மேலும் அறிய

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி; ரூ.10,000 ரொக்கப்பரிசு- முழு விவரம்!

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு மொத்தம் ரூ.10,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறைக்கான 2021-2022ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில் “நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா,  முத்தமிழறிஞர்  கலைஞர் ஆகியோரின் கருத்துக்களையும்  சமூகச் சிந்தனைகளையும்  இளைய தலைமுறையினரிடம்  கொண்டு  சேர்க்கும்  வண்ணம் ஆண்டுதோறும் அவர்களது பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்” என அறிவிப்பு வெளியிடப்பட்டது.  

அதற்கிணங்க பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு 15.09.2022, 17.09.2022 ஆகிய நாள்களில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
    
பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும்
1. முதல் பரிசு-  ரூ.5000
2. இரண்டாம் பரிசு- ரூ.3000
3. மூன்றாம் பரிசு- ரூ. 2000 என்ற வகையில் வழங்கப்படும்.

மேலும் இப்போட்டியில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவர்களில் இருந்து இருவர் மட்டும் தேர்வு  செய்யப்பட்டு, அவர்களுக்கு சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2000 வீதம் தனியே வழங்கப்பெறும்.

பள்ளி மாணவர்களுக்கு- பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் ஆகியோரின் பேச்சுப் போட்டி நாள்: 15.09.2022, 17.09.2022

பேரறிஞர் அண்ணா பேச்சுப் போட்டி தலைப்புகள்
    
1. தாய் மண்ணிற்குப் பெயர் சூட்டிய தனயன்
2. மாணவர்களுக்கு அண்ணா
3. அண்ணாவின் மேடைத்தமிழ்
4. அண்ணா வழியில் அயராது உழைப்போம்!
5. அண்ணாவின் வாழ்விலே!    

தந்தை பெரியார் பேச்சுப் போட்டி தலைப்புகள்

1. பெண்ணடிமை  தீருமட்டும்
2. தந்தை பெரியாரின் வாழ்க்கையிலே
3. தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள்
4. பெரியாரின் உலக நோக்கு.    


பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி; ரூ.10,000 ரொக்கப்பரிசு- முழு விவரம்!

பள்ளிகளுக்கான போட்டிகள் வட சென்னையில் அரசு உயர்நிலைப் பள்ளி, வில்லிவாக்கத்திலும் தென் சென்னையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அசோக்நகர், சென்னை-5லும், மத்திய சென்னையில் செயகோபால் கரோடியா மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை, சென்னையிலும் நடைபெறுகின்றன.  

நடைபெறும் நேரம்: காலை 10.00 மணி
 
கல்லூரி  மாணவர்களுக்கு

பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் ஆகியோரின் பேச்சுப் போட்டி நாள் : 15.09.2022, 17.09.2022

தலைப்புகள்:
 
பேரறிஞர் அண்ணா பேச்சுப்போட்டி   

1. அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும்
2. அண்ணாவின் மனிதநேயம்
3. அண்ணாவின் தமிழ் வளம்
4. அண்ணாவும் தமிழ்ச் சமுதாயமும்
5. அண்ணாவின் அடிச்சுவட்டில்    

தந்தை பெரியார் பேச்சுப்போட்டி    

1. பெண் ஏன் அடிமையானாள் ?
2. இனிவரும் உலகம்
3. சமுதாய விஞ்ஞானி பெரியார்
 4. உலகச் சிந்தனையாளர்களும் பெரியாரும்
5. பெரியார் காண விரும்பிய சமூகநீதி
6. மூட நம்பிக்கை ஒழிப்பில் தந்தை பெரியார்.    

கல்லூரிப்போட்டிகள் வட சென்னையில் அம்பேத்கர் கலைக் கல்லூரி வியாசர்பாடியிலும்  தென் சென்னையில் ராணிமேரி கல்லூரி, சென்னையிலும்   மத்திய சென்னையில் பாரதி மகளிர் கலைக் கல்லூரி, பிராட்வே, சென்னையிலும் நடைபெறுகின்றன.  

நடைபெறும் நேரம்: காலை 10.00 மணி. 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget