மேலும் அறிய

புது மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்காத அரசு; தமிழக நலனைத் தாரைவார்த்து விட்டதா?- அன்புமணி கேள்வி

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழக அரசு விண்ணப்பிக்காமல், தமிழக நலனைத் தாரைவார்த்து விட்டதா என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்:

’’இந்தியா முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதற்காக தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியிருந்த காலக்கெடு நவம்பர் 26-ஆம் நாளுடன் நிறைவடைந்து விட்ட நிலையில், தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்காக விண்ணப்பிக்க தமிழக அரசு தவறி விட்டது. 2025-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில், கிடைத்த அரிய வாய்ப்பை தமிழக அரசு தவற விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற கொள்கையின் அடிப்படையில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்று  பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட தொடங்கவில்லை

2021 தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், இதுவரை ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட தமிழக அரசு தொடங்கவில்லை. அதற்கான நடவடிக்கைகளையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

மற்றொருபக்கம், 10 லட்சம் மக்கள்தொகைக்கு 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற புதிய விதிமுறையை கடந்த ஆகஸ்ட் 16-ஆம் நாள் தேசிய மருத்துவ ஆணையம் நடைமுறைப்படுத்தியது. அந்த விதிகளின்படி, தமிழக மக்கள்தொகைக்கு தேவையானதை விட கூடுதலான மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் இருப்பதால், தமிழ்நாட்டில் இனி புதிய மருத்துவக் கல்லூரிகள் அனுமதிக்கப்படாது என்றும் மருத்துவ ஆணையம் ஆணையிட்டது.

புதிய கல்லூரிகளை திறக்க அனுமதி

அதற்கு எதிராக மத்திய சுகாதாரத்துறையின் முன்னாள் அமைச்சர் என்ற முறையில் பிரதமருக்கு கடிதமும் எழுதினேன். அதன் பயனாக தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறப்பதற்கான கட்டுப்பாடுகள் ஓராண்டுக்கு தளர்த்தப்பட்டன. அதன்படி 2024-25ஆம் ஆண்டில் புதிய கல்லூரிகளை திறக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியது.

அதன்படி, 2024-25ஆம் ஆண்டில் புதிய கல்லூரிகளைத் தொடங்க நவம்பர் 16-ஆம் நாள் முதல் 26-ஆம் நாள் வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க வேண்டும் என்பதில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் புதிய மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக 2025-26ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முடியாது என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதுதான் கடைசி வாய்ப்பு என்பதால் அதை தமிழக அரசு உறுதியாக பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கத் தவறியதன் மூலம் தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை தாரை வார்த்து விட்டது. இது அரசின் பெரும் தோல்வி.

புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கத் தவறியிருப்பதன் மூலம், தேசிய மருத்துவ ஆணையம் அதன் விதிகளை திருத்தாத வரை, தமிழ்நாட்டில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவே முடியாது என்ற நிலையை திமுக அரசு ஏற்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஓர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற கனவை நனவாக்கவே முடியாத பின்னடைவை திமுக அரசு ஏற்படுத்தியிருக்கிறது.

விண்ணப்பிக்காதது ஏன்?

புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்காக விண்ணப்பிக்காதது ஏன்? என்பது குறித்து தமிழக அரசு கூறும்போது, இதுவரை அதிகாரப்பூர்வமாக விண்ணப்பிக்கவில்லை. ஆனால், மத்திய அரசு நிதியுதவியுடன் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முயற்சி செய்து வருவதால்தான் இப்போது புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கவில்லை என்று அரசு சார்பில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கும் திட்டத்தை கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 3 கட்டங்களாக மத்திய அரசு செயல்படுத்தியது. இத்திட்டத்தின்படி மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான செலவில் மத்திய அரசு 60 விழுக்காட்டையும், மாநில அரசு 40 விழுக்காட்டையும் பகிர்ந்து கொள்ளும். இத்திட்டத்தின்படி முதல் இரு கட்டங்களில் அனுமதிக்கப்பட்ட 82 மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று கூட தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. மூன்றாம் கட்டமாக 75 மருத்துவக்கல்லூரிகள் அறிவிக்கப்பட்ட போது, தமிழகத்திற்கு மொத்தம் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் கிடைத்தன. அந்தத் திட்டம் முடிவுக்கு வந்து விட்ட நிலையில், இனி மத்திய அரசு உதவியுடன் தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க வாய்ப்பில்லை.

இந்த உண்மையை மறைத்து விட்டு, மத்திய அரசு உதவியுடன் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்போவதாக தமிழக அரசு கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும். 3 ஆண்டுகள் ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில், புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், ஐந்தாண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட தொடங்காத அரசு என்ற அவப்பெயரை இன்றைய அரசு சுமக்க நேரிடும்.

