மேலும் அறிய

TN 12th Result: தள்ளிப்போகும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை- என்ன காரணம்?

12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை நீட் தேர்வுக்குப் பிறகு வெளியிடலாமா என்று பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை நீட் தேர்வுக்குப் பிறகு வெளியிடலாமா என்று பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா காரணமாக கடந்த 2 கல்வி ஆண்டுகளில் கற்றல் இழப்பு ஏற்பட்ட நிலையில், 2022- 23 ஆம் கல்வி ஆண்டு எந்த தாமதமும் இல்லாமல் ஜூன் மாதம் தொடங்கியது. கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால், அனைத்துப் பள்ளிகளிலும் நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்றன. 

மார்ச் 13-ல் தொடங்கிய பொதுத் தேர்வு

இந்த நிலையில், 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்றன. குறிப்பாக 12ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 13ஆம் தேதி  முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. 7,600 பள்ளிகளில், 8.8 லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர்.

3,225 தேர்வு மையங்கள்

மாணவர்களுக்கு மொத்தம் 3,225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இவர்களைக் கண்காணிக்க 46,870 அறைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். 3,100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. சென்னையில் 405 பள்ளிகளில் இருந்து 180 தேர்வு மையங்களில் மொத்தம் 45, 982 பேர் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுதினர். 

இந்த நிலையில் தமிழ் மொழிப்பாடத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 50,674 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது.  இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதேபோல 45 ஆயிரம் பேர் ஆங்கிலப் பாடத் தேர்வை எழுத வரவில்லை. 

இயற்பியல், பொருளியல் உள்ளிட்ட பாடத் தேர்வுகளை 47 ஆயிரம் பேர் எழுதாததாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தகவல் வெளியானது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்முறைப் படிப்புகளுக்கு முக்கியமாகத் தேவைப்படும் இயற்பியல் உள்ளிட்ட முக்கியப் பாடத் தேர்வையே மாணவர்கள் எழுதாதது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  

அரசு நடவடிக்கை என்ன?

மொழிப்பாடத் தேர்வில் மாணவர்கள் கலந்துகொள்ளாதது குறித்து அரசு சார்பில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித்துறை செயலாளர், ஆணையர், தனியார் பள்ளிகள் இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த பிறகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது, ''தேர்வு அன்றாத மாணவர்களின் விவரத்தைக் கேட்டறிந்து, அதற்கான காரணத்தை தேர்வு நாளன்றே தனியே பொறுப்பாளர் நியமிக்கப்படுவார். அவர் மாணவரின் பெற்றோரைப் பிற்பகலில் சந்தித்துப் பேசுவார். 

மாணவர்கள் தேர்வுக்கு வராமல் இருக்க, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் ஒவ்வொரு காரணம் உள்ளது. வேலைக்காக இடம் பெயர்தல், பயம் உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் தேர்வில் கலந்துகொள்ளவில்லை'' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

