மேலும் அறிய

Naan Mudhalvan Scheme: நான்‌ முதல்வன் திட்டம் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் விரிவாக்கம்: 13 லட்சம் பேருக்கு பயிற்சி- முதல்வர் ஸ்டாலின்

அரசு கலை, அறிவியல்‌ மற்றும்‌ பொறியியல்‌ கல்லூரிகளில்‌ தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டம்‌, பாலிடெக்னிக்குகள்‌ மற்றும்‌ தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும்‌ விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அரசு கலை, அறிவியல்‌ மற்றும்‌ பொறியியல்‌ கல்லூரிகளில்‌ தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டம்‌, பாலிடெக்னிக்குகள்‌ மற்றும்‌ தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும்‌ விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ தலைமையில்‌ “நான்‌ முதல்வன்‌” திட்டத்தின்‌ ஓராண்டு வெற்றி விழா நடைபெற்றது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ பயிற்சி பெற்ற பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரி மாணவர்களால்‌ அமைக்கப்பட்டுள்ள திறன்‌ சாதனை கண்காட்சியை திறந்து வைத்து, “நான்‌ முதல்வன்‌" திட்டத்தை பாலிடெக்னிக்குகள்‌ மற்றும்‌ தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு விரிவுப்படுத்தி, “நான்‌ முதல்வன்‌” நிரலோட்ட இணைய தளம்‌ (Hackathon), காலணி உற்பத்தி தொழில்நுட்பம்‌, ஆயத்த ஆடை உற்பத்தி, சரக்கு நகர்வு மேலாண்மை ஆகிய பிரிவுகளில்‌ ஒரு புதிய இளங்கலை தொழிற்கல்வி பட்டப்படிப்பு, கலைஞர்‌ 100 இணையதளம்‌ ஆகியவற்றை தொடங்கி வைத்து, ஒன்றிய அரசின்‌ குடிமைப்‌ பணி போட்டித்‌ தேர்வுகளில்‌ தமிழக இளைஞர்களின்‌ பங்கேற்பை அதிகரிக்கும்‌ வகையில்‌ முதல்நிலை தேர்வில்‌ தேர்ச்சி பெற்ற 10 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக தலா 25 ஆயிரம்‌ ரூபாய்‌ வழங்கினார்‌.

உயர்‌ கல்வியில்‌ அடியெடுத்து வைக்கும்‌ பொறியியல்‌, கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரி மாணவர்கள்‌ அனைவரும்‌, இன்றைய தொழில்‌ துறைக்கு தேவையான நவீன திறன்களை கற்றுணர்ந்து அவர்களது துறைகளில்‌ வெற்றி பெற ஏதுவாக தமிழ்நாடு முதலமைச்சரால்‌ 2022ஆம்‌ ஆண்டு மார்ச்‌ மாதம்‌ தொடங்கி வைக்கப்பட்ட ‌ திறன்‌ மேம்பாட்டிற்கான திட்டம்‌ “நான்‌ முதல்வன்‌” திட்டம்‌ ஆகும்‌.

இத்திட்டத்தின்‌ மூலம்‌, கல்லூரி மாணவர்களுக்கு முன்னணி நிறுவனங்கள்‌ வாயிலாக Data Engineering, Genomic Mastery, PCR Technology, Plant Tissue Culture, Algal Technology, Graphic டிசைன், ரோபோட்டிக்ஸ்‌, செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல்‌, இன்டர்நெட்‌ ஆஃப்‌ திங்ஸ், Cloud Computing, Industry 4.0, சைபர்‌ பாதுகாப்பு, பெருந்தரவு ஆய்வு, Virtual Reality, பிளாக்செயின்‌ டெவலப்மன்ட்‌), Sustainable Building Design, செயற்கை அறிவு தொழில்‌ நுட்பத்தின்‌ உன்னத வடிவமான  சாட் ஜிபிடி, 5ஜி தொழில்நுட்பம்‌ போன்ற நவீன பாடப்பிரிவுகளில்‌ பயிற்சிகள்‌ வழங்கி அவர்களுக்குத்‌ தகுதியான வேலைவாய்ப்புகள்‌ கிடைக்க வேண்டும்‌ என்ற தொலைநோக்குடன்‌ தொடங்கப்பட்டது. தொடங்கி ஓராண்டிலேயே பொறியியல்,‌ கலை அறிவியல்‌ கல்லூரிகளில்‌ 13 இலட்சத்திற்கும்‌ மேற்பட்ட மாணவர்களுக்கு திறன்‌ பயிற்சி அளித்து “நான்‌ முதல்வன்‌” திட்டம்‌ சாதனை புரிந்துள்ளது.

