![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
மக்களுடைய வரிப்பணத்தில் ஊழல் செய்பவர்களை ஆதரிக்கக்கூடாது - பாரிவேந்தர் பரப்புரை
ஏழைகளின் வரிப்பணத்தில் லஞ்சம் ஊழல் செய்து, தமிழ்நாட்டை கெடுத்து விட்டதாக பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
![மக்களுடைய வரிப்பணத்தில் ஊழல் செய்பவர்களை ஆதரிக்கக்கூடாது - பாரிவேந்தர் பரப்புரை April 17 Parivendhar Keeps progress card and campaign in perambalur lok sabha election 2024 மக்களுடைய வரிப்பணத்தில் ஊழல் செய்பவர்களை ஆதரிக்கக்கூடாது - பாரிவேந்தர் பரப்புரை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/17/905375e30ba3b6e9c02197d2184df7241713353226528109_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஏழைகளின் வரிப்பணத்தில் லஞ்சம் ஊழல் செய்து, தமிழ்நாட்டை கெடுத்துவிட்டதாக பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துறையூர் பிரிவு ரோடு, பேருந்து நிலையம், பாலக்கரை உள்ளிட்ட பகுதியில் வாக்கு சேகரித்தார். அபோது தேசிய ஜனநாயக கூட்டணியினர் மற்றும் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைதொடர்ந்து பேசிய அவர், சென்னையில் ஊழல், லஞ்சம் என்றால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடும்பம் எனவும், திருச்சியில் ஊழல், லஞ்சம் என்றால் கே. என். நேரு குடும்பம் எனவும் விமர்சித்தார். மக்களுடைய வரிப்பணத்தில் ஊழல் செய்பவர்களை ஆதரிக்கக்கூடாது எனவும், லஞ்சம், ஊழல் செய்து தமிழ்நாட்டை கெடுத்து விட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)