மேலும் அறிய

பள்ளி வேலை நேரம் மாற்றமா? அங்கன்வாடி எல்கேஜி, யூகேஜி மூடலா?- அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

அரசுப் பள்ளிகள், அங்கன்வாடிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடப்படுமா என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.

பள்ளிகளின் வேலை நேரம் மாற்றப்படுகிறதா என்பது பற்றியும் அரசுப் பள்ளிகள், அங்கன்வாடிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடப்படுமா என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களுக்கான கல்வி குறித்த கருத்தரங்கை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (மே 12ஆம் தேதி) தொடங்கி வைத்தார். 

அதற்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

''மாணவர்கள் விடலைப் பருவத்துக்கு வரும்போது, அவர்களை எப்படி வளர்த்தெடுக்க வேண்டும் என்பது தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு முறையான கல்வி கிடைக்கவில்லை. அவர்களின் கற்றல் இடைவெளி, ஒழுக்கக் குறைபாடு ஆகியவற்றை எப்படிப் போக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். 

கொரோனாவால் ஏற்பட்ட சமூக - பொருளாதார பின்னடைவுகள் மாணவர்களின் வாழ்க்கையில் என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன? அவர்களால் பள்ளிப் படிப்பைப் பிரச்சினையின்றித் தொடர முடியுமா? ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. அவை பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்கப்படும். 

காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்துக்காகப் பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றுவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். 

பள்ளி வேலை நேரம் மாற்றமா? அங்கன்வாடி எல்கேஜி, யூகேஜி மூடலா?- அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

அரசுப் பள்ளிகள், அங்கன்வாடிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. அங்குள்ள வகுப்புகள் தொடர்ந்து செயல்படும். வகுப்புகளை ஐசிடிஎஸ் துறைக்கு மாற்றி இருக்கிறோமே தவிர, எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை மூட மாட்டோம். 

தேர்வுகள் நடக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2300-க்கும் மேற்பட்ட நிலைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் புகார் உறுதி செய்யப்பட்டால், எந்தத் தனியார் பள்ளியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். 

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையைத் தொடங்குவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். தேர்வுகள் முடிந்த பிறகே மாணவர் சேர்க்கை தொடங்கும். வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வுக்கான அட்டவணையை முன்கூட்டியே வெளியிடுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்''.

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

அதேபோல நிலைமை கைமீறிச் சென்றால் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க அரசு தயங்காது என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதிபடத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Embed widget