மேலும் அறிய

TN Govt School: தொடங்கிய மாணவர் சேர்க்கை: 3.31 லட்சம் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க உத்தரவு

TN Govt School Admission: தமிழக அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை முடிக்கும் 3,31,548 குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை முடிக்கும் 3,31,548 குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி உள்ளதாவது:

''2024- 2025ஆம்‌ கல்வி ஆண்டில்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்கைப்‌ பணிகளுக்கான விழிப்புணர்வு சேர்க்கைப்‌ பேரணி நடத்தும்போது ஏற்படும்‌ செலவினங்களுக்காக ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி மாநிலத்‌ திட்ட இயக்ககத்தில்‌ இருந்து ஒவ்வாரு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிக்கும்‌ ரூ.2,000/- நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களின்‌ கல்வித்‌ தரம்‌ உயரும்‌ பொருட்டு பல்வேறு முன்னோடித்‌ திட்டங்கள்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

என்னென்ன வசதிகள்?

வரும்‌ கல்வி ஆண்டில்‌ அனைத்து அரசு தொடக்கப்‌ பள்ளிகளிலும்‌ திறன்‌ வகுப்பறைகள்‌, அனைத்து அரசு நடுநிலைப்‌ பள்ளிகளிலும்‌ உயர்‌தொழில்‌ நுட்ப கணினி ஆய்வகங்கள்‌, அதற்குத்‌ தேவையான இணையதள (Broadband Connectivity) வசதியுடன் அமைக்கப்பட உள்ளன. மேலும்‌, அரசுப்‌ பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்கக்‌ கணினியும்‌ (டேப்) வழங்கப்பட உள்ளது.

அரசுப்‌ பள்ளிகளில்‌ 2024- 2025ஆம்‌ கல்வி ஆண்டிற்கான மாணவர்‌ சேர்க்கையை சென்னை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை நடுநிலைப்‌ பள்ளியில், பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்‌.

பள்ளிகள்‌ அமைந்துள்ள குடியிருப்புப்‌ பகுதிகளில்‌ இருந்து 5* வயதுடைய குழந்தைகளை அரசுப்‌ பள்ளிகளில்‌ சேர்க்கை செய்வதற்கும்‌ அரசுப் பள்ளிகளில்‌ கிடைக்கும்‌ கற்றல்‌ வாய்ப்புகள்‌, பல்வேறு நலத்திட்டங்கள்‌ மற்றும்‌ மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும்‌ பல்வேறு உதவித்‌ தொகைகள்‌ குறித்து அறியும்‌ வகையில்‌ விழிப்புணர்வு பிரச்சாரத்தினை அனைத்து பொது மக்கள்‌ மற்றும்‌ அனைத்து பள்ளி வயது குழந்தைகளின்‌ பெற்றோர்கள்‌ மத்தியில்‌ ஏற்படுத்தத்‌ தேவையான நடவடிக்கைகளை பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ இருபால்‌ ஆசிரியர்கள்‌ மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி முன்பருவக்‌ கல்வி

தமிழ்நாட்டில்‌ பெரும்பான்மையான அரசுப்‌ பள்ளிகள்‌ ஊரகப்‌ பகுதிகளில்‌தான்‌ அமைந்து உள்ளன. ஊரகப்‌ பகுதிகளில்‌ அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில்‌ 3 முதல்‌ 5 வயதுடைய குழந்தைகள்‌ பள்ளி முன்பருவக்‌ கல்வியைக்‌ கற்று வருகின்றனர்‌.

இம்மையங்களில்‌ முன்பருவக்‌ கல்வியை நிறைவு செய்யும்‌ 5* வயதுடைய குழந்தைகளின்‌ எண்ணிக்கை விவரம்‌ ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள்‌ இயக்ககத்தில்‌ இருந்து பெறப்பட்டு உள்ளது. இதன்படி, 3,31,548 குழந்தைகள் அங்கன்வாடி மையங்களில் இருந்து படித்து வெளியே வர உள்ளனர்.

மேற்படி, அங்கன்வாடி மையங்களில்‌ கல்வி பயிலும்‌ 5* வயதுடைய அனைத்துக் குழந்தைகளையும்‌ முழுமையாக அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ ஒன்றாம் வகுப்பில்‌ சேர்க்கை செய்வதற்கு வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌, பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ இருபால்‌ ஆசிரியர்கள்‌, பள்ளி மேலாண்மைக்‌ குழு உறுப்பினர்கள்‌,

இல்லம்‌ தேடிக்‌ கல்வி தன்னார்வலர்கள்‌ மற்றும சுயஆர்வலர்களுக்கும்‌ உரிய அறிவுரைகளை வழங்கி மாணவர்‌ சேர்க்கைப்‌ பணிகளை சிறந்த முறையில்‌ நடத்த வேண்டும்.

