மேலும் அறிய

Ponmudi on Exams: மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அண்ணா யுனிவர்சிட்டி.. விளக்கம் அளித்துள்ள அமைச்சர் பொன்முடி!

தாமதமாக பதிவேற்றம் செய்த விடைத்தாள்களுக்கு ஆப்சென்ட் போட்டிருந்தால் அது தவறு என்றும், அந்த விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்படும் எனவும் கூறினார்.

தாமதமாக பதிவேற்றம் செய்த விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்படும் என்றும், இனி நேரடித் தேர்வுகள் மட்டுமே நடைபெறும் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் தேர்வில் தாமதமாக விடைத்தாள் பதிவேற்றம் செய்த 10,000 மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அண்ணா பல்கலைக்கழத்தின் இந்த உத்தரவால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தாமதமாக பதிவேற்றம் செய்த விடைத்தாள்களுக்கு ஆப்சென்ட் போட்டிருந்தால் அது தவறு என்றும், அந்த விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்படும் எனவும் கூறினார்.

மேலும், தரத்தை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் இனி நேரடித் தேர்வுகள் மட்டுமே நடைபெறும் என்றும், ஆன்லைன் தேர்வுகளால் கல்வித்தரம் பாதிக்கப்படும் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

TN Budget 2022: அரசுப் பள்ளி மாணவர்களின் உயர் கல்விக்கு ஆகும் முழுச் செலவையும் அரசே ஏற்கும்: பட்ஜெட்டில் அறிவிப்பு

முன்னதாக, கொரோனா தொற்று பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டது. கொரோனா காரணமாக இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் ஜனவரி மாதம் நடத்தப்பட்டன. தேர்வு எழுதுபவர்கள் தங்களது விடைத்தாள்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இந்த நிலையில், ஆன்லைனில் தேர்வு நடைபெற்ற தேர்வில் தாமதமாக விடைத்தாளை பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கு ஆப்சென்ட் வழங்க உத்தரவிடப்பட்டது. ஆப்சென்ட் வழங்குமாறு விடைத்தாள் மதிப்பீட்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. தாமதமாக பதிவேற்றம் செய்திருந்த மாணவர்களின் விடைத்தாளை மதிப்பீடு செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

விடைத்தாள் பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டதாக விளக்கமளித்த அண்ணா பல்கலைக்கழகம், உரிய கால அவகாசம் வழங்கியும் விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களுக்கு ஆப்சென்ட் என்று குறிப்பிட்டுதான் முடிவுகள் வெளியாகும் எனவும் கூறியுள்ளது. மேலும், மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டது குறித்து ஆலோசிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் துணை வேந்தர் கூறியுள்ளார்.

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டதால் அவர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இதனால், அவர்கள் தேர்ச்சி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆப்சென்ட் எனக் குறிக்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் தேர்வில் கலந்துகொள்ளும்படி அழைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

மாணவர்கள் ஆன்லைன் தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு வெளியிட்டார். வழக்கமாக நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும் செமஸ்டர் தேர்வுகள் கொரோனா தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு ஜனவரிக்கு தள்ளிவைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Hyperloop Technology: சென்னை டூ பெங்களூரு 25 நிமிடத்திலா? சென்னை ஐஐடி மாணவர்களின் புதிய முயற்சி ..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

 

தலைப்பு செய்திகள்

மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Embed widget