இந்த நிலையில் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதி வெளியாக உள்ளன. இதற்கிடையே, மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள், நீட் தேர்வை எழுதும் மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால், நீட் தேர்வு முடிந்த பிறகு 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பிடம் கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை நீட் தேர்வுக்குப் பிறகு வெளியிடலாமா என்று பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rains: விடியற்காலையிலே விடாமல் பெய்யும் மழை... சென்னையில் காலையிலே இடி, மின்னல் - இன்னும் எத்தனை மாவட்டங்களில்?
Chennai Rains: விடியற்காலையிலே விடாமல் பெய்யும் மழை... சென்னையில் காலையிலே இடி, மின்னல் - இன்னும் எத்தனை மாவட்டங்களில்?
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ட்ரோன் பயிற்சி! தாட்கோ வழங்கும் அரிய வாய்ப்பு, உடனே விண்ணப்பியுங்கள்!
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ட்ரோன் பயிற்சி! தாட்கோ வழங்கும் அரிய வாய்ப்பு, உடனே விண்ணப்பியுங்கள்!
China India Russia: புது கூட்டு, புது ரூட்டு; சீனா SCO மாநாட்டில் மோடி, புதின் - அமெரிக்காவிற்கு எதிராக இணைவார்களா.?!
புது கூட்டு, புது ரூட்டு; சீனா SCO மாநாட்டில் மோடி, புதின் - அமெரிக்காவிற்கு எதிராக இணைவார்களா.?!
UN on Gaza: “காசாவில் பஞ்சம்“; அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஐ.நா சபை - இஸ்ரேல் தான் காரணம் என குற்றச்சாட்டு
“காசாவில் பஞ்சம்“; அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஐ.நா சபை - இஸ்ரேல் தான் காரணம் என குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue
சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம் வெச்சு செய்யும் எதிர்க்கட்சிகள் பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR? | Congress | Rahul Gandhi vs ECI
ED raid Dmk ministers : ED வலையில் 3 அமைச்சர்கள்?நெருங்கும் சட்டமன்ற தேர்தல்நெருக்கடி கொடுக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rains: விடியற்காலையிலே விடாமல் பெய்யும் மழை... சென்னையில் காலையிலே இடி, மின்னல் - இன்னும் எத்தனை மாவட்டங்களில்?
Chennai Rains: விடியற்காலையிலே விடாமல் பெய்யும் மழை... சென்னையில் காலையிலே இடி, மின்னல் - இன்னும் எத்தனை மாவட்டங்களில்?
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ட்ரோன் பயிற்சி! தாட்கோ வழங்கும் அரிய வாய்ப்பு, உடனே விண்ணப்பியுங்கள்!
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ட்ரோன் பயிற்சி! தாட்கோ வழங்கும் அரிய வாய்ப்பு, உடனே விண்ணப்பியுங்கள்!
China India Russia: புது கூட்டு, புது ரூட்டு; சீனா SCO மாநாட்டில் மோடி, புதின் - அமெரிக்காவிற்கு எதிராக இணைவார்களா.?!
புது கூட்டு, புது ரூட்டு; சீனா SCO மாநாட்டில் மோடி, புதின் - அமெரிக்காவிற்கு எதிராக இணைவார்களா.?!
UN on Gaza: “காசாவில் பஞ்சம்“; அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஐ.நா சபை - இஸ்ரேல் தான் காரணம் என குற்றச்சாட்டு
“காசாவில் பஞ்சம்“; அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஐ.நா சபை - இஸ்ரேல் தான் காரணம் என குற்றச்சாட்டு
Annamalai Vs Stalin: “முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எல்லாம் ‘பய‘ மயம்“ - பூத் கமிட்டி மாநாட்டில் அண்ணாமலை விளாசல்
“முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எல்லாம் ‘பய‘ மயம்“ - பூத் கமிட்டி மாநாட்டில் அண்ணாமலை விளாசல்
Nainar Slams DMK: “Disaster மாடல் ஆட்சி“; “முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி.. வாக்குறுதி என்னாச்சு.?“: நயினார் அசத்தல் பேச்சு
“Disaster மாடல் ஆட்சி“; “முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி.. வாக்குறுதி என்னாச்சு.?“: நயினார் அசத்தல் பேச்சு
Bihar SIR SC Order: பீகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்க்க உத்தரவு; உச்சநீதிமன்றம் அதிரடி
பீகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்க்க உத்தரவு; உச்சநீதிமன்றம் அதிரடி
பட்டதாரிகளுக்கு பொன்னான வாய்ப்பு! ரூ.6 லட்சம் மானியத்துடன் சுய தொழில்: உடனே விண்ணப்பிங்க!
பட்டதாரிகளுக்கு பொன்னான வாய்ப்பு! ரூ.6 லட்சம் மானியத்துடன் சுய தொழில்: உடனே விண்ணப்பிங்க!
Embed widget