மாணவர் சேர்க்கை

மேலும்‌ அங்கன்வாடி மையங்கள்‌ அல்லாது வேறு பள்ளிகளில்‌ இருந்து அரசுப்‌ பள்ளிகளுக்கு சேர்க்கை ஆக விரும்பும்‌ குழந்தைகள்‌ மற்றும்‌ ஒன்றாம்‌ வகுப்பு அல்லாத பிற வகுப்புகளுக்கு சேர்க்கை ஆக விரும்பும்‌ மாணவர்களுக்கு அரசு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ சேர்க்கைக்கான இடங்களை பள்ளிகள்‌ வழங்க உரிய அறிவுரைகளை வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ மூலம்‌ அனைத்து பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்‌ / ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

மாவட்ட ஆட்சியரின்‌ ஆலோசனையின்‌படியும்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌, மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ (தொடக்கக்‌ கல்வி), வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள்‌ மாவட்டத்‌ திட்ட அலுவலருடன்‌ ஒன்றிணைந்து செயல்பட்டு அங்கன்வாடி மையங்களில்‌ இருந்து வெளிவரும்‌ குழந்தைகளில்‌ ஒருவர்‌ கூட விடுபடாமல்‌ அனைவரையும்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ சேர்க்கை செய்திடவும்‌, வரும்‌ ஆண்டில்‌ மாணவர்‌ சேர்க்கை விகிதத்தினை கணிசமான அளவில்‌ உயர்த்தவும்‌ வேண்டும்.

எமிஸ் தளத்தில் பதிவேற்றம்

மேலும்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ சேர்க்கை ஆகும்‌ மாணவர்‌ விவரங்களை கல்வித்‌ தகவல்‌ மேலாண்மை முறைமை (எமிஸ்) இணையதளத்தில்‌ உடனுக்குடன்‌ பதிவேற்றம்‌ செய்ய வேண்டும்’’.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Lok Sabha Election 2024 LIVE:ஆந்திராவில் ஆங்காங்கே மோதல், கல்வீச்சு! வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பு!
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் ஆங்காங்கே மோதல், கல்வீச்சு! வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பு!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Red Pix Felix Wife : ”FELIX உயிருக்கு ஆபத்துஎன் கணவர் எங்கே?” பெலிக்ஸ் மனைவி கேள்விEV Velu Son Car Accident : கார் விபத்தில் சிக்கிய மகன் கலக்கத்தில் எ.வ.வேலு பதற வைக்கும் CCTV காட்சிAsaduddin Owaisi plays cricket : கிரிக்கெட் ஆடிய ஓவைசி! குதூகலமான சிறுவர்கள்! பிரச்சார சுவாரஸ்யம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Lok Sabha Election 2024 LIVE:ஆந்திராவில் ஆங்காங்கே மோதல், கல்வீச்சு! வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பு!
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் ஆங்காங்கே மோதல், கல்வீச்சு! வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பு!
TN Weather Update: சுட்டெரிக்கும் சூரியன் ஒருபக்கம்.. அடித்து வெளுக்கும் மழை ஒருபக்கம்.. வானிலை எப்படி இருக்கும்?
சுட்டெரிக்கும் சூரியன் ஒருபக்கம்.. அடித்து வெளுக்கும் மழை ஒருபக்கம்.. வானிலை எப்படி இருக்கும்?
Metro Train: சிறுசேரி- கிளாம்பாக்கம் கிடையாதாம்! திருப்போரூர் - கேளம்பாக்கம் மாற்றுப்பாதையில் மெட்ரோ சேவை?
சிறுசேரி- கிளாம்பாக்கம் கிடையாதாம்! திருப்போரூர் - கேளம்பாக்கம் மாற்றுப்பாதையில் மெட்ரோ சேவை?
CBSE Board Result 2024: சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - காண்பது எப்படி?
CBSE Board Result 2024: சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - காண்பது எப்படி?
பள்ளி வாகனத்திற்கு விபத்து ஏற்பட்டால்  ஓட்டுநர் உரிமம் ரத்து - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
பள்ளி வாகனத்திற்கு விபத்து ஏற்பட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
Embed widget