மேலும் அறிய

Titojak Protest: போராட்டம் அறிவித்த 11 ஆசிரியர் சங்கங்கள்; பேச்சுவார்த்தைக்கு அழைத்த பள்ளிக் கல்வித்துறை

அக்டோபர் 13ஆம் தேதி 11 ஆசிரியர் சங்கங்கள் இணைந்து டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்துவதாக அறிவித்ததை அடுத்து, பேச்சுவார்த்தை நடத்த முக்கிய நிர்வாகிகளுக்கு நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 13 ஆம் தேதி 11 ஆசிரியர் சங்கங்கள் இணைந்து டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்துவதாக அறிவித்ததை அடுத்து, பேச்சுவார்த்தை நடத்த முக்கிய நிர்வாகிகளுக்கு நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. 

11 சங்கங்கள் போராட்டம் அறிவிப்பு

டிட்டோஜாக் என்று அழைக்கப்படும் தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு, 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவித்தது. இந்த மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தை, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வளாகத்தில் அக்டோபர் 13ஆம் தேதி நடத்த டிட்டோஜாக் திட்டமிட்டது. இதை அறிந்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முக்கிய நிர்வாகிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர், தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட 11 சங்கங்களின் நிர்வாகிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.  

இந்தக் கூட்டத்தில் தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவில் (டிட்டோஜாக்) இடம்பெற்றுள்ள சங்கங்கள் சார்பாக ஒவ்வொரு சங்கத்தில் இருந்து 2 பிரதிநிதிகளுக்கு மிகாமல், நாளை (அக்.11) காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

தொடர் ஆசிரியர் போராட்டம்

சென்னை நுங்கம்பாக்கம், டிபிஐ எனப்படும் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் டெட் ஆசிரியர்கள் சங்கம், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்,  ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய 4 ஆசிரியர் சங்கங்கள், 3 வெவ்வேறு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு வாரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டன. 

இதற்கிடையே ஆசிரியர்கள் - கல்வித்துறை அதிகாரிகளின் பலகட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அமைச்சரும் ஆசிரியர் சங்கங்களை சந்தித்துப் பேசியிருந்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ், ’’சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கையை ஆய்வு செய்ய மூவர் குழு அமைக்கப்படும். 3 மாதத்துக்குள் இந்தக் குழு அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும். பள்ளிக் கல்வித்துறைச் செயலர், நிதித்துறை செயலர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்  ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெறுவர். 

அதேபோல பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12,500 ஆக உயர்த்தப்பட்டு வழங்கப்படும்.  171 தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவர்’’ என்று தெரிவித்தார். தொடர்ந்து அனைத்து ஆசிரியர் சங்கங்களும் படிப்படியாகப் போராட்டங்களைத் திரும்பப் பெற்றன. 

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

இந்நிலையில், அக்டோபர் 13 ஆம் தேதி 11 ஆசிரியர் சங்கங்கள் இணைந்து டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்துவதாக அறிவித்ததை அடுத்து, பேச்சுவார்த்தை நடத்த முக்கிய நிர்வாகிகளுக்கு நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி சென்டாக்: 'நீட்' அல்லாத படிப்புகளுக்கான வரைவு மெரிட் லிஸ்ட் வெளியீடு!
புதுச்சேரி சென்டாக்: 'நீட்' அல்லாத படிப்புகளுக்கான வரைவு மெரிட் லிஸ்ட் வெளியீடு!
தனியார் பள்ளிகள் அங்கீகாரம்.. ரூ.25 லட்சம் வரை லஞ்சம் கேட்ட திமுக.. இலவசமாக வழங்கிய தவெக அரசு!
தனியார் பள்ளிகள் அங்கீகாரம்.. ரூ.25 லட்சம் வரை லஞ்சம் கேட்ட திமுக.. இலவசமாக வழங்கிய தவெக அரசு!
"10 லட்ச ரூபாய்க்கு நீட் வினாத்தாள் கசிவா? மோசடி!" ஐஐடி சென்னை இயக்குநர் பகீர்!
தூக்கியடித்த முதல்வர் விஜய்; நான் முதல்வன் திட்டம் மொத்தமாக மாற்றம்- நடந்தது என்ன?
தூக்கியடித்த முதல்வர் விஜய்; நான் முதல்வன் திட்டம் மொத்தமாக மாற்றம்- நடந்தது என்ன?

வீடியோ

Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!
CM Vijay Vs JCD Prabhakar: “5 திரியையும் நானே ஏத்துறேன் சபாநாயகரை மதிக்காத விஜய்” விளாசிய அதிமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தட்டித்தூக்கும் தவெக; தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய பேரவை- அரசு உரையை அப்படியே வாசித்த ஆளுநர்!
தட்டித்தூக்கும் தவெக; தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய பேரவை- அரசு உரையை அப்படியே வாசித்த ஆளுநர்!
TN Assembly: பெஸ்ட் எதிர்க்கட்சினா சும்மாவா..! “வாயை திறங்க CM, கதறல் கேட்குதா” - அசெம்ப்ளி வளாகத்தில் திமுக
பெஸ்ட் எதிர்க்கட்சினா சும்மாவா..! “வாயை திறங்க CM, கதறல் கேட்குதா” - அசெம்ப்ளி வளாகத்தில் திமுக
DMK TVK: ”கோபாலபுரத்து கொள்ளைக்காரர்களா நாங்கள்? மூக்குடைந்தும் திருந்தாத திமுக” - இறங்கி அடிக்கும் TVK
”கோபாலபுரத்து கொள்ளைக்காரர்களா நாங்கள்? மூக்குடைந்தும் திருந்தாத திமுக” - இறங்கி அடிக்கும் TVK
தனியார் பள்ளிகள் அங்கீகாரம்.. ரூ.25 லட்சம் வரை லஞ்சம் கேட்ட திமுக.. இலவசமாக வழங்கிய தவெக அரசு!
தனியார் பள்ளிகள் அங்கீகாரம்.. ரூ.25 லட்சம் வரை லஞ்சம் கேட்ட திமுக.. இலவசமாக வழங்கிய தவெக அரசு!
USA - Iran Deal: தடைகள் நீக்கம், $300 பில்லியன் நிதி, சொத்துகள் விடுவிப்பு - அமைதி ஒப்பந்தம், ஈரான் காட்டில் மழை
தடைகள் நீக்கம், $300 பில்லியன் நிதி, சொத்துகள் விடுவிப்பு - அமைதி ஒப்பந்தம், ஈரான் காட்டில் மழை
8th Commission: அப்படிப்போடு.. மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜாக்பாட்.. உயரும் ஊதியம்!
8th Commission: அப்படிப்போடு.. மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜாக்பாட்.. உயரும் ஊதியம்!
TN Assembly: தவெக அரசின் முதல் கூட்டத்தொடர் - சட்டசபையில் இன்று ஆளுநர் உரை - அதகளமா? அதிரடியா?
TN Assembly: தவெக அரசின் முதல் கூட்டத்தொடர் - சட்டசபையில் இன்று ஆளுநர் உரை - அதகளமா? அதிரடியா?
Vanni Arasu: அலைமோதும் கூட்டம்.. இரவு 11 மணி வரை மக்கள் பணி.. வன்னி அரசுக்கு குவியும் பாராட்டு!
Vanni Arasu: அலைமோதும் கூட்டம்.. இரவு 11 மணி வரை மக்கள் பணி.. வன்னி அரசுக்கு குவியும் பாராட்டு!
Embed widget