மேலும் அறிய

10th Practical Exam: 10ம் வகுப்பு மாணவர்கள் செய்முறைத் தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

10ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் செயல்முறைத் தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாடத்திற்கான செயல்முறைத் தேர்வுக்கான கால அவகாசத்தை வரும் 31-ந் தேதி வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செயல்முறைத் தேர்வு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் நலன் கருதி 31-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள்

 ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று தொடங்கும் தேர்வுகள்  ஏப்ரல் 20-ஆம் தேதி வரை இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். இந்த நிலையில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் நேற்று முதல் (மார்ச் 27) ஆம் தேதி முதல் டவுன்லோடு செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்திருந்த்தது.

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை | 10th Exam Time Table 2022 Tamil Nadu

  • ஏப்ரல்  6ஆம் தேதி - தமிழ் (மொழித்தாள்)
  • ஏப்ரல் 10ஆம் தேதி - ஆங்கிலம் 
  • ஏப்ரல் 13ஆம் தேதி-  கணிதம்
  • ஏப்ரல் 15ஆம் தேதி- விருப்ப மொழித்தாள்
  • ஏப்ரல் 17ஆம் தேதி- அறிவியல்
  • ஏப்ரல் 20ஆம் தேதி- சமூக அறிவியல் 

தேர்வு முடிவுகள் எப்போது?

12- ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியாக உள்ளது 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே மாதம் 17ஆம் தேதியும் பிளஸ் 1 தேர்வு முடிவு மே-19 ஆம் தேதியும் வெளியாகும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு: 

’’நடைபெற உள்ள ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாற்றுத் திறனாளித் தேர்வர்கள் தொர்பாக கீழ்க்காணும் நடைமுறைகள் தவறாமல் பின்பற்றப்பட வேண்டும். இந்த அறிவுரையை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1. இருக்கை வசதி:

அனைத்து வகை மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கும் தரைத் தளத்தில் மட்டுமே இருக்கை வசதி ஒதுக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

2.கூடுதல் நேரச் சலுகை: 

கூடுதல் நேரச் சலுகை கோரிய மாற்றுத் திறனாளித் தேர்வர்கள் அனைவருக்கும், வழக்கமான தேர்வு நேரத்துடன் கூடுதலாக 60 நிமிடங்கள் (1 மணி நேரம்) தேர்வெழுத தவறாமல் அனுமதி வழங்கப்பட வேண்டும்.

3. டிஸ்லெக்சியா தேர்வர் விடைத்தாள்: 

டிஸ்லெக்ஸியா பாதிப்புற்ற தேர்வர்களுக்கு, சொல்வதை எழுதுபவர் (Scribe) நியமிக்கப்படாமல் தேர்வரே தேர்வெழுதும் முதன்மை விடைத்தாளின் முதல் பக்கத்தில் சிவப்பு நிற மையினால் "டிஸ்லெக்ஸியா தேர்வர்/Dyslexia Students" எழுதப்படல் வேண்டும்.

4. செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளித் தேர்வர்களின் விடைத் தாள்:

செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளித் தேர்வர்களது முதன்மை விடைத்தாளில் முதல் பக்கத்தில் சிவப்பு நிற மையினால் செவித்திறன் குறைபாடுடைய தேர்வர் / HI Students என்று எழுதப்படல் வேண்டும்.

5. மாற்றுத் திறனாளி தேர்வர்களின் விடைத்தாட்களை சிப்பமாக்குதல்:

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின்போது கூடுதல் நேரச் சலுகை பெற்று, தேர்வெழுதும் தேர்வர்கள் உள்ள அறையில் கண்காணிப்பாளர்கள், தேர்வு நேரம் முடிவடைந்தவுடன் பிற தேர்வர்களின் விடைத் தாள்களை சிப்பமாக்காமல் கூடுதல் நேரச் சலுகைப் பெற்று தேர்வெழுதும் தேர்வர்களின் தேர்வு நேரம் முடியும் வரை காத்திருக்க வேண்டும். 

மேலும், தேர்வு நேரம் (பிற்பகல் 01.15 மணி) முடிவடைந்தவுடன் நிலையான படை உறுப்பினர்களும் கூடுதல் நேரம் தேர்வெழுதும் தேர்வர்கள் உள்ள அறைக்குச் சென்று கூடுதலாக கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.

பின்னர், மேற்குறிப்பிட்ட தேர்வரின் விடைத் தாள்களை மற்ற தேர்வர்களது விடைத்தாட்களுடன் சேர்த்து ஒரே சிப்பமாக்கி முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்’’.

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

 10ஆம் வகுப்புக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய அனைத்து பாடங்களின் மாதிரி வினாத் தாள் மற்றும் 12ஆம் வகுப்பு மாதிரி வினாத் தாள்களைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
TET தாள்-1 தேர்வு ஓவர்... நாளை தாள்-2 தேர்வு! மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்ட முக்கிய விபரம்!
TET தாள்-1 தேர்வு ஓவர்... நாளை தாள்-2 தேர்வு! மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்ட முக்கிய விபரம்!
கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
Embed widget