ஆசிரியர்களே… பணியில் தொடர, பதவி உயர்வு பெற டெட் தேர்வு கட்டாயம்- இல்லன்னா.. உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனில் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ஆசிரியர்கள் ஓய்வு பெற 5 ஆண்டுகள் மட்டுமே இருந்தால் அவர்கள் பணியை தொடரலாம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி திபான்கர் தத்தா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வேலையை விட்டு வெளியேறலாம்
ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனில் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் டெட் தேர்வை கட்டாயம் ஆக்க முடியுமா? அதேபோல சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் கல்வி உரிமையை பாதிக்குமா? என்று விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் சார்பில் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடங்கிய மேல் முறையீட்டு வழக்கில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
டெட் தேர்வு
டெட் ( TET- Teachers Eligibility Test ) எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகளால் தனித்தனியாக நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே ஆசிரியராகப் பணியில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.






















