மேலும் அறிய

அதிரடி உத்தரவு.. பள்ளி‌, கல்லூரி, அங்கன்வாடிகள்‌: சேதமடைந்த கட்டிடங்களை உடனடியாக அப்புறப்படுத்துக..

தமிழ்நாடு முழுவதும்‌ சேதமடைந்துள்ள கட்டடங்களைக்‌ கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சித்‌ தலைவர்களுக்கும்‌ தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தமிழ்நாடு முழுவதும்‌ சேதமடைந்துள்ள கட்டடங்களைக்‌ கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சித்‌ தலைவர்களுக்கும்‌ தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தமிழ்நாடு முழுவதும்‌ பல இடங்களில்‌ சேதமடைந்துள்ள பொதுக்‌ கட்டடங்கள்‌ மற்றும்‌ இதர கட்டுமானங்கள்‌ குறித்து ஊடகங்களில்‌ செய்திகள்‌ வந்த வண்ணம்‌ உள்ளன. எனவே, பொது மக்களின்‌ பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எதுவாக, சேதமடைந்த மற்றும்‌ சிதிலமடைந்த கட்டடங்கள்‌ மற்றும்‌ இதர கட்டுமானங்களை கண்டறிவது என்பது மிகவும்‌ அவசியமாகிறது.

ஆகவே, சேதமடைந்துள்ள பொதுக்‌ கட்டடங்கள்‌, பள்ளிகள்‌, கல்லூரிகள்‌, ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌, மருத்துவமனைகள்‌, அங்கன்வாடி மையங்கள்‌, விடுதிகள்‌, பேருந்து நிலையங்கள்‌, அலுவலக கட்டடங்கள்‌ மற்றும்‌ இதர முக்கிய உட்கட்டமைப்புகளான மேல்நிலை நீர்த்தேக்கத்‌ தொட்டிகள்‌, பாலங்கள்‌ ஆகியவை குறித்து ஒருங்கிணைந்த மதிப்பீடு மற்றும்‌ உரிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள வேண்டி பின்வரும்‌ இனங்களில்‌ கவனம்‌ செலுத்துமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது,

அதன்படி சேதமடைந்த மற்றும்‌ சிதிலமடைந்த கட்டடங்களைக்‌ கண்டறிந்து தொடர்புடைய துறைகள்‌ மற்றும்‌ முகமைகளுடன்‌ ஒருங்கிணைந்து அனைத்து பொது மற்றும்‌ அரசு கட்டடங்கள்‌ மற்றும்‌ இதர உட்கட்டமைப்புகளை முழுமையாகக் கணக்கெடுப்பு செய்ய வேண்டியும்‌, அவற்றில்‌ சேதமடைந்துள்ள அல்லது
சிதிலமடையும்‌ தருவாயில்‌ உள்ளவற்றைக்‌ உறுதி செய்து, மேல்‌ நடவடிக்கைக்காக அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்‌.

பழுதுநீக்க நடவடிக்கை

அத்துடன்‌ கட்டமைப்பு உறுதியாக உள்ளதா அல்லது சேதம்‌ மற்றும்‌ சிதிலம்‌ அடைந்துள்ளதா என்பதை மதிப்பீடு செய்து அதன்‌ உறுதி தன்மை உறுதியாக இருப்பது கண்டறியப்பட்டால்‌ பழுதுநீக்க நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டு பாதுகாப்பு மற்றும்‌ செயல்பாட்டை உறுதி செய்ய வேண்டும்‌. சிதிலமடைந்த கட்டமைப்புகள்‌ மற்றும்‌ அச்சுறுத்தும்‌ வகையில்‌ அமைந்துள்ள கட்டடங்கள்‌ இருப்பது ஆய்வின்போது தெரிய வந்தால்‌ உரிய நடைமுறைகளைப்‌ பின்பற்றி பாதுகாப்பாக இடிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள வேண்டும்‌.

சேதமடைந்த மற்றும்‌ சிதிலமடைந்த கட்டடங்களில்‌ உரிய பழுதுநீக்கப்‌ பணிகள்‌ அல்லது மறுகட்டமைப்பு பணிகள்‌ மேற்கொள்ளப்படும்‌ வரை சேதமடைந்த கட்டடங்களைப்‌ பயன்படுத்துவதைத்‌ தடை செய்வதை தெளிவாக அறிவிக்க வேண்டும்‌.

வடகிழக்குப்‌ பருவமழை தொடங்கும் முன்...

மேலும்‌ முக்கியத்துவம்‌ வாய்ந்த பொது இடங்களான பள்ளிகள்‌, கல்லூரிகள்‌, விடுதிகள்‌, மருத்துவமனைகள்‌, ஆரம்ப நிலையங்கள்‌, அங்கன்வாடி மையங்கள்‌, பேருந்து நிலையங்கள்‌ மற்றும்‌ இதர முக்கிய கட்டமைப்புகளுக்கு சிறப்புக்‌ கவனம்‌ செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்‌. இம்முக்கியத்துவம்‌ வாய்ந்த பணிகளை வடகிழக்குப்‌ பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே, வருகிற 30.09.2023-க்குள்‌ பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்து பொதுமக்களின்‌ நலன்‌ பேணப்பட வேண்டும்‌.

இவ்வாறு ஒவ்வொரு மாவட்டங்களிலும்‌ கண்டறியப்பட்டுள்ள கட்டடங்களில்‌ பழுதுநீக்கப்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்ட கட்டடங்கள்‌ மற்றும்‌ சிதிலமடைந்து இடிக்கப்பட்டுள்ள கட்டடங்கள்‌ ஆகியவை குறித்து ஒரு விரிவான மற்றும்‌ முழுமையான அறிக்கையினை கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ மற்றும்‌ வருவாய்‌
நிர்வாக ஆணையருக்கு அனுப்புவதில்‌ கவனம்‌ செலுத்திட வேண்டும்‌.

எனவே, பொது மக்களின்‌ பாதுகாப்பு நலனை உறுதி செய்வது நமது தலையாய கடமையாக கருதி சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்‌ மற்றும்‌ உயர்‌ அலுவலர்கள்‌ சிறப்பு கவனம்‌ செலுத்தி அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு இந்நடவடிக்கைகள்‌ தொடர்பான அறிக்கையை அரசினுடைய மேலான கவனத்திற்கு கொண்டு செல்வதையும்‌ உறுதி செய்ய வேண்டும். 

இவ்வாறு தலைமைச் செயலாளர்‌ சிவ்தாஸ்‌ மீனா கடிதம்‌ வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சித்‌ தலைவர்களுக்கும்‌ தெரிவித்துள்ளார்‌.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Lok Sabha: அனல்பறந்த ‘ஆபரேஷன் சிந்தூர்‘ விவாதம்; அமைச்சர்கள் விளக்கமும், எதிர்க்கட்சிகளின் கேள்வியும்
அனல்பறந்த ‘ஆபரேஷன் சிந்தூர்‘ விவாதம்; அமைச்சர்கள் விளக்கமும், எதிர்க்கட்சிகளின் கேள்வியும்
IND Vs Pak Asia Cup: ”காசு பார்க்க துடிக்கும் பிசிசிஐ” அப்பாவை கொன்ற பாகிஸ்தானின் விளையாட்டை மகன் பார்க்க வேண்டுமா?
IND Vs Pak Asia Cup: ”காசு பார்க்க துடிக்கும் பிசிசிஐ” அப்பாவை கொன்ற பாகிஸ்தானின் விளையாட்டை மகன் பார்க்க வேண்டுமா?
Bihar SIR: ”எதிர்க்கட்சிகள் கத்துனாலும் காதில் வாங்கமாட்டோம்” SIR விவகாரத்தில் பாஜக திட்டவட்டம்? ஏன் தெரியுமா?
Bihar SIR: ”எதிர்க்கட்சிகள் கத்துனாலும் காதில் வாங்கமாட்டோம்” SIR விவகாரத்தில் பாஜக திட்டவட்டம்? ஏன் தெரியுமா?
OPS: தனிக்கட்சி தொடங்குவாரா ஓபிஎஸ்? அதுலயும் இத்தனை சிக்கல் இருக்கா..!
OPS: தனிக்கட்சி தொடங்குவாரா ஓபிஎஸ்? அதுலயும் இத்தனை சிக்கல் இருக்கா..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Modi Secret Call : மோடியுடன் ரகசிய PHONECALLரேடாரில் மூர்த்தி, சக்கரபாணி!ஆட்டத்தை தொடங்கிய EPS
Panneerselvam vs EPS | OPS- ஐ கழற்றி விட்ட BJP
Madhampatty Rangaraj |  2வது மனைவியுடனும் சண்டை? PHOTOS-ஐ லீக் செய்த ஜாய் சிக்கலில் மாதம்பட்டி ரங்கராஜ்
MK Stalin Discharge | காலை வெடிகுண்டு மிரட்டல்?மாலை முதல்வர் Discharge! Alert mode- ல் போலீஸ்
பொண்டாட்டி இருக்கும்போதே மாதம்பட்டி 2 வது திருமணம் கல்யாணத்துக்கு முன்பே கர்பம்.. | Joy Crizildaa | Shruti Rangaraj

