மேலும் அறிய

பள்ளிகள் திறப்பு; கல்விக் கட்டணம்- தனியார் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவைப் பிறப்பித்த அரசு!

அனைத்து தனியார் சுயநிதிப் பள்ளிகளிலும் கல்விக் கட்டணத்தைத் தவிர இதர கட்டணங்களை வசூலிக்கக் கூடாது-தனியார் பள்ளிகள் இயக்குநரகம்.

தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் (ஜூன் 4) பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், கல்விக் கட்டணம் தொடர்பாக தனியார் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. 

இதன்படி, தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை தனியார் சுயநிதிப் பள்ளிகளிலும் கல்விக் கட்டணத்தைத் தவிர இதர கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

எந்தெந்தப் பள்ளிகளில்?

அனைத்து தனியார் நர்சரி பிரைமரி, மெட்ரிக், CBSE மற்றும் இதர பிற வாரியப் பள்ளிகளின் முதல்வர்களுக்கும், பள்ளிகளில் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கல்வி (fee Structure) கட்டணத்தினை பொது மக்கள் பார்வையிடும் வகையில் விளம்பரம் செய்ய வேண்டும், சார்ந்த பள்ளிகளின் இணைய தளங்களில் வெளியிடவும் மற்றும் மாணவர்களின் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தில் வகுப்புவாரியாக கல்விக் கட்டணத்தினை அச்சடித்து வழங்கப்படவும் வேண்டும்.

அவ்வாறு வழங்குவதை அனைத்து தனியார், நர்சரி, பிரைமரி, மெட்ரிக், CBSE மற்றும் இதர பிற வாரியப் பள்ளிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதேபோல அவ்வாறு தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு தனியார் பள்ளிகளின் விளம்பரப் பலகைகளில் தங்களுடைய கல்விக் கட்டணத்தை வெளிப்படைத் தன்மையுடன் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 4(1)(b) பிரிவின்படி விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என ஆணை வழங்கப்பட்டுள்ளது.

ஜூன் 5ஆம் தேதிக்குள்…

எனவே மேற்காணும் ஆணையினை தவறாமல் பின்பற்றி தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளில் 05.06.2026 க்குள் கல்வி கட்டணத்தை விளம்பரப்படுத்த அறிவுறுத்துமாறும் மேலும் 10.06.2026 க்குள் சார்ந்த விவரத்தினை அறிக்கையாக இவ்வியக்ககத்தில் சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தனியார் பள்ளிகள்) தெரிவிக்கப்படுகிறது.

மேற்காணும் விவரங்கள் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை முதன்மைக் கல்வி அலுவலர்கள்/ மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளிகள்) பள்ளி ஆய்வின்போது உறுதி செய்யப்பட வேண்டும்.

அலுவலக கோப்பில் வைக்க வேண்டும்

மேலும் மேற்காணும் செயல்முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதை புகைப்பட ஆதாரம் மற்றும் ஒப்புகையுடன் அனைத்து வகை பள்ளிகளிலிருந்து பெற்று தங்கள் அலுவலக கோப்பில் வைக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநர் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Teachers Promotion : ஆசிரியர்களுக்கு ஷாக்.! பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு கட்டாயமா.? பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
ஆசிரியர்களுக்கு ஷாக்.! பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு கட்டாயமா.? பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
சாஸ்த்ரா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கை 2026: தரவரிசைப் பட்டியலில் சென்னை மாணவர் சாதனை
சாஸ்த்ரா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கை 2026: தரவரிசைப் பட்டியலில் சென்னை மாணவர் சாதனை
சிபிஎஸ்இ (CBSE) விடைத்தாள் மதிப்பீட்டு முறைகேடு.. மேல்நடவடிக்கை குறித்து ஒன்றிய அமைச்சகம் பதில் - மதுரை எம்.பி !
சிபிஎஸ்இ (CBSE) விடைத்தாள் மதிப்பீட்டு முறைகேடு.. மேல்நடவடிக்கை குறித்து ஒன்றிய அமைச்சகம் பதில் - மதுரை எம்.பி !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூன் 9-ம் தேதி(09.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? பாருங்க
சென்னை மக்களே.! ஜூன் 9-ம் தேதி(09.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? பாருங்க
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
Embed widget