மேலும் அறிய

NEET UG 2024 Result: குஜராத் மாணவி பிளஸ் 2-ல் ஃபெயில்; நீட் தேர்வில் 720-க்கு 705 மதிப்பெண்கள்- வெளியான அதிர்ச்சித் தகவல்!

நீட் தேர்வு முடிவுகளில் 720 மதிப்பெண்களுக்கு 705 மதிப்பெண்கள் பெற்று குஜராத் மாநிலத்தில் சிறந்த மாணவராகத் தேர்ச்சி பெற்றுள்ளார்.

12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி, நீட் நுழைவுத் தேர்வில் 705 மதிப்பெண்கள் பெற்ற விவரம் வெளியாகி, கேட்போரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக நீட் இளநிலைத் தேர்வு முடிவுகள் நேற்று (ஜூலை 20) வெளியாகின. ஏராளமான சமூக ஊடக பயனர்கள், தங்களின் மதிப்பெண்களைப் பகிர்ந்து வருகின்றனர். இதில் குஜராத்தைச் சேர்ந்த ஒரு மாணவியின் மதிப்பெண்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.

இதுகுறித்துத் தனியார் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, அகமதாபாத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் அருகில் உள்ள கோச்சில் மையத்தில் சேர்ந்துள்ளார். கோச்சிங் படிக்க, அருகிலேயே இருந்த பள்ளி ஒன்றில் டம்மியாக சேர்ந்துள்ளார். கோச்சிங் மையத்தில் அந்த மாணவி குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால், 2 மாதத்திலேயே அவர் பள்ளிப் படிப்பைத் தொடர அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

பிளஸ் 2-ல் ஃபெயில்; நீட் தேர்வில் 720-க்கு 705 மதிப்பெண்கள்

இயற்பியல் பாடத்தில் 21 மதிப்பெண்கள், வேதியியலில் 31 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். உயிரியல் பாடத்தில் 39 மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 59 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். அந்த மாணவியின் பெற்றோர்கள் இருவரும் மருத்துவர்கள் என்று கூறப்படுகிறது. 

எனினும் நீட் தேர்வு முடிவுகளில் 720 மதிப்பெண்களுக்கு 705 மதிப்பெண்கள் பெற்று குஜராத் மாநிலத்தில் சிறந்த மாணவராகத் தேர்ச்சி பெற்றுள்ளார். இயற்பியலில் 99.8 பர்சண்டைல், வேதியியலில் 99.1 பர்சண்டைல், உயிரியியல் 99.1 பர்சண்டைல் என ஒட்டுமொத்தமாக 99.9 பர்சண்டைல் மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாத நிலை

இந்த பர்சண்டைல் மூலம் இந்தியாவின் தலைசிறந்த கல்லூரிகளில் அவருக்கு சேர்க்கை கிடைக்க வாய்ப்புள்ளது. எனினும் 12ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களை சம்பந்தப்பட்ட மாணவர் பெற்றிருக்க வேண்டும் என்பதால், அவரால் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் அவரின் 12ஆம் வகுப்பு மதிப்பெண்ணும் நீட் தேர்வு மதிப்பெண்ணும் ஒருவருடையதுதானா என்பது இன்னும் முறையாக உறுதி செய்யப்படவில்லை.


NEET UG 2024 Result: குஜராத் மாணவி பிளஸ் 2-ல் ஃபெயில்; நீட் தேர்வில் 720-க்கு 705 மதிப்பெண்கள்- வெளியான அதிர்ச்சித் தகவல்!

நீட் தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவு குறித்து உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவருகிறது. இதில், 2024 நீட் தேர்வு முடிவுகளை நகரம், தேர்வு மையங்கள் வாரியாகத் தனித்தனியாக சனிக்கிழமை மதியத்துக்குள் மணிக்குள் வெளியிட வேண்டும் என்று தேசியத் தேர்வுகள் முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. எனினும் மாணவர்களின் விவரங்களை வெளியிடத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்துத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. 

நாளை நீட் தேர்வு முறைகேடு வழக்கு விசாரணை

தொடர்ந்து நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு விசாரணை நாளை (ஜூலை 22) நடைபெற உள்ளது. 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Teachers Promotion : ஆசிரியர்களுக்கு ஷாக்.! பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு கட்டாயமா.? பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
ஆசிரியர்களுக்கு ஷாக்.! பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு கட்டாயமா.? பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
சாஸ்த்ரா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கை 2026: தரவரிசைப் பட்டியலில் சென்னை மாணவர் சாதனை
சாஸ்த்ரா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கை 2026: தரவரிசைப் பட்டியலில் சென்னை மாணவர் சாதனை
சிபிஎஸ்இ (CBSE) விடைத்தாள் மதிப்பீட்டு முறைகேடு.. மேல்நடவடிக்கை குறித்து ஒன்றிய அமைச்சகம் பதில் - மதுரை எம்.பி !
சிபிஎஸ்இ (CBSE) விடைத்தாள் மதிப்பீட்டு முறைகேடு.. மேல்நடவடிக்கை குறித்து ஒன்றிய அமைச்சகம் பதில் - மதுரை எம்.பி !

வீடியோ

Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூன் 9-ம் தேதி(09.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? பாருங்க
சென்னை மக்களே.! ஜூன் 9-ம் தேதி(09.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? பாருங்க
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
Embed widget