13 லட்சம் பேருக்குப் பயிற்சி

இந்த திட்டத்தின்‌ மூலம்‌, 2022-2023 ஆம்‌ கல்வியாண்டில்‌ பொறியியல்,‌ கலைமற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ திறன்‌ பயிற்சி முடித்தவர்களின்‌ மொத்த எண்ணிக்கை 13,14,519 ஆகும்‌. இவற்றுள்‌ இறுதியாண்டு பொறியியல்‌ பட்டப்படிப்பினை முடித்து வேலைவாய்ப்புக்கு விண்ணப்பித்திருந்த 85,053 மாணவர்களில்‌ 65,034 மாணவர்களும்‌ இறுதியாண்டு கலை பற்றும்‌ அறிவியல்‌ பட்டப்படிப்பினை முடித்து வேலைவாய்ப்புக்கு விண்ணப்பித்திருந்த 99,230 மாணவர்களில்‌ 83,223 மாணவர்களும்‌ பணிநியமனம்‌ பெற்றுள்ளனர்‌.

இவற்றுள்‌ “நான்‌ முதல்வன்‌” திட்டத்திற்கென்று பிரத்தியேகமாக நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களின்‌ மூலம்‌ கலை அறிவியல்‌ கல்லூரிகளில்‌ 20,082 மற்றும்‌ பொறியியல்‌ கல்லூரிகளில்‌ 5,844, என மொத்தம்‌ 25,926 பேர்‌ வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்‌.

“நான்‌ முதல்வன்‌” திட்டத்தின்‌ கீழ்‌ பயிற்சி பெற்ற பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரி மாணவர்களால்‌ வடிவமைக்கப்பட்ட தொழில்திறனை வெளிப்படுத்தும்‌, தொழில்‌ நுட்ப வடிவமைப்புகளை காட்சிப்படுத்தும்‌ திறன்‌ சாதனை கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்து, மாணவர்களுடன்‌ கலந்துரையாடினார்‌.

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் விரிவாக்கம்

அரசு கலை, அறிவியல்‌ மற்றும்‌ பொறியியல்‌ கல்லூரிகளில்‌ தொடங்கப்பட்ட இத்திட்டம்‌, தொழிற்கல்வி மாணவர்களின்‌ எதிர்காலத்தையும்‌ கவனத்தில்‌ கொண்டு, பாலிடெக்னிக்குகள்‌ மற்றும்‌ தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும்‌ விரிவுபடுத்தப்பட்டது.

அதனைத்‌ தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம்‌ மற்றும்‌ அரசுத்துறை நிர்வாகத்தில்‌ மக்கள் சேவையில்‌ ஏற்படும்‌ சவால்களுக்கு தீர்வு காணும்‌ வகையிலும்‌ மாணவர்களின்‌ படைப்பாற்றலையும்‌ புத்தாக்க திறனையும்‌ ஊக்குவிக்கும்‌ வகையிலும்‌ “நான்‌ முதல்வன்‌'' நிரலோட்ட இணைய தளம்‌  தொடங்கி வைக்கப்பட்டது.

பின்னர்‌, இளங்கலை தொழில்‌ கல்வியை முன்னெடுத்து தொழில்‌ முனைவோரை உருவாக்கும்‌ வகையில்‌ அண்ணா பல்கலைக்கழகத்தின்‌ கீழ்‌ காலணி உற்பத்தி தொழில்நுட்பம்‌, ஆயத்த ஆடை உற்பத்தி, சரக்கு நகர்வு மேலாண்மை ஆகிய பிரிவுகளில்‌ இளங்கலை தொழிற்கல்வி என்ற ஒரு புதிய பட்டப்படிப்பை தமிழ்நாடு முதலமைச்சர்‌  அறிமுகப்படுத்தினார்‌. 

தொடர்ந்து, பல்துறை வித்தகர்‌ முத்தமிழறிஞர்‌ கலைஞர் கருணாநிதியின்‌ பல்துறை சாதனைகளை ஆவணப்படுத்தி நினைவு கூறும்‌ விதமாக “கலைஞர்‌ 100” இணையதளம்‌ தொடங்கி வைக்கப்பட்டது.

பின்னர்‌, மத்திய அரசின்‌ குடிமைப்‌ பணி போட்டித்‌ தேர்வுகளில்‌ தமிழக இளைஞர்களின்‌ பங்கேற்பை அதிகரித்து வெற்றி பெறச்‌ செயயும்‌ நோக்கிலும்‌, இப்போட்டித்‌ தேர்வுகளில்‌ பங்கேற்க பொருளாதார ரீதியாக உள்ள தடைகளை நீக்கவும்‌, குடிமைப்‌ பணி முதல்நிலை தேர்வில்‌ தேர்ச்சி பெற்ற 10 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக, தலா 25 ஆயிரம்‌ ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர்‌‌ வழங்கினார்‌. இதில்‌ விக்னேஷ்‌ குமார்‌ என்ற மாற்றுத்திறனாளி இளைஞர்‌ குடிமைப்‌ பணி முதல்நிலை தேர்வில்‌ தேர்ச்சி பெற்று ஊக்கத்தொகை பெற்றுள்ளார்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget