மேலும் அறிய

Tamil period: பள்ளி மாணவர்களுக்கு தமிழ் பாடவேளை எண்ணிக்கை குறைப்பு.. எழுப்பப்படும் கேள்விகள்..

பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மொழிப் பாடவேளை எண்ணிக்கைகள் குறைக்கப்பட்டிருப்பது கேள்விகளை எழுப்பியுள்ளது.

பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தமிழ் பாடவேளை எண்ணிக்கைகள் குறைக்கப்பட்டிருப்பது கேள்விகளை எழுப்பி உள்ளது. வாரத்திற்கு 7 பாடவேளைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், 6-ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

நடந்து முடிந்த  10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் தோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில் தமிழ் மொழிப் பாட வேளைகள் குறைக்கப்பட்டுள்ளன. 

அதேபோல சமூக அறிவியல் பாடத்திலும் பாடவேளைகள் குறைக்கப்பட்டுள்ளன. 

47 ஆயிரம் மாணவர்கள் தோல்வி

10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடத்தில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே உள்ளது. 2017-ம் ஆண்டு 31,625 மாணவர்களும் 2018-ம் ஆண்டு 33,707 மாணவர்களும் தமிழ்ப் பாடத்தில் தோல்வி அடைந்தனர். 2019-ம் ஆண்டு 36,108 பேர் தேர்ச்சி பெறவில்லை. 2020, 2021ஆம் ஆண்டில் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்ட நிலையில், 2022 பொதுத் தேர்வு முடிவுகளில் தமிழ்ப் பாடத்தில் தோல்வி அடைந்தவர்களின் எண்ணிக்கை 47,000 ஆக அதிகரித்தது. 

இந்த சூழலில், தமிழகப் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் சமூக அறீவியல் பாடவேளைகளின் எண்ணிக்கை 7-ல் இருந்து 6-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி குறைந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறையின் இந்த நடவடிக்கை பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.


Tamil period: பள்ளி மாணவர்களுக்கு தமிழ் பாடவேளை எண்ணிக்கை குறைப்பு.. எழுப்பப்படும் கேள்விகள்..

கல்வி இணைச் செயல்பாடுகள்

எனினும்  பள்ளிக் கல்வித்துறையின் நடவடிக்கை குறித்து அரசுப் பள்ளி ஆசிரியர் உமா மகேஸ்வரி விளக்கம் அளித்துள்ளார். ’ஏபிபி நாடு’விடம் பேசிய அவர், ’’மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்ததற்கும் இந்த நடவடிக்கைக்கும் சம்பந்தம் இல்லை. கொரோனா காரணமாக ஏற்பட்ட கற்றல் இழப்பே தோல்விக்குக் காரணம். போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும். 

பள்ளி வகுப்பறைகளில் கல்வி இணைச் செயல்பாடுகள் என்ற நடைமுறை ஏற்கெனவே இருப்பதுதான். ஆனால் அதற்கென்று இதுவரை தனியாக பாடவேளை ஒதுக்கப்பட்டதில்லை. இந்த நிலையில், தனி பாடவேளை ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாட வேளைகளில் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் கவிதை எழுதுவது, பட்டிமன்றம் நடத்துவது, கட்டுரைகள் எழுதுவது என்பன உள்ளிட்ட கல்வி இணைச் செயல்பாடுகள் புதிய பாட வேளையில் மேற்கொள்ளப்படும்’’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Breaking News LIVE: ஒட்டுமொத்த இந்துக்களையும் ராகுல் காந்தி அவமதித்துவிட்டார் - பிரதமர் மோடி
Breaking News LIVE: ஒட்டுமொத்த இந்துக்களையும் ராகுல் காந்தி அவமதித்துவிட்டார் - பிரதமர் மோடி
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin Vs Vijay | திமுக அடி மடியிலேயே.. சவால் விடும் விஜய்..! BEAST MODE ஆரம்பம்Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?Chennai's Amirtha | அடுத்த கட்ட பாய்ச்சலில் பிரபல கல்வி குழுமம்..பிராண்ட் அம்பாசிடராக ஸ்ரீலீலாJagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Breaking News LIVE: ஒட்டுமொத்த இந்துக்களையும் ராகுல் காந்தி அவமதித்துவிட்டார் - பிரதமர் மோடி
Breaking News LIVE: ஒட்டுமொத்த இந்துக்களையும் ராகுல் காந்தி அவமதித்துவிட்டார் - பிரதமர் மோடி
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Visu Birthday : குடும்ப சித்திரங்களின் ஏகலைவன் விசுவின் பிறந்தநாள் இன்று !
Visu Birthday : குடும்ப சித்திரங்களின் ஏகலைவன் விசுவின் பிறந்தநாள் இன்று !
அதிரடி! மக்கள் நல்வாழ்வு, வனத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு புதிய செயலாளர்கள்  - முழு விவரம்
அதிரடி! மக்கள் நல்வாழ்வு, வனத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு புதிய செயலாளர்கள் - முழு விவரம்
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
செப்டம்பர் 17-ல் மதுவிலக்கு மாநாடு பெண்கள் தலைமையில் நடத்தப்படும் - விசிக தலைவர் திருமாவளவன்
செப்டம்பர் 17-ல் மதுவிலக்கு மாநாடு பெண்கள் தலைமையில் நடத்தப்படும் - விசிக தலைவர் திருமாவளவன்
Embed widget