மேலும் அறிய

10th Practical Exam: 10ம் வகுப்பு மாணவர்கள் செய்முறைத் தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

10ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் செயல்முறைத் தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாடத்திற்கான செயல்முறைத் தேர்வுக்கான கால அவகாசத்தை வரும் 31-ந் தேதி வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செயல்முறைத் தேர்வு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் நலன் கருதி 31-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள்

 ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று தொடங்கும் தேர்வுகள்  ஏப்ரல் 20-ஆம் தேதி வரை இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். இந்த நிலையில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் நேற்று முதல் (மார்ச் 27) ஆம் தேதி முதல் டவுன்லோடு செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்திருந்த்தது.

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை | 10th Exam Time Table 2022 Tamil Nadu

  • ஏப்ரல்  6ஆம் தேதி - தமிழ் (மொழித்தாள்)
  • ஏப்ரல் 10ஆம் தேதி - ஆங்கிலம் 
  • ஏப்ரல் 13ஆம் தேதி-  கணிதம்
  • ஏப்ரல் 15ஆம் தேதி- விருப்ப மொழித்தாள்
  • ஏப்ரல் 17ஆம் தேதி- அறிவியல்
  • ஏப்ரல் 20ஆம் தேதி- சமூக அறிவியல் 

தேர்வு முடிவுகள் எப்போது?

12- ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியாக உள்ளது 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே மாதம் 17ஆம் தேதியும் பிளஸ் 1 தேர்வு முடிவு மே-19 ஆம் தேதியும் வெளியாகும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு: 

’’நடைபெற உள்ள ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாற்றுத் திறனாளித் தேர்வர்கள் தொர்பாக கீழ்க்காணும் நடைமுறைகள் தவறாமல் பின்பற்றப்பட வேண்டும். இந்த அறிவுரையை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1. இருக்கை வசதி:

அனைத்து வகை மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கும் தரைத் தளத்தில் மட்டுமே இருக்கை வசதி ஒதுக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

2.கூடுதல் நேரச் சலுகை: 

கூடுதல் நேரச் சலுகை கோரிய மாற்றுத் திறனாளித் தேர்வர்கள் அனைவருக்கும், வழக்கமான தேர்வு நேரத்துடன் கூடுதலாக 60 நிமிடங்கள் (1 மணி நேரம்) தேர்வெழுத தவறாமல் அனுமதி வழங்கப்பட வேண்டும்.

3. டிஸ்லெக்சியா தேர்வர் விடைத்தாள்: 

டிஸ்லெக்ஸியா பாதிப்புற்ற தேர்வர்களுக்கு, சொல்வதை எழுதுபவர் (Scribe) நியமிக்கப்படாமல் தேர்வரே தேர்வெழுதும் முதன்மை விடைத்தாளின் முதல் பக்கத்தில் சிவப்பு நிற மையினால் "டிஸ்லெக்ஸியா தேர்வர்/Dyslexia Students" எழுதப்படல் வேண்டும்.

4. செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளித் தேர்வர்களின் விடைத் தாள்:

செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளித் தேர்வர்களது முதன்மை விடைத்தாளில் முதல் பக்கத்தில் சிவப்பு நிற மையினால் செவித்திறன் குறைபாடுடைய தேர்வர் / HI Students என்று எழுதப்படல் வேண்டும்.

5. மாற்றுத் திறனாளி தேர்வர்களின் விடைத்தாட்களை சிப்பமாக்குதல்:

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின்போது கூடுதல் நேரச் சலுகை பெற்று, தேர்வெழுதும் தேர்வர்கள் உள்ள அறையில் கண்காணிப்பாளர்கள், தேர்வு நேரம் முடிவடைந்தவுடன் பிற தேர்வர்களின் விடைத் தாள்களை சிப்பமாக்காமல் கூடுதல் நேரச் சலுகைப் பெற்று தேர்வெழுதும் தேர்வர்களின் தேர்வு நேரம் முடியும் வரை காத்திருக்க வேண்டும். 

மேலும், தேர்வு நேரம் (பிற்பகல் 01.15 மணி) முடிவடைந்தவுடன் நிலையான படை உறுப்பினர்களும் கூடுதல் நேரம் தேர்வெழுதும் தேர்வர்கள் உள்ள அறைக்குச் சென்று கூடுதலாக கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.

பின்னர், மேற்குறிப்பிட்ட தேர்வரின் விடைத் தாள்களை மற்ற தேர்வர்களது விடைத்தாட்களுடன் சேர்த்து ஒரே சிப்பமாக்கி முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்’’.

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

 10ஆம் வகுப்புக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய அனைத்து பாடங்களின் மாதிரி வினாத் தாள் மற்றும் 12ஆம் வகுப்பு மாதிரி வினாத் தாள்களைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget