித்து நாளை காலை 10 மணிக்கு ஓ.பன்னீர் செல்வம் அறிவிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் பாஜக கூட்டணியில், கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தை விரைவில் தொடங்க உள்ளன. கோவை தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல தெலங்கானா, புதுச்சேரி மாநில ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்து, தமிழிசை மீண்டும் பாஜக உறுப்பினராகி உள்ளார். இவர் தூத்துக்குடி அல்லது தென் சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)