மேலும் அறிய

MBBS in Hindi: அடுத்தடுத்து ஹிந்தியில் எம்பிபிஎஸ் படிப்புகள்; ம.பியைத் தொடர்ந்து இந்த மாநிலத்திலும் அறிமுகம் 

மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து உத்தரகாண்டில் இந்தி மொழியில் எம்பிபிஎஸ் படிப்புகள் இந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து உத்தரகாண்டில் இந்தி மொழியில் எம்பிபிஎஸ் படிப்புகள் இந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதன்மூலம் நாட்டிலேயே இரண்டாவது மாநிலமாக உத்தரகாண்டில் மருத்துவப் படிப்புகள் இந்தியில் கொண்டுவரப்படுகின்றன.  

இதுகுறித்து ம.பி. கல்வி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் தன் சிங் ராவத் கூறும்போது, ''ஆகஸ்ட் மாதத்தின் இறுதிக்குள் உத்தரகாண்ட் மருத்துவக் கல்லூரிகளில் இந்தியில் எம்பிபிஎஸ் படிப்புகள் அறிமுகம் செய்யப்படும். 

இதற்கான பாடத்திட்டங்களை, மாநில அரசு நியமித்த மருத்துவ நிபுணர்கள் குழு தயாரித்துள்ளது. இவர்கள் ஏற்கெனவே மத்தியப் பிரதேச மாடலைப் பார்த்துவிட்டு, உத்தரகாண்ட் மாடலை உருவாக்கி உள்ளனர். இந்த பாடத்திடம் ஹேம்வதி நந்தன் பஹூஹுனா மருத்துவக் கல்வி பல்கலைக்கழகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்தி மாணவர்களுக்கு வரப்பிரசாதம்

இந்தி வழியாக பள்ளிக் கல்வியை முடித்த மாணவர்களுக்கு இந்த முன்னெடுப்பு நிச்சயம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். இந்தி பாடத்தை முறையாகக் கொண்டுவர மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரும் உத்தரகாண்ட் வருவதற்கு இசைந்துள்ளார்'' என்று அமைச்சர் தன் சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

2022-லேயே அறிமுகம்

மத்தியக் கல்வி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இந்திய மொழிகளை ஊக்குவிப்பதற்கான உயர் நிலைக்குழு, மாநில மொழிகளில் மருத்துவ பாடங்களை உருவாக்குவது குறித்த பேச்சுவார்த்தையை தேசிய மருத்துவ ஆணையத்துடன் நடத்தியது. அத்துடன் மாநில மருத்துவ ஆணையம், மருத்துவப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் மாநில மொழிகளில் மருத்துவம் குறித்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது. 

இந்த நிலையில் நாட்டிலேயே முதல் முறையாக, மத்தியப் பிரதேசத்தின் 13 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, உடற்கூறியல், உடலியல் மற்றும் உயிர் வேதியியல் ஆகிய மூன்று எம்பிபிஎஸ் பாடங்கள் இந்தியில் கற்பிக்கப்பட்டு வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  கடந்த ஆண்டுஅக்டோபர் 16ஆம் தேதி போபாலில் மொழிபெயர்க்கப்பட்ட எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு புத்தகங்களை வெளியிட்டார். 

இதைத் தொடர்ந்து உத்தரகாண்டில் இந்தி மொழியில் எம்பிபிஎஸ் படிப்புகள் இந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதன்மூலம் நாட்டிலேயே இரண்டாவது மாநிலமாக மருத்துவப் படிப்புகள் இந்தியில் கொண்டுவரப்படுகின்றன.  

என்ன காரணம்?

பெரும்பாலான மாணவர்கள் தங்களின் தாய்மொழிகளில் பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு, கல்லூரிக்குள் நுழைகின்றனர். அவர்களுக்கு உடனடியாக ஆங்கிலத்தில் மருத்துவக் கல்வி வழங்கப்படுவதால், கற்கத் திணறுகின்றனர். கிராமப் புறங்களைச் சேர்ந்த மாணவர்கள், தங்களின் சொந்த ஊர்களிலோ, கிராமங்களிலோ பணியாற்ற விரும்புகின்றனர். தாய்மொழி மூலம் மருத்துவக் கல்வியை அளிப்பதன்மூலம் கிராமங்களில் மருத்துவ வசதிகளை வழங்க முடியும். எனினும் இதன் மூலம் மருத்துவக் கல்வியின் தரம் பாதிக்கப்படாது என்று இந்திய மொழிகளை ஊக்குவிப்பதற்கான உயர் நிலைக் குழுவின் தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி தெரிவித்திருந்தார் 

தமிழ்நாட்டில் எப்படி?

தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் மருத்துவப் பாடங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணியை கடந்த ஆண்டே  நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PM modi:
PM modi: "அவங்க என்ன வேணா பண்ணட்டும்.. நாங்க இப்படியே தான் இருப்போம்" - பிரதமர் மோடி ப்ராமிஸ்
Affair Murder: திருமணமான 20 வயது காதலி.. வாயில் வெடியை வைத்து கொன்ற கொடூர காதலன் - நடந்தது என்ன?
Affair Murder: திருமணமான 20 வயது காதலி.. வாயில் வெடியை வைத்து கொன்ற கொடூர காதலன் - நடந்தது என்ன?
அமித்ஷா போட்ட ஆர்டர்.. குஷியில் எடப்பாடியார்.. பின்னணியில் விஜய்யா?
அமித்ஷா போட்ட ஆர்டர்.. குஷியில் எடப்பாடியார்.. பின்னணியில் விஜய்யா?
புது கட்சி தொடங்குவது எப்போது? தேதி குறித்த மல்லை சத்யா? காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேட்டி! 
புது கட்சி தொடங்குவது எப்போது? தேதி குறித்த மல்லை சத்யா? காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேட்டி! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM modi:
PM modi: "அவங்க என்ன வேணா பண்ணட்டும்.. நாங்க இப்படியே தான் இருப்போம்" - பிரதமர் மோடி ப்ராமிஸ்
Affair Murder: திருமணமான 20 வயது காதலி.. வாயில் வெடியை வைத்து கொன்ற கொடூர காதலன் - நடந்தது என்ன?
Affair Murder: திருமணமான 20 வயது காதலி.. வாயில் வெடியை வைத்து கொன்ற கொடூர காதலன் - நடந்தது என்ன?
அமித்ஷா போட்ட ஆர்டர்.. குஷியில் எடப்பாடியார்.. பின்னணியில் விஜய்யா?
அமித்ஷா போட்ட ஆர்டர்.. குஷியில் எடப்பாடியார்.. பின்னணியில் விஜய்யா?
புது கட்சி தொடங்குவது எப்போது? தேதி குறித்த மல்லை சத்யா? காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேட்டி! 
புது கட்சி தொடங்குவது எப்போது? தேதி குறித்த மல்லை சத்யா? காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேட்டி! 
மதுரையில் நாளை 26.08.25 மின்தடையா..? உடனே உங்க ஏரியா இருக்கானு பார்த்திடுங்க !
மதுரையில் நாளை 26.08.25 மின்தடையா..? உடனே உங்க ஏரியா இருக்கானு பார்த்திடுங்க !
விழுப்புரம் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி! போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர்: பெற்றோர்கள் கொந்தளிப்பு
விழுப்புரம் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி! போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர்: பெற்றோர்கள் கொந்தளிப்பு
ஆரோவிலில் எம்.பி திக்விஜய் சிங் முக்கிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு! மாத்ரிமந்திர், ஏரி திட்டம் உட்பட முக்கிய தகவல்கள்!
ஆரோவிலில் எம்.பி திக்விஜய் சிங் முக்கிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு! மாத்ரிமந்திர், ஏரி திட்டம் உட்பட முக்கிய தகவல்கள்!
Sivakarthikeyan: குடும்ப ரசிகர்களை இழக்கப்போகும் சிவகார்த்திகேயன்.. என்னடா மதராஸிக்கு வந்த சோதனை!
Sivakarthikeyan: குடும்ப ரசிகர்களை இழக்கப்போகும் சிவகார்த்திகேயன்.. என்னடா மதராஸிக்கு வந்த சோதனை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.