சிறப்பு அனுமதி பெறுக

எனவே, தேசிய மருத்துவ ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று, 6 மாவட்டங்களிலும் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசே அதன் சொந்த நிதியில் தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Orange Alert: 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.! நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா.? காத்திருக்கும் மாணவர்கள்
7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.! நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா.? காத்திருக்கும் மாணவர்கள்
Congress: மொத்தமாக வாஷ் அவுட் ஆன காங்கிரஸ்.! 1557 இடங்களில் இவ்வளவு குறைவான எம்எல்ஏக்களா.?அதிர்ச்சி ரிப்போர்ட்
வட மாநிலங்களில் மொத்தமாக வாஷ் அவுட் ஆன காங்கிரஸ்.! 1557 இடங்களில் இவ்வளவு குறைவான எம்எல்ஏக்களா.? அதிர்ச்சி ரிப்போர்ட்
TN Heavy Rain: தமிழகத்தில் கனமழை: 10 மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படை தீவிரம்! எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்!
TN Heavy Rain: தமிழகத்தில் கனமழை: 10 மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படை தீவிரம்! எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்!
Sabarimala Temple Calendar 2026: சபரிமலை கோயில் நடை திறக்கும் தேதி, மூடும் தேதி லிஸ்ட் வெளியீடு ! ஐயப்ப பக்தர்களே முழு விபரம் இதோ!
சபரிமலை கோயில் நடை திறக்கும் தேதி, மூடும் தேதி லிஸ்ட் வெளியீடு ! ஐயப்ப பக்தர்களே முழு விபரம் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்ணைக் கவரும் விளக்குகள் அகல்கள் தயாரிக்கும் பணி தீவிரம் தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை | Karthigai Deepam 2025 |
Dog Bite | பிறப்புறுப்பில் கடித்த நாய்!வடமாநில இளைஞர் படுகாயம் பகீர் சிசிடிவி காட்சிகள்
”சேட்டன் வந்தல்லே”CSK-வில் இணைந்த சஞ்சு ஜடேஜா, சாம் கரனுக்கு TATA..! | CSK Trade 2026
பீகாரின் 25 வயது பாஜக MLA பாடகி To அரசியல்வாதி யார் இந்த மைதிலி தாக்கூர்? | Bihar | Maithili Thakur
Tirupattur School Caste issue | சாதி பெயரை சொல்லி திட்டிய சத்துணவு பெண்!சிறுவன் கண்ணீர் வாக்குமூலம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Orange Alert: 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.! நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா.? காத்திருக்கும் மாணவர்கள்
7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.! நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா.? காத்திருக்கும் மாணவர்கள்
Congress: மொத்தமாக வாஷ் அவுட் ஆன காங்கிரஸ்.! 1557 இடங்களில் இவ்வளவு குறைவான எம்எல்ஏக்களா.?அதிர்ச்சி ரிப்போர்ட்
வட மாநிலங்களில் மொத்தமாக வாஷ் அவுட் ஆன காங்கிரஸ்.! 1557 இடங்களில் இவ்வளவு குறைவான எம்எல்ஏக்களா.? அதிர்ச்சி ரிப்போர்ட்
TN Heavy Rain: தமிழகத்தில் கனமழை: 10 மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படை தீவிரம்! எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்!
TN Heavy Rain: தமிழகத்தில் கனமழை: 10 மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படை தீவிரம்! எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்!
Sabarimala Temple Calendar 2026: சபரிமலை கோயில் நடை திறக்கும் தேதி, மூடும் தேதி லிஸ்ட் வெளியீடு ! ஐயப்ப பக்தர்களே முழு விபரம் இதோ!
சபரிமலை கோயில் நடை திறக்கும் தேதி, மூடும் தேதி லிஸ்ட் வெளியீடு ! ஐயப்ப பக்தர்களே முழு விபரம் இதோ!
விவசாயிகளுக்கு குஷியான அறிவிப்பு.! எந்தெந்த வங்கியில் மீண்டும் காப்பீடு செய்யலாம்- வெளியான லிஸ்ட்
விவசாயிகளுக்கு குஷியான அறிவிப்பு.! எந்தெந்த வங்கியில் மீண்டும் காப்பீடு செய்யலாம்- வெளியான லிஸ்ட்
Bihar Election: பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு இது ஒன்று தான் முக்கிய காரணம்.! அடித்து சொல்லும் செல்வப்பெருந்தகை
பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு இது ஒன்று தான் முக்கிய காரணம்.! அடித்து சொல்லும் செல்வப்பெருந்தகை
இன்றும் நாளையும் அலர்ட்டா இருங்க.! 10 மாவட்டம் ரொம்ப ரிஸ்க்- ஆட்சியர்களுக்கு பறந்த எச்சரிக்கை
இன்றும் நாளையும் அலர்ட்டா இருங்க.! 10 மாவட்டம் ரொம்ப ரிஸ்க்- ஆட்சியர்களுக்கு பறந்த எச்சரிக்கை
Puducherry Weather : புதுச்சேரிக்கு  'ஆரஞ்சு அலர்ட்' ! மக்கள் உச்சக்கட்ட எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை...
Puducherry Weather : புதுச்சேரிக்கு 'ஆரஞ்சு அலர்ட்' ! மக்கள் உச்சக்கட்ட எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை...
Embed widget