மேலும் அறிய

11th Admission: ‘இது ரொம்ப முக்கியம்’ - முதன்மை கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

10ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் 11ஆம் வகுப்பு சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்று முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

10ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் 11ஆம் வகுப்பு சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்று முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதி தேர்வு தொடங்கி, ஜூலை 4ஆம் தேதி வரை துணைத் தேர்வுகள் நடைபெற்றன. குறிப்பாக ஜூன் 27ஆம் தேதி மொழித் தாளும் 28ஆம் தேதி ஆங்கிலப் பாடமும் நடைபெற்றது. ஜூன் 30ஆம் தேதி கணிதப் பாடமும் ஜூலை 1ஆம் தேதி விருப்ப மொழித் தாளுக்கும் ஜூலை 3ஆம் தேதி அறிவியல் பாடத்துக்கும் துணைத் தேர்வுகள் நடைபெற்றன. ஜூலை 4ஆம் தேதி சமூக அறிவியல் பாடத்துக்கும் தேர்வுகள் நடைபெற்றன. 

இந்த நிலையில் தேர்வு முடிவுகள் ஜூலை 26ஆம் தேதி அன்று வெளியாகி உள்ளன. பத்தாம்‌ வகுப்பு துணைத்‌ தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள்‌ (தட்கல்‌ தனித் தேர்வர்கள்‌ உட்பட) தேர்வு முடிவினை, அன்று  பிற்பகல்‌ முதல்‌ இணையதளத்தில் இருந்து தங்களது தேர்வெண்‌ மற்றும்‌ பிறந்த தேதியைப் பதிவு செய்து, தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழ்களாகவே பதிவிறக்கம்‌ செய்தனர்.

இதற்கிடையே 10ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் 11ஆம் வகுப்பு சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்று முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி மாநிலத்‌ திட்ட இயக்குநர் தெரிவித்து உள்ளதாவது:

''அரசுப் பள்ளிகளில்‌ பயின்று 10 ஆம்‌ வருப்பு பொதுத்‌ தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள்‌ கடந்த ஜூன்‌ - ஜூலை 2023-ல்‌ துணைத்‌ தேர்வு எழுதினர். தேர்வெழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள்‌ கடந்த 24.07.2023 அன்று வெளியாகின. இந்த நிலையில்‌ துணைத்‌ தேர்வு எழுதிய மாணவர்களில்‌ 21,951 பேர்‌ தேர்ச்சி பெற்றுள்ளார்கள்‌. தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களின்‌ 11ஆம்‌ வகுப்பு சேர்க்கையை‌ உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களும்‌ கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்‌.

தலைமை ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும்?

* துணைத்‌ தேர்வு எழுதி தேர்ச்‌சி பெற்ற மாணவர்கள்‌ தவறாமல்‌ பள்ளிகளுக்கு வந்து மதிப்பெண்‌ சான்றிதழ்‌ பெற்றுச் செல்வதை, பள்ளித்‌ தலைமையாசிரியர்கள்‌ உறுதி செய்தல்‌ வேண்டும்‌. 

* தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும்‌, அவர்களின்‌ விருப்பத்தின்‌ அடிப்படையில்‌  11ஆம் வகுப்பு விருப்பப்‌ பாட பிரிவு மற்றும்‌ பள்ளிகளில்‌ சேர்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருதல்‌ வேண்டும்‌.

11 ஆம்‌ வகுப்பு சேர்க்கை பெற்ற மாணவர்களின்‌ விவரங்களை எமிஸ் தளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்ய‌ தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்‌''. 

இவ்வாறு ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி மாநிலத்‌ திட்ட இயக்குநர் தெரிவித்து உள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Embed widget