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha: அனல்பறந்த ‘ஆபரேஷன் சிந்தூர்‘ விவாதம்; அமைச்சர்கள் விளக்கமும், எதிர்க்கட்சிகளின் கேள்வியும்
அனல்பறந்த ‘ஆபரேஷன் சிந்தூர்‘ விவாதம்; அமைச்சர்கள் விளக்கமும், எதிர்க்கட்சிகளின் கேள்வியும்
IND Vs Pak Asia Cup: ”காசு பார்க்க துடிக்கும் பிசிசிஐ” அப்பாவை கொன்ற பாகிஸ்தானின் விளையாட்டை மகன் பார்க்க வேண்டுமா?
IND Vs Pak Asia Cup: ”காசு பார்க்க துடிக்கும் பிசிசிஐ” அப்பாவை கொன்ற பாகிஸ்தானின் விளையாட்டை மகன் பார்க்க வேண்டுமா?
Bihar SIR: ”எதிர்க்கட்சிகள் கத்துனாலும் காதில் வாங்கமாட்டோம்” SIR விவகாரத்தில் பாஜக திட்டவட்டம்? ஏன் தெரியுமா?
Bihar SIR: ”எதிர்க்கட்சிகள் கத்துனாலும் காதில் வாங்கமாட்டோம்” SIR விவகாரத்தில் பாஜக திட்டவட்டம்? ஏன் தெரியுமா?
OPS: தனிக்கட்சி தொடங்குவாரா ஓபிஎஸ்? அதுலயும் இத்தனை சிக்கல் இருக்கா..!
OPS: தனிக்கட்சி தொடங்குவாரா ஓபிஎஸ்? அதுலயும் இத்தனை சிக்கல் இருக்கா..!
சோழர் பெருமைபற்றி பாஜக பாடம்‌ எடுப்பதா? கபட திமுகதான் காரணம்- சாடிய விஜய்!
சோழர் பெருமைபற்றி பாஜக பாடம்‌ எடுப்பதா? கபட திமுகதான் காரணம்- சாடிய விஜய்!
அதிகரிக்கும் நாய்கள் அட்டகாசம்.. கருணை கொலை செய்ய தமிழக அரசு உத்தரவா?
அதிகரிக்கும் நாய்கள் அட்டகாசம்.. கருணை கொலை செய்ய தமிழக அரசு உத்தரவா?
பழங்கள் மட்டுமே உண்டு, எடை குறைப்பது இத்தனை ஆபத்தை ஏற்படுத்துமா? மருத்துவர் எச்சரிக்கை!
பழங்கள் மட்டுமே உண்டு, எடை குறைப்பது இத்தனை ஆபத்தை ஏற்படுத்துமா? மருத்துவர் எச்சரிக்கை!
டெல்லிக்கு பறந்த அமைச்சர் அன்பில் மகேஸ்; அதிரடி பயணம் எதுக்குன்னு தெரியுமா?
டெல்லிக்கு பறந்த அமைச்சர் அன்பில் மகேஸ்; அதிரடி பயணம் எதுக்குன்னு தெரியுமா?
Embed widget