மேலும் அறிய

TN 12th Exam: பள்ளி பொதுத்தேர்வுகளில் புதிய மாற்றம்?- அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் 

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ள தகவலின்படி, பள்ளி பொதுத் தேர்வுகளில் வருகைப் பதிவேட்டில் புதிய மாற்றம் கொண்டு வரப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. 

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ள தகவலின்படி, பள்ளி பொதுத் தேர்வுகளில் வருகைப் பதிவேட்டில் புதிய மாற்றம் கொண்டு வரப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. 

12ஆம் வகுப்பு தமிழ் பொதுத் தேர்வை 50,674 மாணவர்கள் எழுதாத நிலையில், மாணவர்கள் ஆப்சென்ட் விவகாரம் தொடர்பாக அமைச்சர் அன்பில் தலைமையில் நேற்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித்துறை செயலாளர், தனியார் பள்ளிகள் இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த பிறகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது, ''தேர்வு அன்றாத மாணவர்களின் விவரத்தைக் கேட்டறிந்து, அதற்கான காரணத்தை தேர்வு நாளன்றே தனியே பொறுப்பாளர் நியமிக்கப்படுவார். அவர் மாணவரின் பெற்றோரைப் பிற்பகலில் சந்தித்துப் பேசுவார். 

தேர்வை எதிர்கொள்ள பயம்

மாணவர்கள் தேர்வுக்கு வராமல் இருக்க, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் ஒவ்வொரு காரணம் உள்ளது. வேலைக்காக இடம் பெயர்தல், பயம் உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் தேர்வில் கலந்துகொள்ளவில்லை. கொரோனாவால் ஆல் பாஸ் செய்யப்பட்ட நிலையில், பொதுத் தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் பயப்படலாம். மார்ச் 24ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்பட உள்ளது'' என்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய அவர், இடை நிற்றலைத் தவிர்ப்பதற்காக மாணவர்கள் சில நாட்கள் மட்டுமே பள்ளிக்கு வந்திருந்தாலும் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. இதனால் எமிஸில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. எனினும் அவர்கள் தேர்வு எழுதவில்லை. இந்த நிலையில், பொதுத் தேர்வு எழுதாத மாணவர்கள் மறு தேர்வு எழுதலாம் என்றும் தெரிவித்தார். 


TN 12th Exam: பள்ளி பொதுத்தேர்வுகளில் புதிய மாற்றம்?- அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் 

வருகைப் பதிவேட்டில் புதிய மாற்றம்?

அப்போதே, பள்ளி பொதுத் தேர்வுகளில் வருகைப் பதிவேட்டில் புதிய மாற்றம் கொண்டு வரப்படுமா என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் தனியார் மகளிர் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று கலந்துகொண்டு பேசினார். 

அவர் கூறும்போது, சில நாட்கள் மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்தாலும் கூட மாணவர்கள் பொது தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார். 

பழைய விதிமுறை

ஆண்டுக்குக் குறைந்தபட்சம் இத்தனை நாட்கள் இருந்தால்தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என்ற விதிமுறை கடந்த ஆண்டுகளில் பின்பற்றப்பட்டு வந்தது. குறிப்பாக 75 முதல் 80 சதவீத வருகைப் பதிவேடு இருந்தால்தான் பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு வந்தனர். எனினும் மாணவர்கள் ஒரு சில நாட்கள் பள்ளிக்கு வந்தாலும்கூட, பொதுத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

இதனால் பள்ளி பொதுத் தேர்வுகளில் வருகைப் பதிவேட்டில் புதிய மாற்றம் கொண்டு வரப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Embed widget